இந்தியாவின் சார்லி சாப்ளின்
நடிகர், இயக்குனர் ராஜ் கபூரின் திரைப்படங்கள்
- செந்தூரம் ஜெகதீஷ்
ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் புனேயில் ராஜ்கபூர் நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் பற்றியவீடியோ செய்தித் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்ததும் அந்த மகத்தான திரைப்படக்கலைஞரின் நினைவுகளில் மூழ்கி விட்டேன்.
ஒருவரின் புன்னகைக்கு முன்னுதாரணமாக இருங்கள்- அல்லது
ஒருவரின் கண்ணீரைத் துடைப்பதற்கு துணையாக இருங்கள் என்று அனாரி படத்தில் பாடிய மகத்தானகலைஞர் அவர். ஒருவரின் கண்ணீருக்கு ஒருபோதும் காரணமாக இருந்துவிடாதீர்கள் என்றுமனிதநேயத்தை அள்ளி இறைத்தவர் ராஜ்கபூர்.
சார்லி சாப்ளின் படைத்த டிராம்ப் கதாபாத்திரங்கள் உலகப் புகழ் பெற்றவை. வறுமையிலும்ஏழ்மையிலும் வாழ்க்கையைக் கொண்டாடும் பாத்திரம் தான் டிராம்ப். சாப்ளினே சொன்னது போல நாம் பல நேரங்களில் கண்ணீரை மறைப்பதற்காகவே சிரித்துக் கொண்டிருக்கிறோம். செல்வந்தர்களுக்குவாழ்க்கையில் சுகபோகங்கள் ஏராளம். ருசியான உணவு, சொகுசுப் பயணம் ,உடை, நகைகள், மரியாதை,
மதிப்பு, ஆமாம் சாமி போட ஆட்கள். அழகான
இளம் பெண்கள், ஏர் கண்டிஷன் வாழ்க்கை என நாகரீகசுகபோகங்களுக்கு ஆசைப்படாத மனிதர்கள் யாருமில்லை. ஆனால் அதற்காக தமதுமனிதாபிமானத்தையும் மனசாட்சியையும் தொலைத்தவர்களை நோக்கித்தான் சார்லி சாப்ளின் தமதுதிரைப்படங்களை ஆயுதமாக்கினார்.
மதிப்பு, ஆமாம் சாமி போட ஆட்கள். அழகான
இளம் பெண்கள், ஏர் கண்டிஷன் வாழ்க்கை என நாகரீகசுகபோகங்களுக்கு ஆசைப்படாத மனிதர்கள் யாருமில்லை. ஆனால் அதற்காக தமதுமனிதாபிமானத்தையும் மனசாட்சியையும் தொலைத்தவர்களை நோக்கித்தான் சார்லி சாப்ளின் தமதுதிரைப்படங்களை ஆயுதமாக்கினார்.
செல்வந்தர்களுக்கு வாழ்க்கையை அனுபவிக்க
ஆயிரமாயிரம் இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஏழைவாழ்க்கையைஅனுபவிக்க அவனிடம் இருப்பது அன்பு மட்டும்தான். அன்பினால் செழிக்கும்
இவ்வையகம்என்று ஏழையை விட யாரறிவார்.
தமது நட்புகள் உறவுகளை அந்த அன்பினால்
பிணைத்துக்கொள்பவன்தான் ஏழை டிராம்ப்.
அன்பில் தான் அவன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான். அன்பில்தான்அவன் இறைவனை காண்கிறான். அந்த அன்பில்தான் அவன் வாழ்க்கையும் கொண்டாட்டம் ஆகிறது.காதல் அன்பின் அடிப்படையில் எழுகிறது. ஆன்மீகமும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
மனிதாபிமானமும் தேச பக்தியும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
ஆயிரமாயிரம் இன்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஏழைவாழ்க்கையைஅனுபவிக்க அவனிடம் இருப்பது அன்பு மட்டும்தான். அன்பினால் செழிக்கும்
இவ்வையகம்என்று ஏழையை விட யாரறிவார்.
