Tuesday 6 October 2020
எஸ்.பி.பி. ஜெமினி-முத்துராமன்
ஆயிரம் நிலவே வா - 8
எஸ்.பி.பி.யும் ஜெமினி கணேசனும்.
ஜெமினி கணேசனுக்கு சாந்தி நிலையத்தில் இயற்கை எனும் இளைய கன்னி என்ற இனிமையான டூயட்டை பாடிய எஸ்.பி.பி அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் மங்கையரில் மகராணி, ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு என்று இரண்டு பாடல்களைப் பாடினார்.
காவியத் தலைவி படத்தில் ஆரம்பம் இன்றே ஆகட்டும்.... என்ற பாடல் இடம் பெற்றது.
சுடரும் சூறாவளியும் படத்தில் அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடலும் இனிமையானது.
புன்னகை படத்தில் நாளை நாம் ஒரு ராஜாங்கம் அமைப்போம் என்ற பாடலை டி.எம்.எஸ் உடன் இணைந்து பாடினார் எஸ்.பி.பி.
நான் அவனில்லை படத்தில் ஹரேநந்தா பாடல் புகழ் பெற்றது.
----------------
எஸ்.பி.பியும் முத்துராமனும்
முத்துராமனுக்கும் சில இனிமையான பாடல்களை எஸ்.பி.பி பாடினார். எல்லோரும் நல்லவரே படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய படைத்தானே பிரம்ம தேவன் பாடல் வி.குமார் இசையில் பாடினார் எஸ்.பி.பி.
மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் விஜயபாஸ்கர் இசையில் கண்ணதாசன் எழுதிய சம்சாரம் என்பது வீணை பாடலை எஸ்.பி.பி பாடிய அழகை கேட்டுக் கொண்டே இருக்கலாம். என் வாழ்க்கை திறந்த ஏடு அது ஆசைக்கிளியின் கூடு....பல காதல் கவிதை பாடி பரிமாறும் இன்பங்கள் கோடி....மனம் குணம் ஒன்றான முல்லை போன்ற வரிகளை அவர் ரசித்து ரசித்து பாடி நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
பிரியா விடை படத்தில் வி.குமார் இசையில் ராஜா பாருங்க என்ற வாலியின் பாடல் அருமையானது. நடன அமைப்பும் வித்தியாசமானது. இது ஒரு இந்திப்படத்தின் ரீமேக் ஆகும்.
வாணி ராணியில் இரண்டு பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. முல்லைப்பூ பல்லக்கு பாடல் சிறப்பானது.
வைரம் படத்துக்குப் பிறகு சூரியகாந்தி படத்தில் ஜெயலலிதாவுடன் இணைந்து மீண்டும் பாடினார் எஸ்.பி.பி. நான் என்றால் அது அவளும் நானும்.... இப்பாடல் முத்துராமனுக்கும் பெருமை சேர்த்தது.
தூண்டில் மீன் படத்தில் வாழ்வில் சௌபாக்கியம் வந்தது என்று முத்துராமன் லட்சுமி பாடிய டூயட்டில் எஸ்.பி.பி. தன் அழகான குரலால் ஒரு வித அலங்காரம் செய்திருப்பார்...ஆகா...
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம் போன்ற வரிகள் உயிர்பெற்று நடனமாடுகின்றன...
------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment