Tuesday 13 October 2020

இந்தி சினிமா பாடல்கள்

ஐம்பது அறுபதுகளில் வெளியான பல இந்திப் படங்களில் தத்துவம் பக்தி சார்ந்த பாடல்கள் நிறைய இடம் பெற்றன. உலகில் கடவுளைத் தவிர யாரும் துணை இல்லை.உறவுகள் பொய்.பாவம் செய்தால் கெடுதல் வரும் புண்ணியம் செய்தால் நன்மை வரும்.ஏழைகளுக்கு உதவுங்கள். தர்மம் செய்யுங்கள். பணத்தை பெரிதாக நினைக்காதீர்கள்.எதுவும் நிலையற்றது. உங்கள் மாட மாளிகைகளை விட்டுச் செல்ல வேண்டும். எதுவும் உங்கள் கூட வராது.தாயானாலும் தந்தையென்றாலும் மனைவி என்றாலும் யாரும் உங்களுடன் உயிர் பிரியும் போது உடன் வர மாட்டார்கள். இரண்டு நாட்கள் அழுது மறந்து விடுவார்கள் என்றெல்லாம் போதனைகள் அந்தப் பாடல்களில் கொட்டிக் கிடக்கும்.எழுபதுகளுக்குப் பிறகு தத்துவம் பக்திப் பாடல்கள் குறைந்தன.காதலின் கொண்டாட்டமும் பிரிவின் துயரமும் பாடல்களில் இடம் பெற்றன. கடந்த மார்ச் முதல்தேதி மும்பையில் இருந்தபோது புறநகர்ப் பகுதியான கல்யாண்/உல்லாஸ்நகர் 5 பகுதியில் உள்ள ஒரு வீடியோ கடைக்குப் போனேன்.டிவிடிக்கள் விற்பனை செய்த கடைகள் எல்லாம் செல்போன் கடைகளாக மாறி விட்டன.எஞ்சிய ஓரிரு கடைகளில் அதுவும் ஒன்று. கடைக்காரரும் கையில் உள்ள சிடிக்களை விற்று காலி செய்து கடையை மூட முடிவு செய்துவிட்டார்.அவரிடம் மிகப்பெரிய புதையலாக பழைய இந்திப் படங்களும் பாடல்களின் வீடியோக்களும் இருந்தன. அப்பகுதி சிந்தி இன மக்கள் அதிகமாக வாழும் பகுதி.சிந்தி மக்களுக்கு இதைப் போன்ற பழைய பக்தி உபதேசப் பாடல்கள் மீது தீராத மோகம் உள்ளது.என் உடலிலும் சிந்தி ரத்தம் ஓடுவதால் எனக்கும் அவை மிகவும் பிடித்தமானவை.அந்த கடையில் வரும் சிந்தி வாடிக்கையாளர்கள் ஒரு பாடலுக்கு ஒரு படத்தை வாங்க விருப்பம் இல்லாமல் தங்களுக்குப் பிடித்த பக்தி,தத்துவப் பாடல்களை ரிக்கார்டிங் செய்து வாங்கிச் செல்வார்கள். இதில் ஊரை விட்டுப் போனவர்கள் இறந்து விட்டவர்கள் என பதிவு செய்த அரிய பாடல் தொகுப்புகளை வாங்காமல் விட்டுச் சென்றனர்.அப்படி ஒரு 35 டிவிடிக்கள் தலா 15 ரூபாய்க்கு தந்தார்.மொத்தமாக அள்ளி வந்தேன் அந்தப் பாடல்களின் புதையலை.முகமது ரஃபி,முகேஷ்,மன்னாடே,பிரதீப்,கிஷோர்குமார், லதா மங்கேஷ்வர் போன்ற என் அபிமான பாடகர்கள் பாடிய பல பாடல்களை பார்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிகிறது. மிகையான காட்சி அமைப்பு. செயற்கையான நடிப்பு என இன்று அந்தப் பாடல்களைக் கிண்டலடிப்பது சுலபம்.ஆனால் அந்த காலத்து அறமும் மெய்யியலும் அந்தப் பாடல்களில் உண்டு. உதாரணமாக ஒரு பாடலை குறிப்பிடுகிறேன்...ஏழைகளின் குரலைக் கேளுங்கள் இறைவன் உங்கள் குரலைக் கேட்பான் .ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் ஆதரவற்ற முதியோரிடம் கருணை காட்டுங்கள் என்று இந்தப் பாடல் கூறுகிறது. பாடலாசிரியர் ஷகில் பதாயூனி.இசையமைப்பாளர் ரவி பாடியவர்கள் முகமது ரஃபி,ஆஷா போன்ஸ்லே.படம் தஸ் லாக். ------------------------- ஜவஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கு காட்சிகளுடன் முகமது ரஃபியின் பாடல்.. கடைசி பகுதி ரஃபிக்கும் பொருந்தும் .. ஏன் சந்தனக் கட்டைகளை அடுக்கி வைக்கிறீர்கள். நான் எரிந்து மறைந்து விடும் உடல் அல்ல..சாம்பலாகி காற்றில் கரைத்து விடுங்கள். வாழ்க்கை யில் நீங்கள் தடுக்கி விழும் இடத்தில் உங்களை தாங்கிக் கொள்வேன்.. (பல்லவி என் குரலைக் கேளுங்கள்....) இந்த பாடல் ரஃபிக்காகவும் எழுதப்பட்டது போல இருக்கும். Kyon sanvaree hai ye chandan ki chitaa mere liye Main koi jism nahin hoon ke jalaaoge mujhe Raakh ke saath bikhar jaaoongaa main duniya mein Tum jahaan khaaoge thokar vaheen paaoge mujhe Har kadam par hai nae mod ka aagaaz suno Meri aawaaz sunopyaar ke raaz suno Maine ek phool jo seene pe sajaa rakhaa tha -------------------------------------------------------------

1 comment:

  1. பிடித்த புத்தகங்கள்… கவிதைகள்… கட்டுரைகள்… திரைப்படங்கள் வரிசையை போல உங்கள் ரசனைக்குள் வரும் ஹிந்தி திரைப்பட பாடல்கள் தொகுப்பை வெளியிடலாமா…. கூடவே தமிழில் அது மொழிமாற்றம் செய்யப்பட்ட விபரம் இருந்தால் நலம்…

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...