தமது நட்புகள் உறவுகளை அந்த அன்பினால்
பிணைத்துக்கொள்பவன்தான் ஏழை டிராம்ப்.
அன்பில் தான் அவன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறான். அன்பில்தான்அவன் இறைவனை காண்கிறான். அந்த அன்பில்தான் அவன் வாழ்க்கையும் கொண்டாட்டம் ஆகிறது.காதல் அன்பின் அடிப்படையில் எழுகிறது. ஆன்மீகமும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
மனிதாபிமானமும் தேச பக்தியும் அன்பின் அடிப்படையில் எழுகிறது.
சாப்ளினின் டிராம்ப் கதாபாத்திரத்திற்கு இந்திய வடிவம் கொடுத்தவர் ராஜ்கபூர். நடிகர் பிருத்விராஜ்கபூரின் மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிறந்தவர் ராஜ்கபூர். 11 வயது முதலே சினிமாவில்நடித்து வந்த அவர்
ஆவாரா, அனாரி, ஆஹா, ஆக் போன்ற அ வரிசைப்படங்களின் மூலம் புகழ் பெற்றார்.ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற மகத்தான இயக்குனர்களுடன் நடிகராக பணியாற்றிய ராஜ்கபூர்ஆர்.கே.பிலிம்ஸ் என்ற தமது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனராகவும் உயர்ந்தார். அவர்இயக்கிய படங்களில் காதலும் மனிதநேயமும் இரு கண்களாக இடம்பெற்றன. அறம் அதன்
ஆன்மாவாகஇருந்தது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரீ 420 என்ற படம்.
ஆவாரா, அனாரி, ஆஹா, ஆக் போன்ற அ வரிசைப்படங்களின் மூலம் புகழ் பெற்றார்.ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற மகத்தான இயக்குனர்களுடன் நடிகராக பணியாற்றிய ராஜ்கபூர்ஆர்.கே.பிலிம்ஸ் என்ற தமது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனராகவும் உயர்ந்தார். அவர்இயக்கிய படங்களில் காதலும் மனிதநேயமும் இரு கண்களாக இடம்பெற்றன. அறம் அதன்
ஆன்மாவாகஇருந்தது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஸ்ரீ 420 என்ற படம்.
ஸ்ரீ 420 படத்தில் ஏழையான ராஜ்கபூர் பணத்தின் மீது மோகம் கொண்டு ஏழைப் பெண்ணின் காதலைநிராகரித்து பணக்காரப் பெண்ணின் காதலை நாடிச் செல்வார்.
பணம், பகட்டு போன்றவற்றால்வழிதவறிய அவர் ஒரு பாடல் காட்சியில் திரும்பிப் பார்க்காதே வாழ்க்கையில் முன்னேறு முன்னேறுஎன்று கலியுக மனிதர்களின் கொள்கையை பிரதிபலித்தார். ஆனால் அவரது ஏழைக்காதலியாக நடித்தநர்கிஸ் நடித்த பாடல் காட்சியொன்றில், முன்னே போகிறவரே சற்று நடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தபடி செல்லுங்கள்...நீங்கள் நிராகரித்து விட்ட மனிதர்களை நினைத்தபடி செல்லுங்கள் என்றுபாடுவாள். இதுதான் ராஜ்கபூர் வகுத்த அறத்தின் பாதை, அந்தப் பாடலில் ஒலித்தது அறத்தின்
குரல்.
பணம், பகட்டு போன்றவற்றால்வழிதவறிய அவர் ஒரு பாடல் காட்சியில் திரும்பிப் பார்க்காதே வாழ்க்கையில் முன்னேறு முன்னேறுஎன்று கலியுக மனிதர்களின் கொள்கையை பிரதிபலித்தார். ஆனால் அவரது ஏழைக்காதலியாக நடித்தநர்கிஸ் நடித்த பாடல் காட்சியொன்றில், முன்னே போகிறவரே சற்று நடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தபடி செல்லுங்கள்...நீங்கள் நிராகரித்து விட்ட மனிதர்களை நினைத்தபடி செல்லுங்கள் என்றுபாடுவாள். இதுதான் ராஜ்கபூர் வகுத்த அறத்தின் பாதை, அந்தப் பாடலில் ஒலித்தது அறத்தின்
குரல்.
மாமனாராக கூடிய செல்வந்தர் ஏழை எளிய
மக்களிடம் சீட்டுக் கம்பெனி நடத்தி பல லட்சம்
ரூபாய்மோசடி செய்த விவகாரத்தை பின்னர் ராஜ்கபூர் உணர்கிறார். செல்வந்தர்களின் செல்வம் பலரது
உழைப்பின் வேர்வை, ரத்தம், கண்ணீர் கறை படிந்தது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்கிறார்.அப்போது மனம் உடைந்து தனது ஏழைத் தோழர்களை
நாடி குடிசைப்பகுதிக்கு வருவார் ராஜ்கபூர்.அங்கே
ராமய்யா வஸ்தாவய்யா என்று அந்த ஏழை மக்கள்
ஆடிப்பாடி அவரை வரவேற்பார்கள். திருந்திவரும்
மனிதனும் உண்மையை உணர்ந்து வரும் மனிதனும்தான் மகத்தான மனிதன் என்று புரிதலுடன்ராஜ்கபூர் அந்த ஏழைகளின் உரிமைக்காக போராடுவதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும்.ராஜ்கபூருக்கு இத்தகைய இடதுசாரி சிந்தனையை விதைத்தவர்களில்
முக்கியமானவர் எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ்.
அவர்தான் இதுபோன்ற படங்களின் கதை வசனகர்த்தாவாக இருந்தார்.
மக்களிடம் சீட்டுக் கம்பெனி நடத்தி பல லட்சம்
ரூபாய்மோசடி செய்த விவகாரத்தை பின்னர் ராஜ்கபூர் உணர்கிறார். செல்வந்தர்களின் செல்வம் பலரது
உழைப்பின் வேர்வை, ரத்தம், கண்ணீர் கறை படிந்தது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்கிறார்.அப்போது மனம் உடைந்து தனது ஏழைத் தோழர்களை
நாடி குடிசைப்பகுதிக்கு வருவார் ராஜ்கபூர்.அங்கே
ராமய்யா வஸ்தாவய்யா என்று அந்த ஏழை மக்கள்
ஆடிப்பாடி அவரை வரவேற்பார்கள். திருந்திவரும்
மனிதனும் உண்மையை உணர்ந்து வரும் மனிதனும்தான் மகத்தான மனிதன் என்று புரிதலுடன்ராஜ்கபூர் அந்த ஏழைகளின் உரிமைக்காக போராடுவதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும்.ராஜ்கபூருக்கு இத்தகைய இடதுசாரி சிந்தனையை விதைத்தவர்களில்
முக்கியமானவர் எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ்.
அவர்தான் இதுபோன்ற படங்களின் கதை வசனகர்த்தாவாக இருந்தார்.
சங்கம் படம் இன்றைய தமிழ்ப்படத்தின் இருமடங்கு
நீளம் உடையது. 24 ரீல் 2 இடைவேளை எனவெளியான படம் அது. இந்தப் படத்தில் ஸ்ரீதர் பாணி முக்கோண காதல்
கதையைப் படம் பிடித்தராஜ்கபூர் மூன்றே கதாபாத்திரங்கள் மூலம் 24 ரீல்களையும் மிகமிக சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுஷோமேன் ஆப் தி மில்லினியம் என புகழ் பெற்றார். இப்படத்தில் ராஜ்கபூரின் நண்பராகராஜேந்திரகுமாரும் மனைவியாக வைஜயந்தி
மாலாவும் நடித்திருந்தனர். இந்தப்படத்திலும்
பாடல்கள் பிரமாதமாக அமைந்துவிட்டன. ராஜ்கபூரின் இசையமைப்பாளர்கள் சங்கர் ஜெய்கிஷண், பாடலாசிரியர் சைலேந்தர் பாடகர் முகேஷ் ஆகியோர் மாயாஜாலங்களை நிகழ்த்தினார். ராமய்யா வஸ்தாவையாவைமுகமது ரபியை வைத்து பாட வைத்த ராஜ்கபூர்
இப்படத்திலும் ராஜேந்திர குமாருக்கு முகமது ரபியின்குரலைப் பயன்படுத்தி ஏ மேரா பிரேம் பத்ர என்ற இனிமையான பாடலை வழங்கினார். தமது குரலாகஅவர் எப்போதும் போல முகேஷையே வரித்துக் கொண்டார். முகேஷ் பாடிய போல் ராதா போல்பாடலும் தோஸ்த் தோஸ்த் நா ரஹா பாடலும் அந்தக் காலம் முதல்
இன்றுவரையிலும் சூப்பர் ஹிட்பாடல்களாக நிலைத்துவிட்டன.
நீளம் உடையது. 24 ரீல் 2 இடைவேளை எனவெளியான படம் அது. இந்தப் படத்தில் ஸ்ரீதர் பாணி முக்கோண காதல்
கதையைப் படம் பிடித்தராஜ்கபூர் மூன்றே கதாபாத்திரங்கள் மூலம் 24 ரீல்களையும் மிகமிக சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுஷோமேன் ஆப் தி மில்லினியம் என புகழ் பெற்றார். இப்படத்தில் ராஜ்கபூரின் நண்பராகராஜேந்திரகுமாரும் மனைவியாக வைஜயந்தி
மாலாவும் நடித்திருந்தனர். இந்தப்படத்திலும்
பாடல்கள் பிரமாதமாக அமைந்துவிட்டன. ராஜ்கபூரின் இசையமைப்பாளர்கள் சங்கர் ஜெய்கிஷண், பாடலாசிரியர் சைலேந்தர் பாடகர் முகேஷ் ஆகியோர் மாயாஜாலங்களை நிகழ்த்தினார். ராமய்யா வஸ்தாவையாவைமுகமது ரபியை வைத்து பாட வைத்த ராஜ்கபூர்
இப்படத்திலும் ராஜேந்திர குமாருக்கு முகமது ரபியின்குரலைப் பயன்படுத்தி ஏ மேரா பிரேம் பத்ர என்ற இனிமையான பாடலை வழங்கினார். தமது குரலாகஅவர் எப்போதும் போல முகேஷையே வரித்துக் கொண்டார். முகேஷ் பாடிய போல் ராதா போல்பாடலும் தோஸ்த் தோஸ்த் நா ரஹா பாடலும் அந்தக் காலம் முதல்
இன்றுவரையிலும் சூப்பர் ஹிட்பாடல்களாக நிலைத்துவிட்டன.
இந்தப் படத்தில் வைஜெயந்தி மாலா நீச்சலுடையில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். தேன் நிலவிலும்
அவர் நீச்சலுடையில் நடித்த்தாக கூறப்பட்டாலும்
வண்ணப்படத்தில் இத்தனை மார்பழகை காட்டி அவர்வேறு படங்களில் நடிக்கவில்லை.
அவர் நீச்சலுடையில் நடித்த்தாக கூறப்பட்டாலும்
வண்ணப்படத்தில் இத்தனை மார்பழகை காட்டி அவர்வேறு படங்களில் நடிக்கவில்லை.
நடிகைகளின் மார்பகங்கள் மீது ராஜ்கபூருக்கு தனி வசீகரம் இருக்கத்தான் செய்தது. பழம்பெரும் நர்கிஸ்கூட அவர் படத்தில் ரவிக்கை அணியாமல் வெள்ளைப் புடவையில் நனைந்தபடி ஒருபாடல் காட்சியில்நடித்தார். ஆனால் அவர் முதுகு மட்டுமே ரசிகர்களுக்கு காணக்கிடைத்த்து. ஆவாராவில்நீச்சலுடையிலும் நர்கிஸ்
நடித்தார்.
நடித்தார்.
ராஜ்கபூரின் படங்களில் முக்கியமானது மேரா நாம் ஜோக்கர். இதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்தவர் நாட்டியப் பேரொளி என தமிழ்ப்படங்களில் புகழ் பெற்ற நடிகை பத்மினி. முன்பே அவர் ராஜ்கபூரின் ஜிஸ்
தேஷ் மே கங்கா பெஹ்தி படத்தில் ரவிக்கை அணியாமல் கச்சையும் புடவையும் அணிந்து இலைமறைவு
காய் மறைவாக கவர்ச்சி காட்டியிருந்தார். மேரா நாம் ஜோக்கரில் பத்மினி முற்றும்துறந்துவிட்டார்.
குளியல் காட்சியொன்றில் தனது மார்பகங்களை நிர்வாணமாக அளித்தார். மற்றொருகாட்சியில் சட்டை கிழிந்து ஒரு மார்பு முழுவதும் வெளியே தெரியும்படி நடித்தார். எல்லாவற்றுக்கும்மேலாக ஒருபாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி ரவிக்கை அணியாத மார்பழகை தாராளமாககாட்டினார். ஆனால் முலைக்காம்புகள் தெரியாத வகையில் அதில் பேண்ட அய்ட்
போன்ற ஏதோ ஒருபிளாஸ்தர் ஒட்டியிருந்தனர்
போலும். மற்றபடி மார்பகத்தின் முழு சைசும்
தெரிந்தது.
தேஷ் மே கங்கா பெஹ்தி படத்தில் ரவிக்கை அணியாமல் கச்சையும் புடவையும் அணிந்து இலைமறைவு
காய் மறைவாக கவர்ச்சி காட்டியிருந்தார். மேரா நாம் ஜோக்கரில் பத்மினி முற்றும்துறந்துவிட்டார்.
குளியல் காட்சியொன்றில் தனது மார்பகங்களை நிர்வாணமாக அளித்தார். மற்றொருகாட்சியில் சட்டை கிழிந்து ஒரு மார்பு முழுவதும் வெளியே தெரியும்படி நடித்தார். எல்லாவற்றுக்கும்மேலாக ஒருபாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி ரவிக்கை அணியாத மார்பழகை தாராளமாககாட்டினார். ஆனால் முலைக்காம்புகள் தெரியாத வகையில் அதில் பேண்ட அய்ட்
போன்ற ஏதோ ஒருபிளாஸ்தர் ஒட்டியிருந்தனர்
போலும். மற்றபடி மார்பகத்தின் முழு சைசும்
தெரிந்தது.
ராஜ்கபூரின் இந்த ரசனை ஜீனத் அமனிடமும்
மந்தாகினியிடமும் தொடர்ந்தது.சத்தியம் சிவம் சுந்தரம்படத்தில் ஜீனத் அமன் இதேபோல் நிர்வாணமாக
நடித்தார். ராம்தேரி கங்கா மெய்லியில் மந்தாகினியும்வெள்ளைப் புடவையில் மார்பகத்தை காட்டினார்.
பாலூட்டும் காட்சியிலும் மந்தாகினியின் முழுமார்பகங்களை இந்தி சினிமா ரசிகர்கள் கண்டு களித்தனர்.
