Thursday 17 December 2015

அரிதினும் அரிது கேள் 21 காதல் என்பது கற்பனையோ காவியமோ


ரஜினிகாந்தின் அழுத்தமான நடிப்புக்கு பலரும் உதாரணம் காட்டும் படம் ஆறிலிருந்து அறுபது வரை . படத்தில் ஜெயகாந்தனின் நாவல்கள் பிடிக்கும் என்று கூறுகிற தொழிலாளியாக நடித்திருப்பார் ரஜினி. சிறுவயது முதலே உழைப்பால் உயர்ந்து குடும்பத்தை கரை சேர்த்து வைக்கு முதுமையில் யாருடைய துணையுமின்றி தனிமைக்கு தள்ளப்படும் பல்லாயிரம் நடுத்தரக் குடும்பத்தலைவர்களின் சோகமான காவியம் இப்படம். 

ஆண்பிள்ளை என்றாலும் சாண் பிள்ளைதான் அன்றோ என்ற தொடக்க பாடலே கண்களில் நீர் சுரக்க வைக்கும்.ஜென்சியும் சசிரேகாவும் இசைஞானியின் இசையில் பஞ்சு அருணாசலத்தின் பாடல் வரிகளுக்கு உயிர் தந்தனர்

வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன , காலத்தின் கோலம் புரிந்தது , ஞானிதானே நானும் என்ற பாடலை ஜெயச்சந்திரன் மிகவும் உருக்கமாக பாடியிருப்பார்

இப்படத்தில் ஒரே ஒரு காதல் டூயட். எஸ்பி.பாலசுப்பிரமணியமும் எஸ்.ஜானகியும் பாடிய இந்த டூயட்டிலும் சோகம் உண்டு. படத்தின் ஒரு கட்டத்தில் தீவிரமாக காதலித்த ரஜினியை விட்டு பிரிந்து செல்லும் சங்கீதாவுடன் ரஜினி கனவில் பாடும் டூயட் இது.

 சங்கீதா சற்று புஷ்டியான அழகான நடிகை. இப்படத்தில் இந்தப் பாடலில் அவர் கவர்ச்சி விருந்து படைத்திருப்பார், வாளிப்பான தொடைகளையும் தொப்புளையும் பட்டாசு போல் பொறிதட்டும் புன்னகையுமாக சங்கீதா மனதைக் கவர்கிறார். ஆனால் ரஜினியை ஏங்க வைத்து விட்டு சென்றுவிடுகிறார். அதனால்தான் காதல் என்பது கற்பனையோ காவியமோ என பாட வைத்து விடுகிறார். 

அழகான பெண்ணின் காதல் கிடைப்பதும்  அது கிடைக்காமல் பிரிந்து விடுவதும் வாலிப வயதில் ஏற்படும் பெரும் சோகம் . சிலருக்கு அது வயதான கோலத்திலும் நிகழ்கிறது.

  

கண்மணியே காதல் என்பது

கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்தப் பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்


(கண்மணியே)
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்- உந்தன்
தேவையை நானறிவேன்
நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...