Thursday 18 June 2015

அரிதினும் அரிது கேள்- 7 நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா.......

நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா...... செந்தூரம் ஜெகதீஷ் ஒரு பெண்ணிடத்தில் காதலைக் கூறும் பாடல் இது. ஆண் தனது காதலை பெண்ணிடம் கூறும் போது அது கவிதையாக மலர்கிறது. கண்ணதாசன்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்-விஸ்வநாதன் காம்பினேஷனில் பல அற்புதமான பாடல்கள் பிறந்துள்ளன. அவர்கள் படத்தில் அங்கும் இங்கும் பாதை உண்டு, ஜூனியர் ஜூனியர் இருமனம் கொண்ட திருமண வாழ்வில், தில்லுமுல்லு படத்தில் ராகங்கள் பதினாறு, நிழல் நிஜமாகிறது படத்தில் கம்பன் ஏமாந்தான், அவள் ஒரு தொடர்கதையில் கடவுள் அமைத்து வைத்த மேடை, நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊரு சிங்காரி, காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல்மனம் நோகும் வரை, ... என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....அதில் குறிப்பாக கே.பாலசந்தர் படங்களில் இந்த காம்பினேஷன் சிறப்பான கவனம் பெற்றது. அதே போன்று ஜேசுதாஸ்-விஸ்வநாதன்- கண்ணதாசன் காம்பினேஷனையும் சொல்லலாம், எஸ்.பி.பி. பாடிய கண்ணதாசன் பாடல்களில் மெல்லிசை மன்னர் இசையமைத்த இனிய பாடல் ஒன்று பட்டினப்பிரவேசம் படத்தில் இடம்பெற்றுள்ளது.படத்தில் இப்பாடலுக்கு நடித்தவர்கள் நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் சிவச்சந்திரன், நடிகை ஸ்வர்ணா. மற்றும் ஒரு வயலின் பாலசந்தர் படங்களில் அஃறிணைகளும் பாத்திரமாக இடம்பெறுவதுண்டு. புதுப்புது அர்த்தங்களில் நடிகர்கள் டைட்டிலில் இவர்களுடன் சாலிடர் டிவி என்று குறிப்பிட்டிருப்பாா்.அவர்கள் படத்தில் அற்புதமான ஒரு பொம்மை நடித்திருக்கும். மூன்று முடிச்சு படத்தில் கடிகாரம், அரங்கேற்றம் படத்தில் கொட்டு மேளம். மனிதர்களால் வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகளை அஃறிணைகள் மூலமாக வெளிப்படுத்துவது பாலசந்தரின் உத்தி வயலின் வாசித்தபடி ஸ்வர்ணா தனது சோகம் தேங்கிய கண்களால் சிவாவைப் பார்க்க சிவசந்திரன் எஸ்பி.பியின் குரலில் பாடும் இந்தப் பாடல் காலம் கடந்து நிற்கும் மெல்லிசை மன்னரின் முத்துக்களில் ஒன்று வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலை தேன் நிலா எனும் நிலா என் தேவிியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா மீனில்லாத விண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலாஎண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா.. இந்தப் பாடல் லா லா லா லா என்ற பண்ணோடு நிலா நிலா என்றே முடியும். பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன் அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் என தேன் தேன் எனும் முடியும் பாடலையும் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து வயலினும் பாடியுள்ளதால் இப்பாடலை சோலோ என்றும் சொல்லலாம் டூயட் என்றும் சொல்லலாம். எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன் என்ற இறுதி வரி ஒரு முத்தாய்ப்பு பல்லவியும் முத்தாய்ப்பும் தான் ஒரு மகத்தான பாடலை உருவாக்குகிறது.

Sunday 14 June 2015

அரிதினும் அரிது கேள் 6 - வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண......

அரிதினும் அரிது கேள்..6

வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண......

சிவாஜி கணசனும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக பாசமலரில் நடித்து ரசிகர்களின் கைக்குட்டைகளையும் முந்தானைகளையும் ஈரம் பிழிய வைத்தவர்கள். இவர்கள் காதலர்களாகவும் கணவன் மனைவியாகவும் சில படங்களில் நடித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள அப்போதைய ரசிகர்களுக்கு இயலவில்லை போலும்.அதனால்தான் பிராப்தம் என்ற நல்ல படம் ஒன்று ரசிகர்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது.
திருவருட்செல்வர் படத்தில் ஆதி சிவன் தாழ் பணிந்து நலம் பெறுவோமே எங்கள் ஆதிசக்தி நாயகியின் அருள் பெறுவோமே என்ற பாடலை அவசியம் பாருங்கள் நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்ற பட்டங்கள் சும்மா தரப்படவில்லை என்பது நிரூபணமாகும். இருவரும் Such a lovely pair.
பிராப்தம் இந்திப் படமான மிலனின் தமிழ் ரீமேக்.இப்படத்தை இயக்கியவரும் சாவித்திரிதான்.
இந்தியில் சுனில்தத்தும் நூதனும் நடித்த இப்படம் பல ஜென்மங்களைத் தாண்டி சேரும் காதலர்களைப் பற்றியது.தமிழில் தனுஷ் நடித்து வெளியான அனேகன் அதே போன்ற படம்தான்.
இந்தியில் எல்.வி.பிரசாத் தயாரித்த இப்படம் 1967ம் ஆண்டில் வெளியானது.சுப்பாராவ் இயக்கியது .இசை லட்சுமிகாந்த் பியாரேலால். இப்படத்தில் முகேஷ்-லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
ஹம் தும் யுக் யுக் கே ஏ கீத் மிலன்கே காத்தே ரஹேங்கே என்ற டூயட் பாடல் தமிழில் சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்று இடம் பெற்றது. தமிழில் பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள் டி.எம். எஸ். -பி.சுசிலா

பகவத் கீதை சொன்னது போல் ஆன்மா வேறு பிறவி எடுத்து வருகிறது. ஆன்மா அழிவற்றது. எனவே சொந்தம் தொடர்கதையாகிறது

சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடிச் சென்று இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது...

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான்காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

நிலத்தில் படரும் தளிர்ப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நீலத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன்வண்ணக் கலசம்
பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பது சுகம்தானோ

என்று கவித்துவ நடையுடன் மனதுக்குள் வெள்ளிய நிலவின் பன்னீரைத் தெளித்துச் செல்லும் பாடல் இது. பாடியவர்களின் குரல்கள் தித்திக்கின்றன. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை கொண்டு துடைக்கும் ஒரு தம்பதியின் அந்நியோன்யமும் அன்பும் நம்மை பரவசப்படுத்துகின்றன.
இதே படத்தில் வேறு சில இனிமையான பாடல்களும் உள்ளன. இந்தியில் சாவன்கா மஹினா என முகேஷ்-லதா பாடிய பாடல் தமிழில் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்று டி.எம்.எஸ்- சுசிலா குரலில் ஒலித்தது. இதே போல் தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா என்ற பாடலில் டி.எம்.எஸ் நம்மை உருக வைத்திருப்பார்
மற்றொரு மகத்தான பாடலும் இப்படத்தில் உண்டு. நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறிச்ச ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் பொலிவுண்டு...நேரம் போனால் வாசம் போகும்....வாசம் போனாலும் பாசம் போகாது என்று டி.எம்.எஸ் பாடிய மகத்தான பாடல் இது.

எந்தக் கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில் தான்

என்ற மிகப்பெரிய தரிசனத்தை வழங்கிச் செல்லும் இப்பாடலின் வரி ஒன்றை கரையினில் ஆடும் நாணலே நீ நதியிடம் சொந்தம் தேடுகிறாய் என, கே.பாலசந்தரின் அவர்கள் படத்திலும் கண்ணதாசன் பயன்படுத்தினார்.
பட்டும் பூவும் கட்டி வைத்த பச்சைக்கிளி ஒன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு
என தனது காதலியை இன்னொருவருக்கு தாரை வார்க்கும் காதல் தவிப்பை கவியரசர் வடித்திருக்கிறார்.

