விளையாட்டுத்தனம், சுடடித்தனம்,நாடகத்தன்மை, கனவுகள், கற்பனைகள், ஆபத்தில்லாத குறும்புகள், வெகுளித்தனம், கலாபூர்வம் நிறைந்தது பால்ய காலம். ஆனால் ஒரு குழந்தை வளரும்போதே நன்றாகப படிக்க வேண்டும் நிறைய மார்க்குகள் வாங்க வேண்டும் படித்து ஆளாகி பெரிய உத்தியோகம் பார்த்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பெற்றோரின் இலக்கு குழந்தைகள் மீது சுமத்தப்படுகிறது. படிப்படியாக அந்தக் குழந்தை வளர வளர தனது பால்ய காலத்தை கழுத்தை நெறித்தும் காலால் நசுக்கியும் கொன்று விடுகிறது. தான் யார் என்பதை மறந்து என்னவோ ஒன்றாக மனிதன் ஆகிப்போகிறான். இந்த சோகத்தை சொல்லும் படம்தான் தமாஷா.
பாடகராக மாறி ஆட்டோக்காரனாக பிழைப்பு நடத்தும் சாதாரண ஏழை மனிதனின் கனவுகள் கலைந்துபோன துயரத்தை ஒரே காட்சியில் காட்டிவிட்டு பணக்கார இளைஞன் ஒருவனின் டையில் அவனது மூச்சு இறுகுவதை படம் முழுவதுமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
நாயகன் ரன்பீர் சிங்கின் தோழியாக வந்து காதலியாக மாறி அவரது தன்னிலையை உணர வைக்கும் அருமையான பாத்திரம் தீபிகா படுகோனேவுக்கு.படத்தின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் கோஸ்டரிகாவில் கண்கவரும் பாறைகளும் கடல்களும் ரவிவர்மனின் ஒளிப்பதிவில் கண்களை வி்ட்டு அகலமறுக்கின்றன. குட்டியான ஷார்ட்சும் ஸ்கர்ட்டும் அணிந்து தொடைகளை பளபளப்பாக காட்டும் தீபிகா முத்தக்காட்சிகளிலும் மெய் மறக்க வைக்கிறார்.
படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் ஏ.ஆர்.ரகுமானின் அற்புத இசையும் இஸ்மாயில் தர்பாரின் பாடல்களும். தமிழ்ப்படங்களில் நாம் கேட்ட ரகுமானின் இசையல்ல இது. பஞ்சாபி இசையும் பிரெஞ்ச் இசையும் கலந்து புதிய மாயாஜாலம் நிகழ்த்துகிறார் இசைப்புயல்
இப்படத்தின் இயக்குனர் இம்தியாஸ் அலி , முன்னர் எடு்த்த படங்களில் சொன்ன சுயத்தை இழக்காதிருத்தல் கதையை இதிலும் சொல்லியிருக்கிறார். ராமாயண காட்சிகளும் ரோமியோ ஜூலியட் காட்சிகளும் கதை சொல்லியாக வரும் தாத்தாவும் அவர் உருவாக்கும் பிரம்மாண்டமான புனைவுலகமும் இய்க்குனரை நம்பிக்கையுடன் வரவேற்க செய்கின்றன.ரன்பீர் கபூர் தமது தந்தையிடம் பால்ய காலத்தை பெற்றோர் நசுக்குவதை விவரிக்கும் காட்சி அற்புதம். நடிப்பில் ரன்பீரும் தீபிகாவும் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்கள். காதல் காட்சிகளிலும் அவர்களுடைய கெமிஸ்ட்ரி கொளுத்தியிருக்கிறது.
இ்ப்படி மிகவும் ரசிக்கத்தக்க படம் பார்த்து எத்தனை நாளாச்சு
பாடகராக மாறி ஆட்டோக்காரனாக பிழைப்பு நடத்தும் சாதாரண ஏழை மனிதனின் கனவுகள் கலைந்துபோன துயரத்தை ஒரே காட்சியில் காட்டிவிட்டு பணக்கார இளைஞன் ஒருவனின் டையில் அவனது மூச்சு இறுகுவதை படம் முழுவதுமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
நாயகன் ரன்பீர் சிங்கின் தோழியாக வந்து காதலியாக மாறி அவரது தன்னிலையை உணர வைக்கும் அருமையான பாத்திரம் தீபிகா படுகோனேவுக்கு.படத்தின் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் கோஸ்டரிகாவில் கண்கவரும் பாறைகளும் கடல்களும் ரவிவர்மனின் ஒளிப்பதிவில் கண்களை வி்ட்டு அகலமறுக்கின்றன. குட்டியான ஷார்ட்சும் ஸ்கர்ட்டும் அணிந்து தொடைகளை பளபளப்பாக காட்டும் தீபிகா முத்தக்காட்சிகளிலும் மெய் மறக்க வைக்கிறார்.
படத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் ஏ.ஆர்.ரகுமானின் அற்புத இசையும் இஸ்மாயில் தர்பாரின் பாடல்களும். தமிழ்ப்படங்களில் நாம் கேட்ட ரகுமானின் இசையல்ல இது. பஞ்சாபி இசையும் பிரெஞ்ச் இசையும் கலந்து புதிய மாயாஜாலம் நிகழ்த்துகிறார் இசைப்புயல்
இப்படத்தின் இயக்குனர் இம்தியாஸ் அலி , முன்னர் எடு்த்த படங்களில் சொன்ன சுயத்தை இழக்காதிருத்தல் கதையை இதிலும் சொல்லியிருக்கிறார். ராமாயண காட்சிகளும் ரோமியோ ஜூலியட் காட்சிகளும் கதை சொல்லியாக வரும் தாத்தாவும் அவர் உருவாக்கும் பிரம்மாண்டமான புனைவுலகமும் இய்க்குனரை நம்பிக்கையுடன் வரவேற்க செய்கின்றன.ரன்பீர் கபூர் தமது தந்தையிடம் பால்ய காலத்தை பெற்றோர் நசுக்குவதை விவரிக்கும் காட்சி அற்புதம். நடிப்பில் ரன்பீரும் தீபிகாவும் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறார்கள். காதல் காட்சிகளிலும் அவர்களுடைய கெமிஸ்ட்ரி கொளுத்தியிருக்கிறது.
இ்ப்படி மிகவும் ரசிக்கத்தக்க படம் பார்த்து எத்தனை நாளாச்சு
No comments:
Post a Comment