மந்தாகினியிடமும் தொடர்ந்தது.சத்தியம் சிவம் சுந்தரம்படத்தில் ஜீனத் அமன் இதேபோல் நிர்வாணமாக
நடித்தார். ராம்தேரி கங்கா மெய்லியில் மந்தாகினியும்வெள்ளைப் புடவையில் மார்பகத்தை காட்டினார்.
பாலூட்டும் காட்சியிலும் மந்தாகினியின் முழுமார்பகங்களை இந்தி சினிமா ரசிகர்கள் கண்டு களித்தனர்.
மேரா நாம் ஜோக்கர் படத்திலும் நிர்வாணக்காட்சிகள் முத்தக்காட்சிகள் இடம்பெற்றன. ஆனால்
பின்னால் சென்சாரால் அவை நீக்கப்பட்டன. இருப்பினும் நடிகை சிமி ஒரு குளத்தில் குளித்து ஆடைமாற்றும் காட்சி அவசர அவசரமாக வந்து போனது.
பின்னால் சென்சாரால் அவை நீக்கப்பட்டன. இருப்பினும் நடிகை சிமி ஒரு குளத்தில் குளித்து ஆடைமாற்றும் காட்சி அவசர அவசரமாக வந்து போனது.
இப்படத்தில் நடித்த ரஷ்ய நடிகை ராஜ்கபூருடன்
முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.
முத்தக்காட்சியில் நடித்திருந்தார்.
பாபி படத்தில் ராஜேஷ் கன்னாவின் மனைவியான
டிம்பிள் கபாடியாவை டூ பீஸ் பிகினியில்அறிமுகம்
செய்தவரும் ராஜ்கபூர்தான்
டிம்பிள் கபாடியாவை டூ பீஸ் பிகினியில்அறிமுகம்
செய்தவரும் ராஜ்கபூர்தான்
ஹென்னா படத்துடன் ராஜ்கபூரின் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்த்து. ஆயினும் அவரது பிற்காலத்துப் படங்களைக்காட்டிலும் ஆரம்பக்காலத்தில் அவர் இயக்கிய, நடித்த கருப்புவெள்ளைப்படங்களும் சங்கம், பிரேம் ரோக், பாபி,மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்களும் ராஜ்கபூர் சினிமாவுக்கு அளித்துள்ள
கொடைகள்.
கொடைகள்.
ராஜ்கபூர் ஜூன் மாதம் 2ம் தேதி தமது 63வது வயதில் காலமானார். அவரது சகோதரர்கள் ஷ்ம்மி கபூர்,சசி கபூர், ரந்தீர் கபூர், மகன் ரிஷிகபூர் மருமகள் நீது சிங், ரந்தீர் கபூரின் மனைவி பபிதா ஷம்மி கபூரின்மகன் ராஜீவ் கபூர், பேத்திகள் கரிஷ்மா கபூர், கரீனா கபூர், பேரன் ரன்பீர் கபூர் என இந்தக் கலையுலககுடும்பத்தின் பெயர்ப்
பட்டியல் சற்று பெரிதுதான்.
பட்டியல் சற்று பெரிதுதான்.
ராஜ்கபூரின் திரைப்படங்களும் அதன் தேனிசைப்
பாடல்களும் எந்த ஒரு புதிய ரசிகனுக்கும் பழைய ரசிகன்
பெற்ற அதே பரவசத்தை தரவல்லவை. அதனாலேயே
ராஜ்கபூரின் இடம் திரையுலகில் ஈடு செய்ய இயலாத
இடமாக இருக்கிறது.
பாடல்களும் எந்த ஒரு புதிய ரசிகனுக்கும் பழைய ரசிகன்
பெற்ற அதே பரவசத்தை தரவல்லவை. அதனாலேயே
ராஜ்கபூரின் இடம் திரையுலகில் ஈடு செய்ய இயலாத
இடமாக இருக்கிறது.
குமுதம்-தீராநதி ஜூன் 2015 இதழில் பிரசுரமானது
K.Jagadish