பிராப்தம் படத்தின் சுமாரான பதிப்பு டிவிடி ஒன்று ஜிசி என்ற கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் வெளியான படம் இன்று பார்க்க முடியாததாக இருப்பினும் இதன் பாடல்கள் இன்றும் மறுஜென்மம் எடுத்துள்ளன. சாரேகாமாவிலும் யூடியூப்பிலும் இந்தப் பாடல்களைக் கேட்கலாம்.....

பாடியவர்கள் டி.எம். எஸ். -பி.சுசிலா

பகவத் கீதை சொன்னது போல் ஆன்மா வேறு பிறவி எடுத்து வருகிறது. ஆன்மா அழிவற்றது. எனவே சொந்தம் தொடர்கதையாகிறது

சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடிச் சென்று இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது...

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான்காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

நிலத்தில் படரும் தளிர்ப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நீலத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன்வண்ணக் கலசம்
பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பது சுகம்தானோ

என்று கவித்துவ நடையுடன் மனதுக்குள் வெள்ளிய நிலவின் பன்னீரைத் தெளித்துச் செல்லும் பாடல் இது. பாடியவர்களின் குரல்கள் தித்திக்கின்றன. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை கொண்டு துடைக்கும் ஒரு தம்பதியின் அந்நியோன்யமும் அன்பும் நம்மை பரவசப்படுத்துகின்றன.
இதே படத்தில் வேறு சில இனிமையான பாடல்களும் உள்ளன. இந்தியில் சாவன்கா மஹினா என முகேஷ்-லதா பாடிய பாடல் தமிழில் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்று டி.எம்.எஸ்- சுசிலா குரலில் ஒலித்தது. இதே போல் தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா என்ற பாடலில் டி.எம்.எஸ் நம்மை உருக வைத்திருப்பார்
மற்றொரு மகத்தான பாடலும் இப்படத்தில் உண்டு. நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறிச்ச ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் பொலிவுண்டு...நேரம் போனால் வாசம் போகும்....வாசம் போனாலும் பாசம் போகாது என்று டி.எம்.எஸ் பாடிய மகத்தான பாடல் இது.

எந்தக் கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில் தான்

என்ற மிகப்பெரிய தரிசனத்தை வழங்கிச் செல்லும் இப்பாடலின் வரி ஒன்றை கரையினில் ஆடும் நாணலே நீ நதியிடம் சொந்தம் தேடுகிறாய் என, கே.பாலசந்தரின் அவர்கள் படத்திலும் கண்ணதாசன் பயன்படுத்தினார்.
பட்டும் பூவும் கட்டி வைத்த பச்சைக்கிளி ஒன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு
என தனது காதலியை இன்னொருவருக்கு தாரை வார்க்கும் காதல் தவிப்பை கவியரசர் வடித்திருக்கிறார்.

பிராப்தம் படத்தின் சுமாரான பதிப்பு ஒன்று அண்மையில் ஜிசி என்ற கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் வெளியான படம் இன்று பார்க்க முடியாததாக இருப்பினும் இதன் பாடல்கள் இன்றும் மறுஜென்மம் எடுத்துள்ளன.

Sunday 7 June 2015

அஞ்சலி- சுந்தர சுகன்

சாதாரணமானவர்களின் சிற்றிதழ் ஆசிரியர் சுகன் 5.6.2015 அன்று தமது 50வது பிறந்தநாளின் அதிகாலை 4 மணிக்கு மறைந்தார்.
                                                                                                     
