Saturday 10 October 2020
கூட்டத்தில் தனித்திருத்தல்
கூட்டத்திலும் தனித்திருத்தல் ஒரு புகழ் மிக்க சூஃபி வாசகம்.நிறைய இந்தி சினிமா பாடல்களிலும் இது எடுத்தாளப் பட்டது.என் வாழ்க்கை முழுக்க இதை நான் அனுபவமாக உணர்ந்திருக்கிறேன்.உறவினர்கள் மிக நெருங்கிய நண்பர்கள் என்று யாருடனும் ஒட்டாமல் ஒரு விலகலுடன் தான் வாழ்கின்றேன்.நான் காணும் பல குழந்தைகள் மிகுந்த அன்பைப் பகிர்வதால் அவர்களிடம் மட்டும் என்னை மறந்து கரைந்து போய் விடுகிறேன். என் வாழ்க்கை கூடிக் களிப்பதல்ல. அது தனிமையைத் தழுவியது. இத்தனிமை பல நேரங்களில் வரமாக இருந்தாலும் சில நேரங்களில் வெண்தணலாக சுடுகின்றது. யாராவது என் தவம் கலைத்து என்னை ஆட்டம் போட வைக்க மாட்டார்களா என்ற எண்ணம் எழுகின்றது.நிகோஸ் கஸான்ட்சாகிஸ் ஜோர்பா என்றொரு நாவல் எழுதினார். இதில் தொழிலாளியான ஜோர்பா நடனமாடியபடி முதலாளியை யும் ஆட அழைப்பான். முதலில் கௌரவம் பார்த்து தயங்கும் முதலாளி மது மயக்கத்திலும் இசையிலும் தன்னை மறந்து ஆடத் தொடங்கியதாக அந்த நாவலில் எழுதினார். என் நடனங்களை நான் என் உள்ளத்தில் தான் ஆடியிருக்கிறேன்.நேசம் மிக்க ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல புத்தகம் ஒரு நல்ல திரைப்படம் ஓரு நல்ல பாடல் ஒரு உற்சாகமான விடுமுறை வாய்க்கும் போதுதான் நான் நடனத்தை உணர்கிறேன். எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..நான் வாழ யார் பாடுவார்.. என் பாடல் நான் பாட பலராடுவார்.. என்னோடு யார் ஆடுவார்..
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment