இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானும் காஜோலும் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் பல ரசிகர்களின நினைவில் பசுமையாக இருக்கும். அபாரமான அந்த காதல் கதையும் நட்சத்திர ஜோடியின் அழகும் கண்ணை யும் மனத்தையும் விட்டு அகலாது. இனிய பாடல்களின் தாலாட்டும் உண்டு
மும்பை மராத்தா மந்திர் படத்தில் 22 ஆண்டுகளாக இத்திரைப்படம் திரையிடப்பட்டது இந்திய சினிமா வரலாற்றில் முதலும் கடைசியுமாகும்.
எனக்கும் ஷாருக்கான் படங்கள் மிகவும் பிடிக்கும். அற்புதமான நடிகர் அவர். அமீர்கானின் அபாரமான புத்திசாலித்தனமான நடிப்பில் கமல்ஹாசனின் சாயல் தென்படும். ஆனால் ஷாருக்கான் தனித்துவமானவர். அமிதாப் பச்சனுக்குப் பிறகு மனம் கவர்ந்த இந்திப் பட நாயகன் அவர்தான்.
காஜோலுடன் அவர் இணைந்த படங்கள் விசேஷமானவை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. அஜய் தேவகனை மணமுடித்த பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான காஜோல் இந்த படத்தில் கிளிவேஜ் ( மார்பகம்) தெரிய சட்டையும் மினி ஸ்கர்ட்டும் அணிந்து ஷாருக்கானுடன் நெருக்கமான டூயட்டுகளைப் பாடுகிறார் .துப்பாக்கி எடுத்து ஷாருக்கானின் நெஞ்சைப் பிளக்கிறார். அவ்வப்போது தமது குளிர்ச்சியான சிரிப்பால் பல்கேரியாவின் குளிர் பிரதேசங்களில் அனல் மூட்டுகிறார்.
இதே போல் இன்னொரு கதாநாயகியான கீர்த்தி சனோனும் அழகு, சினிமாவுக்கு கிடைத்துள்ள இன்னொரு தேவதை
வருண் தாவனுக்கு பத்லாபுர் போன்ற சீரியசான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். ஷாருக்கானின் பாசமுள்ள தம்பியாகவும் உண்மையான காதலனாகவும் மனம் கவர்கிறார். அவரும் அவர் நண்பர் குழுவும் அடிக்கும் லூட்டிகள் படத்தை கலகலப்பாக்குகின்றன. குறிப்பாக பழைய காமெடி நடிகர் ஜானி லீவர் மணிபாய் பாத்திரத்தில் பின்னி பெடலெடுக்கிறார். போமன் இரானி காமெடி வில்லன், படத்தின் வசனங்களும் பொருள் பதிந்த பாடல்களும் மிகவும் சிறப்பான பங்களிப்பு செய்கின்றன
ஆனாலும் படத்தின் வெற்றிக்கு காரணம் ஷாருக்கான்தான். முன்னாள் டானாக தோன்றும் இடத்தில் அற்புதமான முகபாவங்கள். மெலிந்த உருவத்திலும் ஆக்சன் காட்சிகளி்ல் காட்டும் அபாரம். கார்கள் உடைந்து நொறுங்கும்போதும் துரோகம் புரிந்த காதலியால் சுடப்படும் போதும் ஷாருக்கான் உள்ளத்தை மீண்டும் வருடுகிறார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பதாக படத்தில் காஜோல் கூறும் போது, 15 ஆண்டுகள் பத்துமாதங்கள் 20 நாட்கள் என துல்லியமாக தான் பிரிந்த நாள் கணக்கு வைத்து சொல்லும் போது காதலனாக ஷாருக்கான் கண்கலங்க வைக்கிறார்.
ரோகித் ஷெட்டியின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் என்க்குப்பிடிக்கவிலலை. மிகவும் அபத்தமாக இருநத்து.இநத்ப்படமும் வேறு வகையில் அபத்தமானதுதான். முந்தைய தில்வாலேயின் வெகுளித்தனமான இனிய காதல் கதை இதில் இல்லை. வன்முறை மிக்க வேறொரு காதல்தான் இருக்கிறது. ஆனாலும் இப்படத்தை ரசிக்க முடிந்தது.
No comments:
Post a Comment