கிட்டதட்ட 20 ஆண்டுகளாக நீடித்த சுகனுடான நட்பில் பல நெகிழ்ச்சியான தருணங்களை இருவரும் கண்டிருக்கிறோம். இருவருக்குமே சிற்றிதழ் இயக்கத்தின் மீதான பற்று,திரைப்படத்தின் மீதான ஆர்வம், இலக்கிய ஆளுமைகள் மீதான மதிப்பு சம அளவில் இருந்தது. சுகன் இதழில் எனது 50க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் பிரசுரித்தார். கட்டாயப்படுத்தி கொடுத்தால்தான் சந்தாவையே வாங்கிக் கொள்வார்.பணம் மீது அவருக்கு பற்று இருந்ததில்லை. கடந்த 2008ம் ஆண்டு கலைஞர் செய்திகள் சேனலில் சுகனின் வாழ்க்கை, இலக்கியம், சிற்றிதழ் ஆகியவற்றை புதையல் என்ற பெயரில் ஆவணப்படுத்தி அதன் வீடியோ பிரதியை அவரிடம் கொடுத்திருக்கிறேன்.
சுகன் எனக்கு எனது நாவலான கிடங்குத்தெருவுக்கு தஞ்சைப்ரகாஷ் இலக்கிய விருது கிடைக்க காரணமாக இருந்திருக்கிறார். 
பலமுறை என் வீட்டுக்கு வந்துள்ளார். அய்யா அய்யா என பழைமைத்தன்மை மாறாத பேச்சால் பல புதிய விஷயங்களை என்னோடு பேசுவார். இயக்குனர் கர்ணனின் கௌபாய் பாணி தமிழ்ப்படங்கள் பற்றி ஒரு பால்ய கால ஈடுபாடு அவரிடத்தில் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. எனக்கும் அது உண்டு.
சென்னை மெரீனாவில் பாரதி சிலை அருகே  7.6.2015ல் சுகனுக்கு அஞ்சலி செலுத்த சுமார் 40 நண்பர்கள் திரண்டனர். நானும் கலந்துக் கொண்டேன். தோழர் கலை மணிமுடி சுகனின் குடும்பம் அவர் சேமித்த 7 லட்சம் ரூபாயையும் கடைசியில் தமது மருத்துவ சிகிச்சைக்கு செலவழித்து குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுச் சென்ற தகவலை தெரிவித்தார். கடைசி காலத்தில் அவர் குடும்பம் அவருக்கு ஏற்பட்ட கட்டியை அறுவை சிகிச்சை செய்ய, அது செப்டிக் ஆகி நீரிழிவு நோய் உள்ள சுகனின் உயிரைப்பறித்த துன்பக்கதையை மு.முருகேஷ் விளக்கினார்.சிசுசல்லப்பா காலம்தொட்டே சிற்றிதழ் நடத்தியவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை எங்கேயாவது ஓரிடத்தில் உடைத்து தகர்க்க வேண்டும் என்று நண்பர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். சுகனின் மனைவி சகோதரி சௌந்தரவதனாவுக்கு அரசுப்பணி பெற்றுத் தருவது , சுகனின் மகன், மகள் ஆகியோரை படிக்க வைக்க கல்விச்செலவுக்கான நிதியை திரட்டுவது போன்ற திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. எடிட்டர் லெனின் சார் 50 ஆயிரம் ரூபாய் காசோலையை கொடுத்து இந்த திட்டத்தை தொடக்கி வைத்தார்.சுமார் ஒருலட்ச ரூபாய் நிதியை திரட்ட இலக்கு வைத்துள்ளதாக மணிமுடி கூறினார்.

ஒரு லட்சம் ரூபாயால் ஒரு குடும்பம் வாழ்ந்துவிடாது என்றாலும் இந்த முயற்சி நல்ல முயற்சிதான். யாருமில்லாமல் ஒரு சிற்றிதழாளர் மறைவதில்லை. அவரது வாசகர்களும் படைப்பாளர்களும்தான் அவரது குடும்பம் என்று சுகன் மூலம் ஒரு புதிய மரபு உருவாக வேண்டும். நாளை நான் இறந்தாலும் எனக்கும் இதே கதிதான் என்பதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்த்தால் நல்லது

சுகனில் எழுதுவதை பெருமையாகவே நினைத்திருக்கிறேன். இது போன்ற பத்திரிகைகளில் எழுதினால் அரைடவுசர் போட்ட படைப்பாளி என பெயர் கிடைக்கும் என கிண்டலடித்த சில ஜாம்பவான்களை நான் நிராகரித்து இருக்கிறேன். அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சிற்றிதழாளரின் வலியும் வரலாறும் தெரியாது. அதுவும் சுகனுக்கு அவரது குடும்பமே துணை நின்று இதழ் நடத்த உதவியிருக்கிறது. அந்த குடும்பத்திற்கு உதவும் எண்ணம் நல்ல விஷயம்தான். இந்த குடும்ப நிதி தொடர்பாக எடிட்டர் லெனின், பாவெல் , கவிஞர் இளம்பிறை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதே பகுதியில் அதன் தொடர்பு எண்ணைத் தெரிவிக்கிறேன்.நண்பர்கள் யாவரும் இயன்றவரை உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday 3 June 2015

அரிதினும் அரிதுகேள் 5 காதலின் பொன் வீதியில்.....





காதலின் பொன் வீதியில்......
1973 ல் வெளியான பூக்காரி படத்தில் வரும் பாடல்தான் இது. மு.க.முத்து மஞ்சுளா, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். பாடல் பஞ்சு அருணாச்சலம் இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். டி.எம்.எஸ், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியது.
காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான்
கண்ணோடு உறவு கொண்டேன்
காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்-என்
கண்ணோடு ஒருத்தி வந்தாள்.
திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமை இல்லை பகல் இரவுமில்லை .நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
இரு பொன் மலரில் ஒன்று என் மனதாம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல
என் மனதினிலே உன் நினைவுகளே, அதை அள்ளி வந்தேன் உனக்காக...
விழியோரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களில் பிறப்பதுதான் கவியாகும்.
அந்தக் கவிதைகளில் உள்ள பொருள் அறிந்து அதை சுவைப்பதுதான் கலையாகும்
அந்தக் கலைகளிலும் பல புதுமையுண்டு அதைப் பழகுவதே பேரின்பம்
இந்த வாசலில் ஒரு காவலில்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம்....
நடனத்தில் தேர்ச்சி பெற்ற நடிகைகளில் ஒருவரான வெண்ணிற ஆடை நிர்மலாவின் முக பாவங்களும் கை விரல் அசைவுகளும் உடல் மொழியும் பாடலை ரசிக்க வைக்கின்றன. மு.க.முத்து எம்ஜிஆரைப் போல நடை உடை பாவனைகளுடன் இருப்பார். ஆனாலும் நகல் நகல்தானே.
மு,க.முத்து நல்ல குரல் வளம் உள்ளவர்தான். நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா என்று அணையா விளக்கில் அவர் பாடிய பாடல் மிகவும் பிடித்தமான பாட்டுதான். சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க என்றும் பாடியிருப்பார். ஆனால் இந்தப்பாடலில் டி.எம்.எஸ் குரலில் மு.க.முத்து பாடியிருக்கிறார்.
டிஎம்.எஸ் எம்ஜிஆர், சிவாஜி என இருவருக்கும் மாறி மாறி குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது....மு.க.முத்துவுக்காக அவர் அதிகமாக குரலை மாற்றிக்கொள்ளவில்லை. எம்ஜிஆர் பாணியிலேயே பாடியிருக்கிறார். பாடலாசிரியரும் எம்ஜிஆர் பாட்டு மாதிரியே எழுதியிருப்பார். எம்.எஸ்.வியும் எம்ஜிஆர் படம் டூயட் பாடல்போலத்தான் இசையமைத்திருப்பார். மஞ்சுளா எம்ஜிஆரின் ரிக்சாக்காரன் படத்தில் அறிமுகமானவர்தான்.
இப்படத்தில் முகமுத்துவை மஞ்சுளா காதலிப்பார் ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலாதான் முகமுத்துவின் காதலி, இப்பாடல் மஞ்சுளா பின்னகர்ந்து போக வெண்ணிற ஆடை நிர்மலா முன்னோக்கி வர தொடங்கும்.
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான் என்ற இனிமையான பல்லவியை பஞ்சு அருணாச்சலம் தந்திருக்கிறார். இன்றைய சினிமா பாடலாசிரியர்களுக்கு பாடலின் முதல்வரியையே படைக்கத் தெரியவில்லை. அதனால்தான் பாடல்களும் நிலைப்பதில்லை. பாடலின் முதல் வரியை அமைப்பது தனிக்கலை. கண்ணதாசனும் வாலியும் வைரமுத்துவும் அதில் தங்கள் திறமையை காட்டியுள்ளனர். மனதில் முதலில் பதிவது இந்த முதல் வரிதான். இதை ரசிகன் முணுமுணுத்தால்தான் பாடல் ஹிட்
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை என்ற வரியும் பொருள் பொதிந்தது. இது போன்ற வரிகளை புதுக்கவிதையின் தன்மையுடன் படைத்திருப்பார்.,
இழந்த காதலின் துயரத்துடன் ( மஞ்சுளா) அடைந்த காலத்தின் மகிழ்ச்சியை(வெண்ணிற ஆடை நிர்மலா) ஒருசேர தரும் இந்தப்பாடல் துயரமான டூயட் பாடலா அல்லது மகிழ்ச்சியான டூயட் பாடலா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். எஸ்.ஜானகியின் ஹம்மிங்கை கேட்டுப் பார்த்து சொல்லுங்க











