பணக் கஷ்டம்.
இன்று காலை செய்தி வாசிக்கும் நண்பர் மோசஸ் ராபின்சனை சந்தித்த போது, தொப்பையை குறைப்பது பற்றி வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். பட்டினி டயட், நடைப்பயிற்சி என என்ன செய்தும் குறையவில்லை என்று நான் கூறிய போது, இது பணத் தொப்பை என்றார் நண்பர் மோசஸ்.
அதே நாள் மாலையில் நண்பர் சங்கரிடம் பேசும்போது உங்களுக்கு பணம் கஷ்டம் எல்லாம் தீர்ந்துப் போயிருக்கும் இல்லையா சார் என்றார். அவரும் என் தொப்பையை பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
நண்பர்களே வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். பெட்ரோல் போடவும் காசில்லை. இந்த மாதம் பணம் தராவிட்டால் வீட்டில் சாப்பிட வழியில்லை,வாடகை கட்டவும் வக்கில்லை. எனது வயதும் அனுபவமும் அதிகமாகி சிறிய சமரசங்களுக்குப் பணியாமல் போவதால் வரும் துன்பம் இது. இப்படிச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் நிலை எனக்கு மட்டும் தெரியும்.
கடந்த ஆண்டு ஒரு பெரும் துன்பத்திற்கு உள்ளாகி, பணியை இழந்து, ஒரு ரூபாய் வருமானம் இல்லாமல் 6 மாதமாக வீட்டில் இருந்த போதும், பல இடங்களில் நேர்முகத் தேர்வுகளுக்கு போய் அவமானம் பட்டதும் கிடைத்த வேலையிலும் அவமதிப்புகளை தாங்கி வெளியே வந்ததும் பெரிய கதை.
இத்தனை உளைச்சல்களில் நண்பர்கள் நான் வசதியாக இருப்பதாக நினைப்பதற்கு காரணம் என் உடலின் இளமைத் தோற்றமும் தடிமனும் தொப்பையும்.
நான் என்ன செய்வேன் என் நண்பர்களே.? பட்டினியும் எலும்பும் தோலுமாக நான் இருந்து விட்டால் மட்டும் என்ன செய்ய முடியும். என் மீது பரிதாபம் வந்து கடன் தரலாம், பிச்சை போடலாம், முகத்தைத் திருப்பி போய் விடலாம். இதைத் தானே செய்ய முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கஷ்டம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் கஷ்டம் எல்லாம் பணக்கஷ்டம் காரணமாக வந்ததுதான். எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு என்று பாடுகிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். இருக்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்தபடி.
இன்று காலை செய்தி வாசிக்கும் நண்பர் மோசஸ் ராபின்சனை சந்தித்த போது, தொப்பையை குறைப்பது பற்றி வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். பட்டினி டயட், நடைப்பயிற்சி என என்ன செய்தும் குறையவில்லை என்று நான் கூறிய போது, இது பணத் தொப்பை என்றார் நண்பர் மோசஸ்.
அதே நாள் மாலையில் நண்பர் சங்கரிடம் பேசும்போது உங்களுக்கு பணம் கஷ்டம் எல்லாம் தீர்ந்துப் போயிருக்கும் இல்லையா சார் என்றார். அவரும் என் தொப்பையை பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
நண்பர்களே வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். பெட்ரோல் போடவும் காசில்லை. இந்த மாதம் பணம் தராவிட்டால் வீட்டில் சாப்பிட வழியில்லை,வாடகை கட்டவும் வக்கில்லை. எனது வயதும் அனுபவமும் அதிகமாகி சிறிய சமரசங்களுக்குப் பணியாமல் போவதால் வரும் துன்பம் இது. இப்படிச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் நிலை எனக்கு மட்டும் தெரியும்.
கடந்த ஆண்டு ஒரு பெரும் துன்பத்திற்கு உள்ளாகி, பணியை இழந்து, ஒரு ரூபாய் வருமானம் இல்லாமல் 6 மாதமாக வீட்டில் இருந்த போதும், பல இடங்களில் நேர்முகத் தேர்வுகளுக்கு போய் அவமானம் பட்டதும் கிடைத்த வேலையிலும் அவமதிப்புகளை தாங்கி வெளியே வந்ததும் பெரிய கதை.
இத்தனை உளைச்சல்களில் நண்பர்கள் நான் வசதியாக இருப்பதாக நினைப்பதற்கு காரணம் என் உடலின் இளமைத் தோற்றமும் தடிமனும் தொப்பையும்.
நான் என்ன செய்வேன் என் நண்பர்களே.? பட்டினியும் எலும்பும் தோலுமாக நான் இருந்து விட்டால் மட்டும் என்ன செய்ய முடியும். என் மீது பரிதாபம் வந்து கடன் தரலாம், பிச்சை போடலாம், முகத்தைத் திருப்பி போய் விடலாம். இதைத் தானே செய்ய முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கஷ்டம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் கஷ்டம் எல்லாம் பணக்கஷ்டம் காரணமாக வந்ததுதான். எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு என்று பாடுகிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். இருக்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்தபடி.
No comments:
Post a Comment