Thursday 15 October 2020

எஸ்.பி.பியும் ரஜினிகாந்த்தும்

ஆயிரம் நிலவே வா 16 எஸ்.பி.பி.யும் ரஜினிகாந்த்தும் ரஜினிகாந்த் கதாநாயகனாக முதல் முறை பெயர் பெற்ற படம் புவனா ஒரு கேள்விக்குறி. இதில் ரஜினிக்கு மிகச்சிறந்த ஒருபாடலை இளையராஜா இசையமைக்க பஞ்சு அருணாசலம் எழுதிய ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள என்ற பாடல் படமாக்கப்பட்டது. அது ரஜினியின் முதல் அரசியல் பாடலாகவும் இப்போது தெரிகிறது. பல்லவி அப்படி...இதனைப் பாடியவர்கள் எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும்.அதே படத்தில் விழியிலே மலர்ந்தது பெண் என்னும் பொன் அழகு என்று இன்னொரு பாடலையும் எஸ்.பி.பி ரஜினிக்குப் பாடினார். சதுரங்கம் படத்தில் ரஜினி்க்கு ஜோடியாக பிரமீளா நடித்திருந்தார். இந்தப் படத்தில் மதனோற்சவம் ரதியோடுதான் பாடலை எஸ்.பி.பி வாணி ஜெயராமுடன் ரஜினிக்குப் பாடினார். வாலி இயற்றிய பாடலுக்கு இசையமைத்தவர் வி.குமார். வணக்கத்துக்குரிய காதலியே ஸ்ரீதேவிக்கும் ரஜினிகாந்த்துக்கும் முதல் கெமிஸ்ட்ரி உருவாக்கிய படம். இளமை ததும்பும் ஸ்ரீதேவியை ரஜினி தூக்கிக் கொண்டு ( மினி ஸ்கர்ட்டில் ) ஆடிப்பாடினார். இதில் ரஜினிக்கு அறிமுகப்பாடல் hey i am the king of kings என்று தொடங்கி கொட்டு கொட்டு மேளம் கொட்டு என்ற பாடலுக்கு எஸ்.பி.பி. குரல் கொடுத்தார். பாடல் கண்ணதாசன். இசை எம்.எஸ்.வி. மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை பாடலை கங்கை அமரன் எழுத இளையராஜா இசையமைத்தார். காளி என்ற ரஜினியின் கதாபாத்திரத்தை வடிவமைத்த முக்கியப் பாடல் இது.இதனை எஸ்.பி.பி தன் இனிமையான குரலால் அழகு செய்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான தப்புத் தாளங்கள் படத்திலும் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்களை எஸ்.பி.பி. விஜயபாஸ்கர் இசையில் ரஜினிக்காகப் பாடினார். தப்புத்தாளங்கள் வழி தவறிய பாதங்கள் என்றும் என்னடா பொல்லாத வாழ்க்கை என்றும் பாடல்கள் பிரபலமாயின. என் கேள்விக்கென்ன பதில், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் போன்ற படங்களிலும் எஸ்.பி.பியின் பாடல்கள் இடம்பெற்றன. ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ பாடலை எஸ்பிபி லயித்துப் பாடினார். இளையராஜா இசையமைத்த பஞ்சு அருணாசலத்தின் பாடல் அது. பில்லாவில் மெல்லிசை மன்னர் இசையில் கண்ணதாசன் எழுதிய இரண்டு பாடல்களும் ரஜினியின் வளர்ச்சிக்கு கை கொடுத்தன. மை நேம் இஸ் பில்லா என உச்சஸ்தாயியில் பாடிய எஸ்.பி.பி நாட்டுக்குள்ள எனக்கொரு பேரிருக்கு என்ற பாடலையும் ரஜினிக்குப் பாடினார். அன்புக்கு நான் அடிமை படத்தில் இளையராஜா இசையில் காத்தோடு பூ உரச பாடலையும் காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம் என்ற கதைப் பாடலையும் வாலி எழுத எஸ்.பி.