Friday 18 September 2015

ஈழப் பெண் கவிஞர் ஔவை கவிதைகள்

ஔவை-யின்
எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - கவிதைகள்
வெளியீடு காலச்சுவடு




வழக்கமான ஈழக்கவிதைகள் என நினைத்துப் படிக்க ஆரம்பித்தால் வேறு ஒரு தளத்தில் ஔவையின் கவிதைகள் பயணிப்பது புரிகிறது. காதல், காமம், அன்பு, பிறந்தமண் மீதான பாசம், புலம் பெயர்தலின் போது ஏற்படும் குற்ற உணர்வு போன்ற நுட்பமான பதிவுகளாலும் எளிய வரிகளாலும் ஒரு இனிய ஸ்நேகிதியைப் போல் தன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.
உண்மையாய் இரு அதுவே காதல் என்று ஓரிடத்தில் கூறும் இவர் இன்னொரு இடத்தில் அன்பால் நிரம்பியது என் இதயம். அன்பைத் தேடு பூவாய் மலர்வேன் என்கிறார்.
நூலிழை, சொல்லாமல் போகும் புதல்வர்கள், விஜிதரன் நினைவாக, இப்பொழுதே முத்தமிடு, ராஜினி உன்னிடம் என்ன குற்றம் கண்டனர்?,வீடு திரும்பிய என் மகன், கலியாணம், தாயின் குரல், என்னுடைய சிறிய மலர், மீள் வருகை 2 ,மீதமாக உள்ள வாழ்வு போன்ற கவிதைகள் ஆழமும் நுட்பமும் கொண்டவை. வாசக அனுபவத்தை மேன்மைப்படுத்துபவை.

தமிழ் இந்து நாளிதழ் 12-09-2015 இதழில் இப்போது படித்துக் கொண்டிருப்பது பகுதியில் அவ்வையின் கவிதை பற்றி எழுதிய குறிப்பையும் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்




No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...