இன்று கண்ணதாசன் -எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாள்
24 ஜூன்
கண்ணதாசன் பாடல்களுடன் வளர்ந்தவன் நான். அந்தப் பாடல்களுக்கு இசையமைத்து என் மனம் கவர்ந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
கண்னதாசன் கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ் என பலருக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இதே போல் எம்.எஸ்.வி.யும் வாலி, புலமைப்பித்தன் உள்பட ஏராளமானோரின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இருந்தாலும் எம்.எஸ்.வி -கண்ணதாசன் காம்பினேசன் அற்புதங்களை நிகழ்த்தியது.
எனக்குப் பிடித்த பாடல்கள் ஏராளம்...இதோ ஒரு சிறிய பட்டியல்
1ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா -அவன்தான் மனிதன்
2.மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாச மலர்
3 நீ வருவாய் என நான் இருந்தேன் -சுஜாதா
4. முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம் - நெஞ்சிருக்கும் வரை
5 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் -நெஞ்சில் ஒரு ஆலயம்
6.இருமனம் கொண்ட திருமண வாழ்வில் -அவர்கள்
7.ஏழு ஸ்வரங்களில் எத்தனைப் பாடல் -அபூர்வ ராகங்கள்
8 கேட்டதும் கொடுப்பவனே - தெய்வமகன்
9. உள்ளத்தில் நல்ல உள்ளம் -கர்ணன்
10.பொன்னை விரும்பும் பூமியிலே -ஆலயமணி
11. கண்ணா நீயும் நானுமா -கௌரவம்
12.அம்மம்மா தம்பி என்று நம்பி -ராஜபார்ட் ரங்கதுரை
13. சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் - மன்னவன் வந்தானடி
14. எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் -எங்கமாமா
15 நான் உன்னை அழைக்கவில்லை -எங்கிருந்தோ வந்தாள்
16. கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான் -ராமு
17 எங்கே நிம்மதி -புதிய பறவை
18 பார்த்த ஞாபகம்இல்லையோ -புதிய பறவை
19 தேவனே என்னைப் பாருங்கள் -ஞான ஒளி
20 சின்னவளை முகம் சிவந்தவளை -புதிய பூமி
21 ஓடும் மேகங்களே -ஆயிரத்தில் ஒருவன்
22 ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
23 பூமாலையில் ஓர்மல்லிகை -ஊட்டி வரை உறவு
24. கிண்கிணி என வரும் மாதா கோவில் மணி ஓசை- தவப்புதல்வன்
25 குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று -குழந்தையும் தெய்வமும்
26 மயக்கமா கலக்கமா -சுமைதாங்கி
இந்தப் பாடல்கள் ஒலித்தால் என் உலகம் ஸ்தம்பித்து விடுகிறது. என்மனம் அற்றுப்போகிறேன்.மிதக்கிறேன். காற்றாகவும் இசையாகவும் கவிதை வரியாகவும் ஆகிப் போகிறேன்.
No comments:
Post a Comment