Tuesday 6 October 2020
மூர் மார்க்கெட் புத்தகக் கடைகள்
மூர் மார்க்கெட் பத்தி ஒரு முத்திரை சிறுகதையை என்னிடமிருந்து எழுத்தாளர் தமயந்தி கேட்டுப் பெற்று தினமலர் இணைப்பு இதழில் பிரசுரம் செய்தார்.அக்கதை பின்னர் எனது சிறுகதைத் தொகுப்பான அன்னை ராஜேஸ்வரி பதிப்பக வெளியீடான சிறகுப் பருவம் தொகுப்பில் இடம் பெற்றது.அது எனக்கே பிடித்த நல்லதொரு கதை. அக்கதையின் களமான மூர்மார்க்கெட்டுக்கு இன்று போயிருந்தேன்.பல நல்ல புத்தகங்களுடன் வெளியே ரோட்டில் இந்தி தமிழ் மலையாளம் ஆங்கிலப் படங்களின் ஒரிஜினல் டிவிடிக்கள் பத்து அல்லது இருபது ருபாய்க்கு கிடைக்கும். இன்று யாரோ முகமது ரஃபி முகேஷ் ஆஷா போன்ஸ்லேயின் ஒரிஜினல் ஆடியோ சிடிக்களை போட்டு போனார்கள்.புத்தம் புதுசாக பளபளப்பாக இருந்ததால் கடைக்காரர் 40 50 என விலை சொன்னார்.என்னிடம் எல்லாப் பாடல்களும் உள்ளன.அதனால் ஆசை ஆசையாய் அந்த செட்டைப் பார்த்து வைத்துவிட்டேன்.இன்னொரு ரசிகர் பாய்ந்து வந்து அள்ளிக் கொண்டார்.விட்டுக் கொடுத்து நகர்ந்தேன்.இன்னொரு கடையில் புதிய மலையாளப் படங்களின் ஒரிஜினல் டிவிடிக்கள் கிடைத்தன.8 படங்களைத் தேர்வு செய்த போது ₹300 கேட்டதால் வைத்து விட்டேன். எனக்கேத்தபடி ₹ 20க்கு கிடைத்த நாசர் இயக்கிய அவதாரம் , விக்ரம் நடித்த தில் மற்றும் சில இந்திப் படங்களை வாங்கி வந்தேன். வாங்கி வந்த 5 புத்தகங்கள் 1.பவித்ரா நந்தகுமாரின் வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது 2.பல்லவர் கதைகள் 3.அக்னி நதி குர் அதுல்ஜன் ஹைதரின் முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்,4.கண்ணதாசனின் சிவப்புக் கல்லு மூக்குத்தி 5 Mystic songs of Meera ஆகியவை .மன நிறைவுடன் வீடு திரும்பினேன்.இனி நான் உறக்கம் வரும் வரை படிக்க வேண்டும்.குட் நைட்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment