Saturday 3 October 2020

எழுதும் கலை

எழுதும் கலை. எனது எழுத்து நடை சிறப்பாக இருப்பதாக நண்பர்கள் கூறுவார்கள்.எனது புத்தகங்களை வாசித்து நாஞ்சில் நாடன் தங்கர் பச்சான் அசோகமித்திரன் வல்லிக்கண்ணன் போன்ற பல எழுத்தாளர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டனர். நல்ல எழுத்து நடை என்பது வாசிப்பு மற்றும் பயிற்சியினால் மட்டும் அமைவதில்லை.என்னை விட பேரறிஞர் சிலர் நாலுவரி தெளிவாக எழுதத் தெரியாமல் தடுமாறுவதை கவனித்து வருகிறேன்.நல்ல எழுத்து நடை அமைய நல்ல மனமும் இருக்க வேண்டும் .ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் சிறுகதையை புதுமைப்பித்தன் எழுதிய சாபவிமோசனம் கதையுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதில் இறைவன் அவதாரமான ராமனே சீதையின் கற்பை சந்தேகித்து அக்னிப் பிரவேசம் செய்யச் சொல்வதை கண்டிக்கும் வகையில் பு.பி.எழுதியிருப்பார்.சீதை தூய்மையானவள் ஆனால் சந்தேகம் தீயில் இறங்கச் செய்தது.ஜே.கே.கதையில் கங்கா என்ற புனிதநதியின் பெயர் சூடிய பெண் ஒரு மழைநாளில் முகம் தெரியாத அந்நியனுடன் உணர்ச்சி வசப்பட்டு தன் கற்பை காருக்குள் இழந்து வீடு திரும்பி தாயிடம் சொல்லி அழுகிறாள்.தாய் ஒரு குடம் தண்ணீரை மகள் தலையிலே கொட்டி நீ சுத்தமாயிட்டே என்பாள்.சந்தேகம் நெருப்பில் தீக்குளிக்கச் செய்கிறது. ஆனால் தாய்மை தண்ணீர் ஊற்றி பாவத்தை சுத்தம் செய்கிறது.இதனை நான் எழுதும் போது தாய்மையின் கருணையுடன் ஒரு குடம் தண்ணீரைக் கொட்டியதாக எழுதினேன்.தாய்மையின் கருணை என் மனதுக்குள் இருந்தது. அதுதான் எழுத்தில் வந்தது .அதுதான் என் எழுத்துக் கலையாகவும் நடையாகவும் வெளிப்பட்டது.இதை ஜெயகாந்தனிடம் சொல்லும் போது அவரும் தாய்மையின் கருணையோடு என்ற வரியை மிகவும் ரசித்து தலையை அசைத்து புன்னகைத்தார்.எனக்கு அது பெருமிதமான ஒரு தருணம்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...