Thursday 28 June 2018

மோகத் தீ என்னைக் கொன்று விடும்

மோகத் தீ என்னைக் கொன்று விடும்

எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ அங்கெல்லாம் என் ஆசை பறக்கிறது என்று டி.எம்.எஸ் பாடிய 5 லட்சம் படப்பாடல் கேட்டிருப்பீர்கள். இப்போது வளையல்களைக் குலுங்க குலுங்க யாரும் போடுகிறார்களா தெரியவில்லை. ஆனால் பெண் வாசனை எங்கும் உண்டு.
இருசக்கர வாகனங்களில் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து பருத்த தொடைகளை காலின் வளைவுகளை சதைக் கோளங்களை அல்குல் இணையும் இடத்தை புட்டத்தை காட்டி விட்டு விர்ரென பறக்கும் மங்கையரை துரத்துவது வேடிக்கையான விளையாட்டாகப் போய் அது மோகத்தீயாகி விடுகிறது.
பெண் ஒரு போகப்பொருளாக ஏன் தன்னை ஆக்கிக் கொள்கிறாள் என்று புரியவில்லை. பார் பார் என் உடலை என்று அத்தனை விதமாக அதை ஆண் பார்வைக்கு படையல் வைக்கிறாள். ஜீன்ஸ், டைட் லெகிங்ஸ்,மினி ஸ்கர்ட் இப்போது ஷார்ட்ஸ் கூட போடுகிறார்கள். சேலை கட்டினாலும் இடுப்பை தாராளமாக காட்டுவதும் முதுகு தெரிய ரவிக்கை அணிவதும் இயல்பானதாகி விட்டது.
அண்மையில் மலையாள பத்திரிகையின் அட்டைப்படத்தில் திறந்த மார்புடன் பாலூட்டும் ஜில்லு ஜோசப் என்ற மாடல் பெண்ணின் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஆபாசம் பார்ப்பவரின் பார்வையில் இருக்கிறது என்று தீர்ப்பளித்தார். தமிழக அரசோ பாலூட்டும் தாய்மார்களுக்கு பேருந்து நிலையங்களில் தனி அறையைக் கட்டிக் கொடுத்துள்ளது.
பத்திரிகைகள், இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் என பல இடங்களில் பிகினி அணிந்த பெண்கள், டாப்லெஸ் நடிகைகள் என நாளொரு மேனி பொழுதொரு வண்ணம். அதிலும் இலியானாவின் டூ பீஸ் நீச்சலை பார்க்காதவர்கள் துரதிர்ஷ்ட்டசாலிகள்.
மோகத்தை எப்படிஅடக்குவது....பெண்ணுடன் உடல் உறவு அத்தனை சுலபமல்ல.பலவித மன உளைச்சல்களைத் தரக்கூடும். 
காமுகன் பட்டம் தரும் .பணத்தை செலவழிக்க வைக்கும். பொய்யான காதல் நாடகமாட வைக்கும். பாலியல் வழக்குகளில் அலைய வைக்கும். 
எனில் எதற்காக என்னைத் தூண்டுகிறாய் பெண்ணே.....
ஜஸ்ட் லைக் தட் செக்ஸ் ஓகே எனக் கூறும் பெண்ணிடம் பயம் வருகிறது. அப்படியொரு பெண்ணை பார்க்கவில்லை என்றாலும். 

முகநூலில் நட்புடன் ஒரு பெண் பழகினால் அடுத்து அவள் தொலைபேசி எண், நேரில் சந்திப்பதற்கான ஒரு தேதி, என அடுத்த கட்டத்திற்கு வேகமாக போய் விடுகிறோம். 
13 வயதுப் பெண் ஒருத்தி என்னை சந்திக்க வருவதாக தேதி .இடம் குறித்துவிட்டாள். நான் போகாமல் தவிர்த்து விட்டேன். அவளை என் முகநூல் நட்பு வட்டத்தில் இருந்து நீ்க்கினேன். 
இதுவே 30 வயதுப் பெண்ணாக இருந்தால் போயிருக்கக் கூடும்.

எப்போதும் மனசாட்சி சுத்தமாக இருக்குமா எனத் தெரியவில்லை. 
மோகத்தீ என்னை எரித்துக் கொன்று விடும் போலிருக்கிறது.

பெண் என்பவள் ஸ்பரிசம், சுகம் எனக்கு பழகியதுதான் என்றபோதும் கடந்த பல ஆண்டுகளாக அதற்கு ஏங்கியபடிதான் வாழ்க்கை கழிகிறது.
அதற்குக் காரணம் உடலைத் தாண்டி மனதுக்குள் ஒரு பசி இருக்கிறது என்று கூறினால் அது பொய்யல்ல.
பணம் தந்து பேரின்பம் தரும் மசாஜ் சென்டர்களின் அழைப்பு தொலைபேசியில் தினமும் குறுஞ்செய்தியாக வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அணுகியதில்லை.
மும்பையில் காமதிபுராவிலும் புனேயில் சுக்கரவார்ப்பேட்டையிலும் வரிசையாக சாலையில் நிற்கும் பெண்களைக் கடந்து வந்திருக்கிறேன். சென்னையிலும் அண்ணா நகர், தங்கசாலை பகுதிகளில் பேருந்து நிலையத்தில் அழைத்த அழகான பெண்களை ஏனோ அணுகாமல் ஓடி வந்துவிட்டேன்.

அப்படியானால் பெண்ணை நான் விரும்பவில்லையா என்றால் அதிகமாக விரும்புகிறேன் என்றுதான் பதிலளிப்பேன்.

நான் அதிகமாக விரும்பும் ஒரு பெண் என்னை அழைத்தால் என்னால் எப்படி மறுக்கமுடியும். அப்படி நான் நேசிக்கக் கூடிய பெண்ணைத்தான் இத்தனைப் பெண்களிடத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேனோ என்னவோ

1 comment:

  1. கே பாலசந்தரின் மன்மதலீலைக்கு விமர்சனம் எழுத மறந்தீர்களே சார்... அதில் வரும் மன்மத லீலை பாட்டு....கண்ணதாசனின் அனுபவ வரிகள்... சொல்ல முடியாதவை....
    மயக்கம் பிறக்க வைக்கும்
    உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
    மயக்கம் பிறக்க வைக்கும்
    உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
    எனக்கு எனக்கு என்று தனக்குள்
    நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு
    சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
    அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
    அபாயகரமான மலைபாதை திருப்பங்களில் அனாயசமாக காரோட்டும் கலை கண்ணதாசனுக்கு மட்டுமே உரித்தானது....

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...