மறைந்த மணிக்கொடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மௌனி ,ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியன், சிட்டி உள்ளிட்ட பலரைப் பற்றி கலைஞர் செய்திகள் சேனலிலும், சத்தியம் தொலைக்காட்சியிலும் 50க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கி ஒளிபரப்பினேன்.
மேலும், கண்ணதாசன், நகுலன், பிரமீள், கநாசு, சம்பத், ஜி.நாகராஜன், கிருஷ்ணன் நம்பி ஆகிய முக்கிய எழுத்தாளர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன். கிடைத்தற்கரிய அவர்களின் புகைப்படங்கள், குடும்பத்தாரின் பேட்டிகளுடன் அசோகமித்திரன், சச்சிதானந்தன். திருப்பூர் கிருஷ்ணன், சா.கந்தசாமி, வாமனன், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, மனுஷ்யப்புத்திரன் உள்ளிட்டோரின் பேட்டிகளும் இந்த எழுத்தாளர்களின் நினைவலைகளாக பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வீடியோ ஆவணங்களின் ஒரு சில பதிவுகள் மட்டுமே என்னிடம் உள்ளன. பெரும்பாலானவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமே பாதுகாக்கப்படுகின்றன. பல ஆவணங்கள் ்அதன் அருமை தெரியாத சில கத்துக்குட்டிகளால் அழிக்கப்பட்டு விட்டன.எது மிச்சமிருக்கு என்று எனக்கே தெரியவில்லை.
என்னிடம் உள்ளவற்றை சரிபார்க்கவும் என்னிடம் அவகாசம் இல்லை. உப்பு புளி மிளகாய்க்காக ஓடியாடிக் கொண்டிருக்கிறேன்.
இந்நிலையில் வெற்றிகரமாக விக்கிபீடியாவில் குபரா வைப்பற்றி பதிவு செய்துவிட்டேன். அவரது ஆவண வீடியோவும் என்னிடம் உள்ளது. இந்த வலைதளத்தில் பதிவு செய்ய தொழில்நுட்பம் தெரியும் போது உங்களுக்கு கிடைக்கலாம்.
ஆயினும் இந்தப் படங்களை தயாரிக்கும் போது நான் எழுதிய ஸ்கிரிப்ட்டுகளை பிரதி எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன். அவற்றை உங்களுக்கு கட்டுரைகளாக எனது வலைப் பகுதியில் தருவேன்.
இப்படிப்பட்ட முக்கியமான காரியங்களை செய்யும் பலரையும் சந்திக்க விரும்புகிறேன். நாம் சில விஷயங்களுக்கான தொழில்நுட்பத்தை அறிந்து, நிதி ஆதாரத்தையும் தேடிக் கொண்டால் பல அற்புதமான ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் அல்லவா ?
No comments:
Post a Comment