Saturday 3 October 2020
எஸ்.பி.பி.யும் நடிகர் திலகமும்
ஆயிரம் நிலவே வா 3 . எஸ்.பி.பி.யும் நடிகர் திலகமும்
பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆரால் அறிமுகமான போதும் அவரை விட சிவாஜி க்குத்தான் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.MSV சுமதி என் சுந்தரியில் சிவாஜிக்கு பொட்டு வைத்த முகமோ என்று பாட வைத்தார்.பட்டி தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலித்தது. இன்றளவும் மிகச்சிறந்த டூயட் பாடலாக இது இருக்கிறது. வசந்தா என்ற பாடகி ஹம்மிங் பாடினார். தொடர்ந்து சிவாஜிக்கு எஸ்.பி.பாடினார். யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே என கௌரவம் படத்தில் பாடியதும் இனிமையானது.திரிசூலம் படத்தில் காதல் ராணி கட்டில் இருக்கு பாடலைப் பாடிய எஸ்.பி.பி. தன் உடன் பிறவா சகோதரன் போல பழகிய கே.ஜே.ஜேசுதாசுடன் இரண்டு கைகள் நான்கானால் என்ற அற்புதமான பாடலைப் பாடினார்.கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம் என்ற வரிக்கு எஸ்.பி.பி தந்த அழுத்தமான உச்சரிப்பு அருமை .சிவகாமியின் செல்வன் படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது என காதல் ரசம் சொட்ட சொட்ட பாடினார் எஸ்.பி.பி.இந்திப்படமான ஆராதனாவின் ரீமேக்கான இப்படத்தில் இப்பாடல் காட்சி முக்கியமானது.இந்தியில் கிஷோர்குமார் பாடிய ரூப் தேரா மஸ்தானா பாட்டைத்தான் தமிழில் பாடினார் எஸ்.பி.பி. ராஜா படத்தில் இரண்டில் ஒன்று பாடலும் புகழ் பெற்றது. வாணி ராணி குலமா குணமா சத்யம் நாம் பிறந்த மண் அண்ணன் ஒரு கோவில் ஜஸ்டிஸ் கோபிநாத் போன்ற பல சிவாஜி படங்களில் எஸ்பிபி பாடிய போதும் சிவாஜிக்கு குரல் தரவில்லை. டி.எம்.எஸ் வயதாகி பின்னர் மறைந்து விட்ட பின்னர் சிவாஜிக்கு பாட வேறு குரல்கள் பொருந்தவில்லை.இளையராஜா எஸ்.பி.பி.யையும் மலேசியா வாசுதேவனையும் பாட வைத்து காலமிட்ட வெற்றிடத்தை ஓரளவுக்கு நிரப்பினார்.கவரிமான் படத்தில் பூப்போல உன் புன்னகையில்,நான் வாழ வைப்பேன் படத்தில் திருத்தேரில் வரும் சிலையோ , என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்துப் பாடல்கள் ஆகிய எஸ்.பி.பி.யின் பாடல்கள் கிளாஸிக் ரகம்.இமயம் படத்தில் இமயம் கண்டேன் பாட்டையும் ரசிக்கலாம்.உத்தமன்,லாரி டிரைவர் ராஜாக் கண்ணு,வாழ்க்கை,சந்திப்பு போன்ற பல படங்களில் எஸ்.பி.பி.பாடினார்.பட்டாக்கத்தி பைரவன் படத்தில் எஸ்.பி.பி பாடிய எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஒரு பொன் முத்து.அதே போல வேண்டும் வேண்டும் உந்தன் உறவு பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment