Sunday 20 December 2015

பயணம் -5 கூகே சுப்பிரமணியபுரம் ரோடு- தர்மஸ்தலா

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் கூகே சுப்பிரமணியம். இங்கு சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஆயுதங்களை குமார பர்வதம் ஆற்றில் கழுவிய சுப்பிரமணியன் விநாயகர் வீரபாகு சகிதமாக இங்கு வந்ததாக புராணம் குறிப்பிடுகிறது. இ்ங்குதான் நாக தேவனின் மகள் யசோதாவையும்  இந்திரனின மகள் தேவசேனாவையும் சுப்பிரமணியர் மணம் முடிக்க மும்மூர்த்திகளும் திரண்டு வந்து வாழ்ததினர். என்பார்கள்.கருடனால் ஆபத்து நேரிட்டபோது சர்ப்பங்கள் யாவும் சுப்பிரமணியனிடம் அடைக்கலம் தேடிப் புகுந்த தலம் என்பதும் புராணம் கூறும் விளக்கம்.குமார பர்வதம் எனப்படும் மலைத்தொடரில் அழகான இடத்தில் இநத்க் கோவில் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து யஷ்வந்த் புர் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து கார்வார் செல்லும் விரைவு ரயிலில் ஏறினால் அழகான மலைப்பகுதிகளையும் அருவிகளையும் குகைகளையும் கடந்து இந்தக் கோவிலை 9 மணி நேரத்தில் அடையலாம். வழியில் அரிசிகேரியில் இட்லி தோசை நல்ல ருசி.
கோவிலிலும் அருமையான அன்னதானம் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படுகிறது. கர்நாடக உடுப்பி சுவை மணக்கும் ரசமும் கேரட் சாம்பாரும் மனம் கவர்கிறது.சாதத்தை சுடச்சுட பரிமாறுகிறார்கள். கோவிலுக்குள் சட்டை பனியன் கழற்றி செல்ல ஆண்களுக்கு கட்டளை. பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் இல்லை. கோவிலை சுற்றி கடைகளும் விடுதிகளும் ஏராளமாக உள்ளன. பிரம்மாண்டமான தேர் ஒன்று முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கூகே சுபபிரமணியம் ரோடு ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் இந்தக் கோவிலை அடையலாம். கேரள பாணியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்கு 41 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அற்புதமான சைவத்திருத்தலம் தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயம். இங்கு சிவபெருமான் பார்வதியுடன் காட்சியளிக்கிறார். தஙகும் விடுதிகள் 100 முதல் 200 ரூபாய்க்கு அறைகளைத் தருகின்றன. அறைகள் காலியாக இல்லாவிட்டால் பாயும் தலையணையும் தருகின்றன. கூடத்தில் படுத்துக் கொள்ளலாம். இங்கும் சுவை மணக்கும் ரசம் போட்டு அற்புதமான சாப்பாடு போடுகிறார்கள். இரவு பத்துமணி வரை திருப்பதி போல, சில மணி நேரம்  நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து தரிசனம் செய்து அன்னமருந்தி செல்கிறார்கள்.அருகில் ஓடும் ஹேமாவதி ஆற்றில் குளியல் போடுவது சுகமான அனுபவம். ஆற்றில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியானது.



 






ஹேமாவதி ஆற்றுப் படித்துறை அருகே மற்றொரு பிரம்மாண்டமான கோவிலும் உள்ளது. இங்கு ராமர், சீதாப்பிராட்டி, கிருஷ்ணன், அனுமன் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவில் மிகவும் சுத்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...