Saturday 10 October 2020

மீண்டும் மலர்கிறது செந்தூரம் இதழ்

எப்போதும் காலத்தை கடந்து முன்னோக்கி செல்பவனே கலைஞனாக நிலை பெறுகிறான்.காலத்தின் புறமுதுகுக்குப் பின்னே ஒளிபவனை காலம் கைகழுவி விடுகிறது.நாம் காலத்தின் முன் செல்வோம் செந்தூரம் எப்போதும் காலத்தின் முன்னேதான் சென்றது.சினிமாவை சிற்றிதழ்கள் தீண்டத் தகாததாக ஒதுக்கிய போது 1986ம் ஆண்டு சினிமா சிறப்பிதழை வெளியிட்டு சினிமாவுக்கும் தீவிர இலக்கிய வாசிப்புக்குமான இடைவெளியை குறைத்தது செந்தூரம். செக்ஸ் சாமியார் ரஜ்னீஸ் என்று தமிழ்ப் பத்திரிகைகள் எழுதிய போது கடந்த நூற்றாண்டில் மாபெரும் மேதையென ஓஷோவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது செந்தூரம். யாரும் தொடாத உச்சங்களை பல நூல்களை அறிமுகம் செய்தது.சார்த்தர்,ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஃபிராய்டு,காஃப்காவை தந்தது.எம்.ஜி. வல்லபன்,இயக்குனர் ஜெயபாரதி, இன்குலாப் பேட்டிகள் இடம் பெற்றன.கண் பார்வை மங்கி படிக்க சிரமப்பட்ட நிலையிலும் செந்தூரம் படிக்க ஆர்வம் குறையாமல் இருப்பதாக எழுதினார் அசோகமித்திரன். புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன் வரிசையில் உங்கள் பெயரை மறக்காமல் வைத்திருப்பேன் என்று கடிதம் எழுதினார் இயக்குனர் மகேந்திரன். இந்த நினைவுகளுடன் மீண்டும் செந்தூரம் மலர்கிறது .அது தொடர்பான விவரங்களை தெரிவிக்கிறேன்.உங்கள் உதவியும் ஊக்கமும்தான் இதன் ஆயுளை தீர்மானிக்கும். நல்ல தரமான படைப்புகளை தயக்கமின்றி அனுப்பி வைக்கலாம். கூடிய வரையில் பிரசுரம் செய்ய சிரத்தை எடுப்பேன்.ஆசிரியர் குழு சந்தா விவரம் ஒரு வாரத்தில் அறிவிக்கிறேன்.வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தொடர்புகளுக்கு jagdishshahri@gmail.com -------------------------------------------------------- செந்தூரம் இதழுக்கு சந்தா விவரம் கேட்டு 40 பேர் விசாரிக்க ஆகா எடுத்ததும் 40 இதழ்கள் உறுதி என நினைத்தேன்.ஆனால் இதுவரை 4 பேர் மட்டுமே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பி வைத்தனர்.மற்றவர்களும் அனுப்புவார்கள் என்று காத்திருக்கிறேன்.இதுவரை நான் யாரிடமும் பணத்துக்கு கையேந்தி நின்றதில்லை.மிக மிக நெருக்கடி மிகுந்த தருணங்களில் பட்டினி கூட இருந்திருக்கிறேன்..இது என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.சில உறவினர்களும் சில நண்பர்களும் தாமாக முன்வந்து உதவியதையும் நன்றியுடன் நினைவு கொள்கிறேன். என் இறுதிகாலத்தைப் பற்றியும் என் சேமிப்பு பற்றியும் கவலைப்படுவதில்லை உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா என்ற பட்டுக்கோட்டை யார் பாடலைத்தான் பின்பற்றி வருகிறேன்.