Wednesday 16 January 2019

புத்தக திருவிழா 2019

சென்னை புத்தக காட்சிக்கு தொடர்ந்து நான்கைந்து தினங்களாகப் போனேன். பல நண்பர்களை சந்திக்க முடிந்தது முதல் மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்யப்புத்திரன், சூத்ரதாரி, கால சுப்பிரமணியம், நிழல் திருநாவுக்கரசு, அழகியசிங்கர், பா.ராகவன், வசந்தகுமார், ரவிசுப்பிரமணியன், அமுதபாரதி , காலச்சுவடு கண்ணன் உள்பட பலருடன் சில மணி்த்துளிகள் உரையாடி எனது இருப்பையும் அவர்களின் உறவையும் புதுப்பித்துக் கொண்டேன்.
பா.ராகவனின் யதி நாவல் பிரமிக்க வைத்தது. வாங்கினேன். படிக்கவும் தொடங்கி விட்டேன். கீரனூர் ஜாகிர்ராஜாவின் நான்கு புத்தகங்கள், பெண் எழுத்தாளர்களின் சிறுகதை நூல்கள், கவிதை நூல்கள், தோப்பில் முகமது மீரானின் சிறுகதை முழுத் தொகுப்பு ,அழகிய சிங்கர் கவிதைகள் என வாங்கிய புத்தகங்கள் இம்முறை அதிகம். சாருவின் பழுப்பு நிற பக்கங்கள் பகுதி 2, 3 மற்றும் மெதுசாவின் மதுக்கோப்பை ஆகியவை வாங்கினேன். கையெழுத்திட்டு தந்தார். ஜீரோ டிகிரி பதிப்பாளர்கள் காயத்ரியையும் ராம்ஜியையும் அறிமுகம் செய்து வைத்தார். அபூர்வமான நபர்கள் என்று முதல் சந்திப்பிலேயே தோன்றியது.
எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் மற்றும் சில புத்தகங்கள் வாங்கினேன். அவர் கையெழுத்திட்டார்.
நண்பர் எம். கோபாலகிருஷ்ணன்( சூத்ரதாரி) எழுதிய மனைமாட்சியும் இந்த ஆண்டின் முக்கிய புதுவரவாக கருதுகிறேன். படிக்க வேண்டும். இன்னும் நிறைய இருக்கின்றன. படிக்கிறேன். எழுதுகிறேன்.
எனது புத்தகம் ஏதும் இந்த ஆண்டும்  வெளியாகவில்லை. அடுத்த புத்தக காட்சிக்குள் நானே பதிப்பாளராகி விட வேண்டும் அல்லது இருக்கும் நல்ல பதிப்பாளர்கள் சிலருடன் உறவை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.




Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...