இரண்டாவது நாளாக புத்தகக் காட்சிக்குப் போனேன். ஜான்சி ராணியின் கவிதைத் தொகுப்பு வாங்கினேன். படித்துவிட்டு பதிவிடுகிறேன். அருமையான பெண் கவிகள் தோன்றும் காலம் இது. வீட்டின் சமையலறைகளில் இருந்து வெளியேறி சமூக பொதுவெளிகளில் பெண்கள் பங்கேற்கிறார்கள். கவிதை எழுதுவதும் அவர்களுக்கு அற்புதமாக வாய்த்துள்ளது. இன்னும் நிறைய பெண் படைப்பாளிகளை அடையாளம் காண வேண்டியிருக்கிறது.
புத்தகக் காட்சியில் எனது இரண்டு சினிமா புத்தகங்களை அம்ருதா பதிப்பகம். விருட்சம், தமிழினி, நியு புக் லேண்ட்ஸ் , பியூர் சினிமா , கருப்புப் பிரதிகள் உள்ளிட்ட அரங்குகளில் வாங்கிக் கொள்ளலாம். இரண்டு புத்தகங்களும் 225க்கு கிடைக்கும். மூன்றாவது புத்தகம் தமிழ் சினிமா இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகிறது.
சினிமா பற்றிய நிறைய நூல்களையும் பார்த்தேன். என்னைப் போல் இந்தி சினிமாக்களையும் ரசித்து சிலர் எழுதுகிறார்கள். காலச்சுவடுகண்ணன் இந்தி சினிமா பற்றி யாரும் எழுதுவதில்லை என்று கூறியதை புத்தகக் காட்சி பொய்யாக்கிவிடும் போல் தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க எனது கிடங்குத் தெரு நாவலை கேட்டு இரண்டு நண்பர்கள் என்னை அணுகினார்கள். தமிழினியில் பிரதிகள் இல்லையாம். என்னிடமும் நான்கைந்து பிரதிகள் மட்டுமே மிச்சமுள்ளன. அவற்றை இழந்துவிட விரும்பவில்லை. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பிரதி தர ஒப்புக் கொண்டேன். என்னை மதித்து வருபவர்களை நான் நிராகரிக்க முடியாது. என் புதிய புத்தகங்களை அந்த புதிய நண்பர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டனர். கிடங்குத்தெரு நாவல் ஒரு கிளாசிக் அந்தஸ்து பெற்று விட்டது. அதுவும் அதை விட மிகமிக பிரமாதமாகவும் நான்எழுதி வரும் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் நாவலையும் அடுத்த ஆண்டு புத்தகக் காட்சியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். யாரும் அழாமல் என் புதிய நாவலை படிக்க முடியாது .எழுதும்போது நானே பலமுறை அழுகிறேன். அத்தனை அற்புதம் அது.
நண்பர்கள் சூர்யராஜன், நிமோஷினி, வண்ணை வளவன் இன்று புத்தகக் காட்சிக்கு வருவதாக கூறினர். நண்பர் பா.உதயகண்ணன் எனது புத்தகங்கள் குறித்து சிறிய அறிமுக கூட்டம் ஒன்றை நடத்தலாம் என்றார்.
புத்தகக் காட்சியில் எனது இரண்டு சினிமா புத்தகங்களை அம்ருதா பதிப்பகம். விருட்சம், தமிழினி, நியு புக் லேண்ட்ஸ் , பியூர் சினிமா , கருப்புப் பிரதிகள் உள்ளிட்ட அரங்குகளில் வாங்கிக் கொள்ளலாம். இரண்டு புத்தகங்களும் 225க்கு கிடைக்கும். மூன்றாவது புத்தகம் தமிழ் சினிமா இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகிறது.
சினிமா பற்றிய நிறைய நூல்களையும் பார்த்தேன். என்னைப் போல் இந்தி சினிமாக்களையும் ரசித்து சிலர் எழுதுகிறார்கள். காலச்சுவடுகண்ணன் இந்தி சினிமா பற்றி யாரும் எழுதுவதில்லை என்று கூறியதை புத்தகக் காட்சி பொய்யாக்கிவிடும் போல் தோன்றுகிறது.
இது ஒருபுறமிருக்க எனது கிடங்குத் தெரு நாவலை கேட்டு இரண்டு நண்பர்கள் என்னை அணுகினார்கள். தமிழினியில் பிரதிகள் இல்லையாம். என்னிடமும் நான்கைந்து பிரதிகள் மட்டுமே மிச்சமுள்ளன. அவற்றை இழந்துவிட விரும்பவில்லை. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பிரதி தர ஒப்புக் கொண்டேன். என்னை மதித்து வருபவர்களை நான் நிராகரிக்க முடியாது. என் புதிய புத்தகங்களை அந்த புதிய நண்பர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டனர். கிடங்குத்தெரு நாவல் ஒரு கிளாசிக் அந்தஸ்து பெற்று விட்டது. அதுவும் அதை விட மிகமிக பிரமாதமாகவும் நான்எழுதி வரும் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் நாவலையும் அடுத்த ஆண்டு புத்தகக் காட்சியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். யாரும் அழாமல் என் புதிய நாவலை படிக்க முடியாது .எழுதும்போது நானே பலமுறை அழுகிறேன். அத்தனை அற்புதம் அது.
நண்பர்கள் சூர்யராஜன், நிமோஷினி, வண்ணை வளவன் இன்று புத்தகக் காட்சிக்கு வருவதாக கூறினர். நண்பர் பா.உதயகண்ணன் எனது புத்தகங்கள் குறித்து சிறிய அறிமுக கூட்டம் ஒன்றை நடத்தலாம் என்றார்.