பி பாடினார். காளி படத்தில் இளையராஜா இசையில் கண்ணதாசன் எழுதிய வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்துப் பார்ப்போம் வாடா நைனா பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதே போல் பொல்லாதவன் படத்தில் எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசனின் நானே என்றும் ராஜாவும் நான் பொல்லாதவன் பாடலும் ரசிகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டது. அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என் மீது எய்தானாம்மா அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா என்று வாணி ஜெயராமுடன் பாடிய டூயட் பாடல் பேரின்பம். ஜானி படத்தில் கங்கை அமரன் எழுதிய செனோரிட்டா ஐ லவ் யூ பாடலையும் இளையராஜா இசையில் பாடினார் எஸ்.பி.பி. கழுகு படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய ஒரு பூவனத்துல பாடலும் பிரபலமானது. தில்லு முல்லு படத்தில் ராகங்கள் பதினாறு பாடலையும் தில்லுமுல்லு என்ற தலைப்புப் பாடலையும் கவிஞர் கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையி்ல் பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ராணுவ வீரன் படத்தில் வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் என்ற பாடலை ரஜினிக்காகப் பாடினார் எஸ்.பி.பி. புலமைப்பித்தன் எழுதிய இப்பாடல் தீவிரவாதத்திற்கு எதிரானது. MSV இசையமைச்ச இப்படத்தில் சொன்னால்தானே தெரியும் என்று இன்னொரு இனிய பாடல் உள்ளது. தனிக்காட்டு ராஜாவிலும் எஸ்.பி.பி, பாடிய கூவுங்கள் சேவல்களே பாடல் சிறப்பானது. வாலி எழுதி இளையராஜா இசையமைத்த சந்தனக் காற்றே என்ற இன்னொரு டூயட் பாடலு்ம் கேட்க கேட்க இனிமையானது. போக்கிரி ராஜாவில் விடிய விடிய சொல்லித் தருவேன் பாடலும் இனிமையாக இருந்தது. கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையமைத்தார். மூன்று முகம் படத்தில் நான் செய்த குறும்பு பாடல் சங்கர் கணேஷ் இசையில் வாலி எழுதியது. இதே படத்தில் தேவாமிர்தம் பெண்தான் என்ற வைரமுத்துவின் பாடலும் ஹிட்டானது. துடிக்கும் கரங்கள் படத்தில் எஸ்.பி.பி இசையமைத்து நான்கைந்து பாடல்களைப் பாடினார். இதில் தன இசையில் தானே பாடிய அடடா இதுதான், மேகம் முந்தானை போன்ற பாடல்கள் சிறப்பானவை. புலவர் புலமைப்பித்தன் , கங்கை அமரன் பாடல்களை எழுதினர். டிஎம்எஸ் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பொருத்தமாக தனது குரலை மாற்றியமைத்தது போலவே கமலுக்கும் ரஜினிக்கும் எஸ்.பி.பி தமது குரலை மாற்றிக் காட்டினார். ரஜினிக்கு மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ், மனோ , டிஎம்எஸ் உள்பட பல பாடகர்கள் குரல் கொடுத்த போதும் எஸ்.பி.பியின் குரல் அவருக்கு தனி ஆளுமையை உருவாக்கித் தந்தது. நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊர் சிங்காரி என்று ரஜினிக்கு பாடிய பாடல் உற்சாகமானது. எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலுடன் தட்டிக் கேட்க ஆளில்லைன்னா தம்பிச்சண்டைப் பிரசண்டன் பாட்டையும் நிழல் கண்டவன் நாளும் இங்கே பாடலையும் எஸ்.பி.பி. பாடினார். இந்தப் படத்தில் மற்ற மற்ற எல்லாப் பாடல்களும் கமலுக்குப் பாடினார். இதில் எம்.எஸ்.வியும் ரஜினிக்கு குரல் கொடுத்து சிவசம்போ என்ற பாட்டை வெளுத்து வாங்கினார். கைகொடுக்கும் கை என்ற மகேந்திரன் இயக்கிய படத்தில் தாழம்பூவே வாசம் வீசு என்ற பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுத இளையராஜா இசையமைத்தார். நல்லவனுக்கு நல்லவன் படத்தில் முத்தாடுதே முத்தாடுதே மோகம் என்ற பாடலை எஸ்.பி.பி பாடினார். வாலி எழுதிய நம்ம முதலாளி என்றொரு பாடலையும் இப்படத்தில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடினார். நான் சிவப்பு மனிதன் படத்தில் வைரமுத்து எழுதிய வீரியமான பாடல் காந்தி தேசமே காவல் இல்லையா...இதில் உச்சஸ்தாயியில் எஸ்.பி.பி ரஜினிக்காக பாடினார். இசை இளையராஜா.இந்தப் படத்தில் வெண்மேகம் மண்ணில் வந்து என்ற புலமைப்பித்தனின் பாடலையும் பொன்மானே சங்கீதம் பாட வா என்ற முமேத்தாவின் பாடலையும் எஸ்.பி.பி பாடியுள்ளார். பாலு மகேந்திரா ரஜினியை வைத்து இயக்கிய படம் உன் கண்ணில் நீர் வழிந்தால் இந்தப்படத்தில் ரஜினியின் உதடுகளில் வெள்ளைத் தழும்புகள் காணப்பட்டன. குழப்பமான திரைக்கதை. ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த பாத்திரம் என்று படம் தோல்வியைத் தழுவியது. ஆனாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கண்ணில் என்ன கார்காலம் என்ற பாடல் இனிமையானது.பாடல் வைரமுத்து. படிக்காதவன் படத்தில் வாலி எழுதிய ராஜாவுக்கு ராஜா நானே, வைரமுத்து எழுதிய ஜோடிக்கிளியெங்கே சொல்லு சொல்லு போன்ற பாடல்களை இளையராஜா இசையில் பாடினார் எஸ்.பி பாலசுப்பிரமணியம். மிஸ்டர் பாரத்தில் காத்திருக்கேன் கதவைத் திறடி என்ற பாடலையும் என்னம்மா கண்ணு என்ற பாடலையும் எஸ்.பி.பி பாடினார்.இசை இளையராஜா. விடுதலை இந்தியில் வந்த குர்பானி படத்தின் ரீமேக் படமாகும். இந்தப் படத்தில் விஷ்ணுவரதன், சிவாஜி கணேசனுடன் ரஜினி நடித்திருந்தார். மூவருக்கும் எஸ்பிபியின் குரலில் பாடல்கள் இருந்தன. சந்திரபோஸ் இசையில் புலமைப்பித்தன் எழுதிய ராஜாவே ராஜா என்ற பாடலும் வாலி எழுதிய நீலக்குயில்கள் இரண்டு, தங்கமணி ரங்கமணி வாம்மா ஆகிய பாடல்களும் இடம் பெற்றன. ரங்கா படத்தில் சங்கர் கணேஷ் இசையில் பட்டுக்கோட்டை அம்மாளு என்ற வாலியின் பாடலையும் எஸ்.பி.பி பாடினார். தாய் வீடு இந்தி இசையமைப்பாளர் பப்பி லகரியின் மெட்டுகளைத் தழுவி சங்கர் கணேஷ் இசையமைத்த படம். இதில் வாலி எழுதிய உன்னை அழைத்தது பெண், அழகிய கொடியே ஆடடி போன்ற பாடல்களை பாடினார். நான் அடிமை இல்லை என்ற படமும் இந்தி ரீமேக் தான். இந்தப் படத்தில் ரஜினிக்கு இசையமைத்தவர் கன்னட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். ஒரு ஜீவன்தான் உன்பாடல்தான் என்ற பாடலும் வா வா இதயமே என் ஆகாயமே என்ற பாடலும் இனிமையானவை. பாடல்களை வாலி எழுதினார். கே.பாலசந்தர் இயக்கிய வேலைக்காரன் படத்தில் மு மேத்தா எழுதி இளையராஜா இசையமைத்த தோட்டத்திலே பாத்தி கட்டி பாடலை எஸ்.பி.பி பாடினார். சிங்காரமாம் ஊரு இது சென்னையின்னு பேரு ஊரைச் சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு....வரிகள் பட்டித் தொட்டியெல்லாம் ஒலித்தன. ஊர்க்காவலன் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் சித்ராவுடன் பாடிய பாடல் மாசி மாசம்தான் கெட்டி மேள தாளம்தான் பாடலை வைரமுத்து எழுதினார். மனிதன் படத்தில் சந்திரபோஸ் இசையிலும் வைரமுத்து எழுதிய வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் பாடல் உருக்கமானது. குரு சிஷ்யன் படத்தில் கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன் என்று ரஜினிக்கும் பிரபுவுக்கும் மாறி மாறிப் பாடினார் எஸ்.பி.பி. அழகான பாடல் இது. வாலி எழுத இளையராஜா இசை. வா வா வஞ்சி இளமானே என்று சித்ராவுடன் பாடிய டூயட்டும் பேசப்பட்டது.இதில் பிரபு சீதா நடித்தனர். சிவப்புச்சூரியன் படத்தில் மிஸ்டர் மிராண்டா என்ற வாலியின் பாடல் இடம் பெற்றது.இசை எம்.எஸ்.வி. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் பூவே பூவே வா என்ற பாடல் ஹிட் .ஆனால் அது ரஜினிக்குப் படமாக்கப்படவில்லை. இளையராஜா இசையில் வாலி எழுதியது. அடுத்த வாரிசு படத்தில் இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் எழுதிய காவிரியை கவி்க்குயிலே கண்மணியே வாவா பாடலும் பேசக்கூடாது என்ற பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். தங்கமகன் படத்தில் இளையராஜா இசையி்ல் புலமைப்பித்தன் எழுதிய ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் சுகமானது. அடுக்கு மல்லிகை ஆள் புடிக்குது என்ற நா.காமராசன் பாடலும் வாவா பக்கம் வா என்ற முத்துலிங்கம் பாடலும் பூமாலையே தோள் சேரவா என்ற வாலியின் பாடலும் சக்கைப் போடு போட்ட பாடல்களாகும். ஆயிரம் நிலவே வா 18 எஸ்.பி.பி.யும் ரஜினியும் தொடர்ச்சி 3 ரஜினிக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரல் மிகச்சிறப்பாகப் பொருந்தியது. சில நேரங்களில் கமலை விடவும் கூடுதலாக. காதலின் தீபம் ஒன்று பாடல் அதில் ஒன்று. தம்பி்க்கு எந்த ஊரு படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல் இது. இதே போல் தர்மத்தின் தலைவன் படத்தில் தென்மதுரை வைகை நதி பாடலை சொல்லலாம். இந்தப் பாடலில் ரஜினியின் நடை உடை பாவனையுடன் எஸ்.பி.பியின் குரல் இளையராஜா இசையில் தாலாட்டியது. பாடல் வாலி. தர்மதுரை படத்தில் ஆணென்ன பெண்ணன்ன என்ற பாடலை கங்கை அமரன் எழுதினார். சந்தைக்கு வந்த கிளியை பஞ்சு அருணாசலம் எழுதினார். இசை இளையராஜா. கொடி பறக்குது படத்தில் சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு,அன்னை மடியில் கண்திறந்தோம், ஓ காதல் என்னை காதலிக்கவில்லை என்ற பாடல்கள் இடம் பெற்றன. ஹம்சலேகா இசையமைக்க வைரமுத்து எழுதினார். பாரதி ராஜா 16 வயதினிலேவுக்குப் பிறகு ரஜினியை வைத்து இயக்கிய படம் இது. நாட்டுக்கு ஒரு நல்லவன் என்று ஒரு படம். கன்னட நடிகர், இயக்குனர் வி.ரவிச்சந்திரன் இயக்கிய படம். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே சிறப்பானவை. இசையமைத்தவர் ஹம்சலேகா. ரஜினிக்கு ஜூகி சாவ்லாவும் ரவிச்சந்திரனுக்கு குஷ்பூவும் ஜோடியாக நடித்தனர். குஷ்பூ இதில் முத்தக்காட்சியிலும் நீச்சல் உடையிலும் கவர்ந்தார். இந்தப் படத்தின் தொடக்க டைட்டில் பாடல்காட்சி தொடங்கி எஸ்.பி.பி பாடல்கள் வர்ண ஜாலமாடின. சின்னக் கண்ணம்மா, என் தாயின் மணிக்கொடியே ,நல்லவன் நல்லவன் நாட்டுக்கொரு நல்லவன் பாடல்களை வைரமுத்து எழுதினார். ஒன் டூ த்ரீ பாடலை எழுதிய முத்துலிங்கம் வீடு கட்டி விளையாடலாமா என்ற பால்ய கால காதலை சித்தரிக்கும் ஒரு சிறப்பான பாடலை எழுதியிருக்கிறார். அதை எஸ்.பி.பி.யும் ஜானகியும் பிரமாதமாகப் பாடியிருப்பார்கள். தளபதி இளையராஜா இசையில் உச்சததைத் தொட்ட படம் . இதில் காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கொன்னும் பஞ்சமில்லை என்ற பாடலை எஸ்.பி.