இந்த நாவலுக்காக எனக்கு பாஷா பாரதி விருதை CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES மைசூரில் நடைபெற்ற விழாவில் வழங்கியது. இதே விழாவில் நீல பத்மனாபனும் மலையாள மொழிக்கான விருதைப் பெற்றார். கவிஞர் சச்சிதானந்தன், கரம் ஹவா படத்தை இயக்கிய எம்.எஸ்.சத்யூ உள்ளிட்டோர் விழாவை சிறப்பித்தனர். கடந்த 2005 ம் ஆண்டு நடைபெற்ற விழா இது .
----------------------------------------------------------------------------------------------------
கிடங்குத் தெருவுக்கு விருது | |
Thursday, 23 June , 2005, 10:10 | |
சென்னை "செந்தூரம்' ஜெகதீஷ் எழுதிய "கிடங்குத் தெரு' நாவலுக்கு "பாஷா பாரதிய சம்மான்' விருது கிடைத்துள்ளது. மத்திய அரசின் இந்திய மொழிகள் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்படுகிறது. |
-----------------------------------------------------------------------------------
தமிழ் இந்துவில் அண்மையில் வெளியான எனது பேட்டி
இப்போது படிப்பதும் எழுதுவதும் - செந்தூரம் ஜெகதீஷ், எழுத்தாளர்
எனது முந்தைய நாவலான ‘கிடங்குத் தெரு’வைக் கூடுதல் பக்கங்களோடு இன்னும்
சற்றே விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடவே, திருப்பதி ஏழுமலையானின்
சரித்திரப் பின்னணி கொண்ட ஆன்மிக நாவலொன்றையும், நவீன இலக்கியத்தையும்
தமிழ் சினிமாவையும் தொடர்புபடுத்தும் நாவலொன்றையும் ஒரே சமயத்தில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ஈழத்துப் பெண் கவிஞர் அவ்வை எழுதிய ‘எதை நினைந்து அழுவதும் சாத்தியமில்லை’
கவிதை நூலை சமீபத்தில் வாசித்தேன். இளவயதில் கனவாய்த் தொலைந்துபோன காதல்,
வயது கடந்த பிறகு உண்டாகும் காதல் என்று சுயமனதோடு வாழ நினைக்கும் ஒரு
பெண்ணின் மன உணர்வுகளே கவிதைகளாக்கியுள்ளன. ‘அன்பைத் தேடு, பூவாய்
மலர்வேன்’ என்கிற அவ்வையின் கவித்துவமான வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன.
-----------------------------------------------------------------------------------
Saturday March 29, 2003
சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்
ஜெயமோகன்
என் கவனத்துக்கு வந்த நல்ல நூல்களை பற்றி எழுதி அனுப்பும்படி சில நண்பர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்காக இப்பட்டியல். இவற்றில் தமிழினி , காலச்சுவடு நூல்கள் அதிகம். காரணம் இன்று இலக்கிய கவனத்தை அடைந்துள்ள பதிப்பகங்கள் இவையே. நான் படிக்காத நூல்களை சேர்க்கவில்லை. பல நூல்கள் முன்பே படித்தவை. அச்சுக்கோவையிலேயே சென்ற வருடம் படித்த நூல்களும் உள்ளன.பட்டியல் முழுமையல்ல. இது வாசகர் தகவலுக்காக மட்டும்தான் .
கிடங்குத் தெரு - செந்தூரம் ஜெகதீஷ்[தமிழினி பதிப்பகம்]
[ஆசிரியரின் முதல்நாவல். அப்பட்டமான நேர்மையான ஒரு சுய பதிவு சாத்தியமாகியுள்ளமையினால் முக்கியமான படைப்பாகிறது
-------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய இதர பதிவுகள்
என் பயணம் கட்டுரை பெங்களூர் - இதே வலைதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment