Wednesday 28 May 2014

கோச்சடையான்

அபிராமி 7 ஸ்டார் திரையரங்கில் கோச்சடையான் படம் பார்த்தேன்.முதலில் சில நிமிடங்கள் பிரமிக்க வைத்தது 3 டி தொழில்நுட்பம். ஆனால் படம் பெரும் ஏமாற்றம். ரஜினிமாதிரி ஒரு பொம்மை வந்து ஆடுகிறது, பன்ச் டயலாக் பேசுகிறது, சண்டை போடுகிறது.நாகேஷ், தீபிகா படுகோனே, ஜாக்கி சராப், நாசர் என நிறைய பொம்மைகள் வந்து வந்து போகின்றன. சோபனாவின் பொம்மை லோ -ஹிப் புடவை மட்டும் நிஜம் போல கிளர்ச்சியைத் தருகிறது.சினிமாவே பொம்மை எனும் போது இது பொம்மையின் பொம்மை என்று சொல்லத் தோன்றுகிறது. நான் ஒன்றும் தொழில்நுட்ப மாயங்களுக்கு எதிரியல்ல. இந்த தொழில்நுட்பத்தில் மகாபாரதமோ ராமாயணமோ எடுக்கலாம். அனுமானையும் கண்ணனையும் அப்படி பிரம்மாண்ட ரூபத்தில் பார்க்க ஆசைதான். ஆனால் ரஜினி.....
எஜமான் படத்தில் நிலவே முகம் காட்டு என மீனாவை ஒரு தாய் போல மடியில் தூங்க வைத்து பாடுவாரே அந்த உணர்வு மிஸ்ஸிங்.அதுவல்லவா எங்கள் ரஜினிகாந்த்.
ஹீரோவை சூப்பர் ஹீரோவாக காட்டியே அழிச்சுட்டாங்கப்பா

அந்த ரஜினியைத்தான் நானும் ரசிகர்களும் காண விரும்புகிறோம். வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான், சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் உழைப்பும் பல்லாயிரம் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையும் வீணாகிப் போச்சே என்ற வருத்தத்துடன் தான் படத்தை விட்டு வெளியே வந்தேன்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...