பி. ஜேசுதாசுடன் இணைந்து பாடினார். வாலி எழுதிய இப்பாடல் எஸ்.பி.பி. ஜேசுதாஸ் நட்பையும் ரஜினி-மம்முட்டி நட்பையும் ஒரே நேரத்தில் சிறப்பாகவே பதிவு செய்துள்ளது. மன்னன் படத்தில் ரஜினிக்கு இளையராஜா இசையில் ராஜாதி ராஜா , சண்டி ராணியே. அடிக்குது குளிரு, கும்தலக்கடி கும்தலக்கடி கும்மா ஆகிய பாடல்களை வாலி எழதினார். அண்ணா மலை ரஜினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. இதில் தேவா இசையில் வைரமுத்து எழுதிய வந்தேன்டா பால்காரன் , அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ ஆகிய பாடல்களுடன் வெற்றி நிச்சயம் என்ற பாடலை எஸ்.பி.பி. சிறப்பாகப் பாடி மகிழ வைத்தார். எஜமான் படத்தில் ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் எனக்கு எப்போதும் பிடித்த பாடல். வாலி எழுதி இளையராஜா இசையமைத்த இப்பாடல் எப்போது ஒலித்தாலும் என் உலகம் இயக்கமின்றி அப்பாடலில் மூழ்கி விடுகிறது. நிலவே முகம் காட்டு, அடி ராக்குமுத்து ராக்கு ,ஆலைப்போல வேலைப் போல போன்ற பாடல்களையும் வாலி எழுதினார். உழைப்பாளி படத்திலும் ரஜினிக்கு உழைப்பாளியும் நானே ஒரு கோலக்கிளி வந்தது வந்தது மானே போன்ற பாடல்களைப் பாடினார்.அம்மா அம்மா எனதாருயிரே என்ற பாடல் நெஞ்சை உருக்கும் வகையில் இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதினார். வீரா படத்திலும் இளையாராஜா இசையில் கொஞ்சி கொஞ்சி மலர்கள் ஆட பாடலை பஞ்சு அருணாசலமும், மாடத்திலே என்ற பாடலை வாலியும் எழுத எஸ்.பி.பி பாடினார். முத்து படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுத எஸ்.பி.பி ஒருவன் ஒருவன் முதலாளி, கொக்கு சைவ கொக்கு பாடல்களைப் பாடினார். அதே போல் அருணாசலம் படத்திலும் அதான்டா இதான்டா, மாத்தாடு மாத்தாடு, தலைமகனே என வைரமுத்து, பழனிபாரதி, காளிதாசன் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடினார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். பாட்ஷா படத்தில் மீண்டும் தேவா இசையில் வைரமுத்து எழுதிய நான் ஆட்டோக்காரன், நீ நடந்தால் நடை அழகு, ஸ்டைலு ஸ்டைலுதான், ரா ரா ராமையா, பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ஆகிய பாடல்களை ஹிட்டாக்கினார் எஸ்.பி.பி. சந்திரமுகி படத்தில் வாலி எழுதிய தேவுடா தேவுடா பாடலையும் பா விஜய் எழுதிய அத்திந்தோம் என்ற பாடலையும் பாடினார் எஸ்.பி.பி. இசையமைத்தவர் வித்யாசாகர். பாபா , சிவாஜி எந்திரன் படங்களிலும் ரஜினிக்கு எஸ்.பி.பி பாடினார். பேட்ட படத்தில் ராமன் ஆண்டாலும் ரீமிக்ஸ் பாடலையும் தர்பார் படத்தில் சும்மா கிழி என்ற விவேக்கின் பாடலையும் ரஜினிக்கு பாடினார் எஸ்.பி.பி. வரவிருக்கும் அண்ணாத்தே படத்திலும் ரஜினிக்குப் பாடியிருக்கிறார் (

1 comment:

  1. இந்த பதிவில் இடம் பெற்றுள்ள படங்கள்… பாடல்களை எழுதிய கவிஞர்கள்… இசை அமைப்பாளர்களை எப்படி கோர்வையாக்க முடிகிறது…. உங்களுக்குள் உள்ள ரசிகனை பார்த்து பிரமிக்கிறேன்…. ரசிப்பு எந்த காலத்திலும் மாறுவதில்லை… ஆனால் இன்று அதை பகிர்ந்து கொள்ள சரியான ரசிகன் இல்லை… நன்றி… நீங்கள் கமல் என்றால் நான் ரஜினி… கீழே லிங் உள்ளது…https://youtu.be/9QDL17im66I

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...