Saturday 10 October 2020

எஸ்.பி.பியும் வாலியும்

ஆயிரம் நிலவே வா 11 -எஸ்.பி.பியும் வாலியும். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அதிகமாக பாடல்களை எழுதியவர் வாலி.வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்,அன்பு மலர்களே,கனா காணும் கண்கள் போன்ற பாடல்களை கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம்.சங்கர் கணேஷ் இசையில் பட்டிக்காட்டு ராஜா படத்தில் உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் பாடல் புகழ்பெற்ற பாடலாகும். அவள் படத்தில் கீதா ஒருநாள் பழகும் உறவல்ல பாடலை சசிகுமாருக்கு எழுதினார் வாலி. சங்கர் கணேஷ் இசையில் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் என்ற பாடலும் வி.குமார் இசையில் ராஜநாகம் படத்தில் இடம்பெற்ற இனிய பாடலாகும். நிழல்கள் படத்தில் இளையராஜா இசையில் மடை திறந்து தாவும் நதியலை நான் என்று சந்திரசேகர் பாட வாலி எழுதிக் கொடுத்தார்.இந்தப் பாடலில் புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்று இளையராஜா பாடுவது போல படமாக்கப்பட்டது. இளையராஜா வுக்கே இதில் பின்னணி பாடினார் எஸ்.பி.பி.இதே போன்று புதுப்புது அர்த்தங்கள் படத்திலும் இளையராஜாவுக்கு கல்யாண மாலை பாடலில் எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்தது . என்றும் அன்புடன் படத்தில் இளையராஜா இசையில் துள்ளித் திரிந்ததொரு காலம் பாடலையும் புது வசந்தம் படத்தில் S.A ராஜ்குமார் இசையில் போடு தாளம் போடு பாடலையும் வாலி எழுதினார். கமல்,ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு,கார்த்திக், மோகன்,பாக்யராஜ் படங்களில் வாலி ஏராளமான பாடல்களை எஸ்.பி.பி.க்கு எழுதினார். இவற்றை அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...