Saturday 3 October 2020
உணவுப் பழக்கம்
பொதுவாக உணவில் எனக்கென சில பிரத்தியேக மனத் தடைகள் உண்டு. யாருடைய வீட்டுக்கு போனாலும் சாப்பிடத் தயங்குவேன். அல்லது குறைவாக சாப்பிடுவேன் .சுந்தர ராமசாமியுடன் காலை டிபன் சாப்பிட்டு இருக்கிறேன்.ஜெயமோகன் மாமியார் வீட்டில் பட்டுக்கோட்டையில் சாப்பிட்ட கறிசோறு நினைவில் ருசிக்கிறது. தருமபுரி,திருப்பத்தூர்,தக்கலையில் அவர் வீட்டில் சில வேளைகள் அருண்மொழி சமைத்த உணவும் சாப்பிட்டேன்.கோவை ஞானி மேட்டூர் அனுராதா பாலக்காடு நண்பர்கள் போன்றோரின் வீடுகளிலும் ஓரிரு வேளை உண்டதுண்டு. தனுஷ்கோடி ராமசாமியின் வீட்டில் தோசை சாப்பிட்டேன்.ஆனால் இவை விதிவிலக்குகள்.என் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் சாப்பிட மாட்டேன் இதை பலரும் குறையாக கூறுவார்கள். சுகன் போன்ற சில நண்பர்கள் சிலர் என் மனமறிந்து ருசியாக சாப்பிட ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்வார்கள். வெளியே அதிகமாக சாப்பிட்டும் பல வேளைகளில் உண்ண வழியில்லாமலும் இருந்ததன் விளைவு இது.இன்று விரும்பியதை உண்ண முடியும் வசதிகள் உள்ளன .என் மனைவியும் அருமையாக சமைப்பாள். ஆனால் உணவு குறைந்து விட்டது.எப்போதாவதுதான் முழுத் திருப்தி கிடைக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment