Saturday 17 October 2020

இன்று வாசித்த புத்தகம் 1-2

1இன்று வாசித்த புத்தகம் ரூமியின் மேற்கோள்கள்.. 1.நீ எங்கே இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் முழுமையான அன்புடன் இரு. 2.உனக்குள் தோன்றும் வலிதான் இறைவனின் தூதுவராக உன்னிடம் வந்துள்ளது. 3.வானத்தைத் தொட்டுவிட ஒரேயொரு வழிதான் உள்ளது. அதை இதயத்தால் தொடுவது. 4 .உன்னை மிகச் சிறியவனாக எண்ணுவதை விட்டு விடு .உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சமே நீதான். 5.நீ கடலின் ஒரு துளியல்ல.கடலையே ஒரு துளிக்குள் வைத்திருப்பவன் நீ. 6.கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்து விடு.எழுந்து வராதே ...அங்கேயே இரு. 7.இறுகப் பற்றுதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் இடையிலான சமநிலைக்குப் பெயரே வாழ்க்கை. 8 .உன் ஆன்மாவுக்குள் ஒலிக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் கொடு. 9.ஒரு விளக்காக இரு.உயிர்காக்கும் படகாக இரு.காயமடைந்த ஓர் உள்ளத்தை ஆற்றுப்படுத்து. 10.நிலவையே பார்த்து நின்ற போது நான் என் தொப்பியை இழந்து விட்டேன்.பின்னர் என் மனதும் கூட களவு போனது. தமிழாக்கம்.. செந்தூரம் ஜெகதீஷ். ------------------------------------ 2 மனித மனம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள நேரத்திலும் அதன் ஒரு பகுதி கனவு காண்கிறது. கனவுகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டனர் . யாரும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. நனவிலி மனத்தின் உள்ளார்ந்த தூண்டுதல் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்றார் சிக்மண்ட் ஃபிராய்ட்.பச்சை நிற ஆடையணிந்த ஒரு பெண் மீது ஆசைப்பட்டு அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த மனிதன் பச்சை நிறம் மீது தீராத இச்சை கொள்கிறான். அவனது நிறைவேறாத விருப்பம் அவன் கனவுகளில் பிரதிபலிக்கும் என்றும் ஃபிராய்ட் கூறுகிறார்.ஒரு பழைய புத்தகக் கடையில் ₹ 20 க்கு இந்த புத்தகத்தை வாங்கி வந்தேன். இதை படிக்கிறேன் படிக்கிறேன் படித்து கொண்டே இருக்கிறேன். முழுவதும் படிப்பேனா என்று தெரியவில்லை.கனவுகளின் பலனை இப்புத்தகம் விளக்குகிறது.இந்த நூலுக்கு ஆசிரியர் இல்லை. லண்டன் பதிப்பகம் ஒன்று வெளியிட்டுள்ளது.கனவுகளின் பலன்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் உளவியல் அறிஞர்கள் மேற்கோள்களையும் இந்த புத்தகம் தரவில்லை ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தால்தான் படிக்க முடியும்.ஒவ்வொரு நாளும் உறக்கத்தில் வந்த கனவின் ஓர் இழையைப் பிடித்து அதன் பலனை சோதிக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்று திருப்பதி கோவிலுக்கு செல்வது போல ஒரு கனவு.பல மாதங்களாக கொரோனாவால் திருப்பதி செல்ல விரும்பி போக முடியவில்லை. அந்த நிறைவேறாத விருப்பம் என் கனவில் வந்தது. இதற்கு இப் புத்தகம் என்ன விளக்கம் தரும் என்பதை அறிய worshipper என்ற பத்தியைப் பார்த்தேன்.என் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிலரை சந்திப்பேன் என்று பலன் சொன்னது. யாராவது எனக்கு சொத்து எழுதி வைக்க விரும்பினாலோ நோபல் பரிசு கொடுக்க விரும்பினாலோ இதை நம்பலாம் . ஆனால் கனவில் விபத்தைக் கண்டால் என்ன பலன் என்று இப்புத்தகம் சொல்வதை ஏற்கலாம்.கனவில் விபத்தைக் கண்டால் அது ஒரு எச்சரிக்கை. 24 மணி நேரம் கார்,இருசக்கர வாகனம்,பேருந்து,ரயில், விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும். சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.கத்தி பிளேடு போன்ற கூரிய ஆயுதங்களை கையாளக் கூடாது என்று கூறுகிறது இப்புத்தகம். இதனை பின்பற்றி வாழ்வது சரியாக இருக்கும் அல்லவா?

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...