உடலில் கடைசி அசைவு உள்ள வரை உழைத்து வாழ்வேன். அதற்காகவும் நான் யாரிடமும் எந்தவித எதிர்பார்ப்பும் கொண்டிருக்கவில்லை. கொரோனா நோயாளியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு செயற்கை சுவாசத்துடனும் மரண பயத்திலும் கிடந்த போது என் மனதுக்குள் ஓடிய ஒரே எண்ணம் இதிலிருந்து மீண்டு விட்டால் நிறைய எழுத வேண்டும் என்பதே .மீண்டு வந்த பின்பு முகநூலில் என் எழுத்தின் வேகத்தையும் வீரியத்தையும் நீங்கள் அறிவீர்கள். என் தரம் எது என்று என் 30 ஆண்டுகால இலக்கிய வாழ்க்கையும் சாட்சியாக உள்ளது. செந்தூரம் மீண்டும் தொடங்குவது குறித்து மிகுந்த தயக்கம் இருந்தது. ஆனாலும் துணிந்து விட்டேன். குறைந்தது 200 பேராவது சந்தா செலுத்தி அதன் ஆயுளை உறுதி செய்யுங்கள். வசதி படைத்த நண்பர்கள் விருப்பம் இருப்பின் கூடுதல் பணத்தை தாருங்கள். முதலும் கடைசியுமாக இந்த மடிப் பிச்சை கேட்கிறேன். நீங்கள் தரும் பணத்துக்கு தரமான இலக்கியப் படைப்புகளை திருப்பி தர நான் உறுதியளிக்கிறேன் அதற்கு தான் செந்தூரம். மீண்டும் என் வங்கி விவரத்தை தருகிறேன்.டிஜிட்டல் பிசாசு தீராத பசியுடன் காயசண்டிகை போல வாயைப் பிளந்து எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறது.மீண்டும் சிற்றிதழ் இயக்கத்தின் தொடர்ச்சியை செந்தூரம் மீட்டுத் தரும் என்று நம்புகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் ஊரில் சிற்றிதழ் தொடங்குங்கள் மாற்று இதழுக்கு அனுப்பி வையுங்கள். சிற்றிதழ் களின் முதுகில் ஏறி லட்சக்கணக்கில் சம்பாதித்த துரோகங்களை தோலுரித்து அவர்களை அலற வைப்போம். ------------------------- ெந்தூரம் அறிவிப்பு வந்ததும் உடனடியாக பலர் வாழ்த்து கூறி சந்தா விபரம் கேட்டனர்.விபரங்களை தந்து விட்டேன். நண்பர்கள் ஷேர் செய்யவும். K.Jagadish பெயரில் காசோலை மூலம் அல்லது வங்கிக்கணக்கில் செலுத்தலாம். 2021 ஓராண்டில் பத்து இதழ்கள் வரும்.கூட போனசாக ஒரு ஜம்போ சைஸ் சிறப்பிதழை 2022 ஜனவரியில் வெளியிட்டு சந்தாவை புதுப்பிவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறேன். அதிகளவில் பிரதிகள் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும். விளம்பரம் தரலாம். புத்தக விளம்பரம் கால்பக்கம் குறைந்தபட்ச கட்டணம் ₹ 100 மட்டுமே. மற்ற விளம்பரம் முழுப் பக்கம் ₹ 500 அரைப் பக்கம் ₹250.விளம்பரம் இமெயில் மூலம் அனுப்பவும். அவசியம் எனில் நேரிலும் பெற்றுக் கொள்ளப்படும். விவரம் இதோ... செந்தூரம் இதழுக்கு சந்தா ₹ 200 .பத்து இதழ்களுக்கானது. பணம் செலுத்தி உங்கள் பெயர் விலாசம் இமெயில் அல்லது தபால் கார்டில் தெரிவிக்கவும். விவரங்கள் இதோ..... K.Jagadish a/c no.0943101026443 Canara bank choolai ifsc code CNRB 0000943 email jagdishshahri@gmail.com. contact Address Srishti palace towers no.6 puraswalkam high road Chennai 600112

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...