ழான் பால் சார்த்தர்-
JEAN PAUL SARTRE
சார்த்தர்- பிறந்தநாள் 21 ஜூன்
சார்த்தரின் புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கி சேகரித்துள்ளேன். அதிலும் being and nothingness புத்தகம் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றழைக்கப்படும் இருத்தலியல் குறித்த புத்தகம் என்பதால் அதன் கடுமையான மொழி நடையை மீறி பல முறை வாசித்து பாதியில் நிறுத்திவிட்டேன். அந்தப் புத்தகம் ஒரு பழைய பேப்பர் கடையில் 5 ரூபாய்க்கு வாங்கினேன் என்பதுதான் வேடிக்கை.
சார்த்தர் பற்றி நண்பர்- எழுத்தாளர் பிரபஞ்சன் பல மேடைகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சார்த்தரை கைது செய்ய பிரான்ஸ் போலீசார் நடவடிக்கை எடுத்த போது அதை ரத்து செய்த அப்போதைய பிரெஞ்ச் அதிபர் சார்த்தர்தான் பிரான்ஸ் பிரான்சையே கைது செய்வீர்களா எனக் கேட்டாராம்.
சார்த்தரின் சில தமிழ் பதிப்புகளும் வந்துள்ளன. அவற்றின் மொழிபெயர்ப்புகள் இலகுவாக இல்லை என்பதுடன் சார்த்தரே இலகுவாக வாசிக்கக் கூடிய நபரல்ல என்பதும் முக்கியம்.
வெ.ஸ்ரீராம் போன்ற சிலர்தான் ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் போன்றவர்களை சிறப்பாக மொழிபெயர்க்கிறார்கள்.
சார்த்தரின் இலக்கிய மதிப்பீடுகள், மார்க்சீய கண்ணோட்டங்கள், இருத்தலியல் கோட்பாடுகள் போன்றவை முக்கியமான ஒரு காலகட்டத்தின் பதிவுகள். சைமன் டி போவர் என்ற பெண்மணியுடன் சார்த்தர் கொண்டிருந்த நட்பும் பெரிதாக பேசப்பட்டது. பெண்ணிய நூல்களின் ராணியாக திகழ்ந்தவர்தான் சைமன் டி போவர்.
நோபல் பரிசு அளிக்கப்பட்ட போதும் அதனை வாங்க மறுத்தவர் சார்த்தர். ஒரு எழுத்தாளன் ஒருபோதும் நிறுவனமாகிவிடக் கூடாது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்தார்.
மிகப் பெரிய ஆளுமையாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய சார்த்தரின் உலகை இன்னும் ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்போதைக்கு சுபம்.
சார்த்தர் பற்றி நண்பர்- எழுத்தாளர் பிரபஞ்சன் பல மேடைகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சார்த்தரை கைது செய்ய பிரான்ஸ் போலீசார் நடவடிக்கை எடுத்த போது அதை ரத்து செய்த அப்போதைய பிரெஞ்ச் அதிபர் சார்த்தர்தான் பிரான்ஸ் பிரான்சையே கைது செய்வீர்களா எனக் கேட்டாராம்.
சார்த்தரின் சில தமிழ் பதிப்புகளும் வந்துள்ளன. அவற்றின் மொழிபெயர்ப்புகள் இலகுவாக இல்லை என்பதுடன் சார்த்தரே இலகுவாக வாசிக்கக் கூடிய நபரல்ல என்பதும் முக்கியம்.
வெ.ஸ்ரீராம் போன்ற சிலர்தான் ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் போன்றவர்களை சிறப்பாக மொழிபெயர்க்கிறார்கள்.
சார்த்தரின் இலக்கிய மதிப்பீடுகள், மார்க்சீய கண்ணோட்டங்கள், இருத்தலியல் கோட்பாடுகள் போன்றவை முக்கியமான ஒரு காலகட்டத்தின் பதிவுகள். சைமன் டி போவர் என்ற பெண்மணியுடன் சார்த்தர் கொண்டிருந்த நட்பும் பெரிதாக பேசப்பட்டது. பெண்ணிய நூல்களின் ராணியாக திகழ்ந்தவர்தான் சைமன் டி போவர்.
நோபல் பரிசு அளிக்கப்பட்ட போதும் அதனை வாங்க மறுத்தவர் சார்த்தர். ஒரு எழுத்தாளன் ஒருபோதும் நிறுவனமாகிவிடக் கூடாது என்று அவர் அதற்கு விளக்கம் அளித்தார்.
மிகப் பெரிய ஆளுமையாகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய சார்த்தரின் உலகை இன்னும் ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இப்போதைக்கு சுபம்.
No comments:
Post a Comment