தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய சில அர்த்தம் மிக்க சிவாஜி பாடல்களில் இதுவும் ஒன்று என்றாலும் இதைவிட சிறந்த பாடலை இக்கூட்டணி தரவி்ல்லை. வேண்டுமானால் கண்ணே கலைமானேவை அடுத்ததாக சேர்த்துக் கொள்ளலாம்.
தியாகம் திரைப்படம் சிவாஜியின் நடுத்தர வயதில் வந்த படம். எனக்கும் இப்போது கிட்டதட்ட அந்த வயது. சிவாஜியைப் போல என்னை அடையாளப்படுத்திக் கொள்ள எனக்கு இப்படமும் பாடலும் பலமுறை உதவியிருக்கிறது. அவரைப் போலவே சட்டையணிந்து தலையை வாரிக்கொண்டு அவர் மோட்டார் போட்டில் நின்று பாடும் அதே ஸ்டைலில் பலமுறை நானும் செய்து பார்த்திருக்கிறேன்- படகு இல்லாமலே
காதலியைப் பிரிந்த ஒருவர்- தவறாகப் புரிந்து பிரிந்து சென்ற காதலிக்கு தன்னிலை அளிக்கும் பாடல் இது.
இந்தியில் அமானுஷ் என்ற படம் உ்த்தம் குமார் என்ற அருமையான வங்காள நடிகரும் ஷர்மிளா தாகூரும் நடித்தது.இசை ஷியாம்லால் மித்ரா, இயக்கம் சக்தி சாமந்தா
இதன் ரீமேக்தான் தமிழில் தியாகம், சிவாஜியும் லட்சுமியும் அத்தனை பொரு்த்தமாக பொருந்திப் போனார்கள்
இந்தியில் கிஷோர் குமார் பாடிய தில் அய்சா கிசி நே மேரா தோடா என்ற பாடலின் தமிழ் வடிவம் தான் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஆனால் கண்ணதாசனின் வரிகள் இந்தியைத் தழுவாமல் தமிழுக்கென உள்ள கவிச்சுவையையும் காவியச்சுவையையும் தந்துவிட்டது.இளையராஜா-கண்ணதாசன்-டிஎம்.எஸ்-சிவாஜி காம்பினேசனி்ல் வந்த அற்புதமான பாடல் இது
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
இதே படத்தில்
உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு என்ற பாட்டும் டப்பாங்குத்து பாணியில் ஒரு தத்துவப்பாட்டு
ஆனால் எஸ்.ஜானகி பாடிய வசந்தகாலக் கோலங்கள் பாட்டும் ஒரு தாலாட்டும் கவிதை
வசந்தகாலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதி்ல் இரண்டும் உண்டல்லவா......
தியாகம் திரைப்படம் சிவாஜியின் நடுத்தர வயதில் வந்த படம். எனக்கும் இப்போது கிட்டதட்ட அந்த வயது. சிவாஜியைப் போல என்னை அடையாளப்படுத்திக் கொள்ள எனக்கு இப்படமும் பாடலும் பலமுறை உதவியிருக்கிறது. அவரைப் போலவே சட்டையணிந்து தலையை வாரிக்கொண்டு அவர் மோட்டார் போட்டில் நின்று பாடும் அதே ஸ்டைலில் பலமுறை நானும் செய்து பார்த்திருக்கிறேன்- படகு இல்லாமலே
காதலியைப் பிரிந்த ஒருவர்- தவறாகப் புரிந்து பிரிந்து சென்ற காதலிக்கு தன்னிலை அளிக்கும் பாடல் இது.
இந்தியில் அமானுஷ் என்ற படம் உ்த்தம் குமார் என்ற அருமையான வங்காள நடிகரும் ஷர்மிளா தாகூரும் நடித்தது.இசை ஷியாம்லால் மித்ரா, இயக்கம் சக்தி சாமந்தா
இதன் ரீமேக்தான் தமிழில் தியாகம், சிவாஜியும் லட்சுமியும் அத்தனை பொரு்த்தமாக பொருந்திப் போனார்கள்
இந்தியில் கிஷோர் குமார் பாடிய தில் அய்சா கிசி நே மேரா தோடா என்ற பாடலின் தமிழ் வடிவம் தான் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஆனால் கண்ணதாசனின் வரிகள் இந்தியைத் தழுவாமல் தமிழுக்கென உள்ள கவிச்சுவையையும் காவியச்சுவையையும் தந்துவிட்டது.இளையராஜா-கண்ணதாசன்-டிஎம்.எஸ்-சிவாஜி காம்பினேசனி்ல் வந்த அற்புதமான பாடல் இது
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
இதே படத்தில்
உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு என்ற பாட்டும் டப்பாங்குத்து பாணியில் ஒரு தத்துவப்பாட்டு
ஆனால் எஸ்.ஜானகி பாடிய வசந்தகாலக் கோலங்கள் பாட்டும் ஒரு தாலாட்டும் கவிதை
வசந்தகாலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதி்ல் இரண்டும் உண்டல்லவா......
No comments:
Post a Comment