Tuesday 2 June 2015

அரிதினும் அரிது கேள் 4 - உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்

உன்னை நான் பார்த்தது.......

சிவகுமார் கதாநாயகனாகவும் கமல்ஹாசன் இரண்டாம் நாயகனாகவும் நடித்த படம் பட்டிக்காட்டு ராஜா. சிவகுமாரின் முறைப்பெண் படாபட் ஜெயலட்சுமியை ஏமாற்றி விடுவார் கமல். அவர் ஸ்ரீப்ரியாவிடம் மயங்கிக் கிடப்பார். ஆனால் ஸ்ரீப்ரியா கமலை ஏமாற்றி விட்டு வசதியான இன்னொருவனுடன் சென்றுவிடுவார். கமல் மனம் திருந்தி படாபட்டை மணந்து கொள்வார். இதனிடையே முறைப்பெண்ணை மணக்க பட்டணம் வரும் சிவகுமார் அவரை கமலுடன் சேர்த்து வைத்து ஜெயசுதாவை காதலிப்பார்



இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருப்பார். இசை சங்கர்-கணேஷ்
என்னோடு வந்தான் கண்ணோடு கலந்தான், கண்ணன் யாரடி கள்வன் யாரடி பார்த்து சொல்லடி போன்ற இனிமையான பாடல்கள் இடம் பெற்றன. இதில் உன்னை நான் பார்த்தது என்று ஸ்ரீப்ரியாவுக்காக கமல் பாடும் பாடல் செம ஹிட்.
பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்


உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன்.
கண் உறங்காமலே வாடுவேன்

அன்று ஒருபாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கைவளையோசை கடல் கொஞ்சும் அலை ஓசையோ
அதை செவியார நான் கேட்க வரவில்லையோ

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடிமீது குடியேற்றி முத்தாடவோ...

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா


இந்தப்பாடலில் நடுவே பபப்ப்பா என எஸ்.பி.பி ஹம்மிங் கொடுப்பார் அது மிகவும் கிக்காக இப்பாடலுக்கு அழகூட்டியது. பாதி முலைகள் தெரிய தொடைக்கு மேல் கிட்ட தட்ட உள்ளாடை தெரியும் கவுன் அணிந்து ஸ்ரீப்ரியா மிகவும் இளமையாக இருப்பார். கமலும் மிகவும் ஒல்லியாக பெரிய கிருதா மீசையுடன் இருப்பார்.

இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போதும் எனக்குப் பிடித்த பாடலாக இது இருக்கிறது. அற்புதமான மெட்டு இனிய குரல் வாலியின் சுருக் சுருக் வரிகள் என பாடலில் இன்றும் ஸ்ரீபிரியாவின் மார்புகளைப் போல இளமை ததும்பி வழிகிறது.


இப்படத்தின் டிவிடி கிடைப்பதில்லை. மோசர் பேர் வெளியிட்ட மங்கலான பிரிண்ட் ஒன்று என்னிடம் உள்ளது. அதைவிட சாரிகமபா நிறுவனம் வெளியிட்ட சங்கர் கணேஷ் ஹிட்ஸ் மற்றும் எஸ்.பி.பி ஹிட்ஸ், வாலி ஹிட்ஸ் போன்றவற்றில் இப்பாடலின் இசையை ரசிக்கலாம்.

எம்பி 3 வடிவில் துல்லியமான ஆடியோவுடன் அது உள்ளது.
இப்டத்தை யாராவது மறுபதிப்பு செய்து வெளியிட்டால் பல நல்ல விஷயங்களை மீட்கலாம்
குறிப்பாக பாடல்கள்

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...