ஒரு வேண்டுகோள்
இணையத்தில் எழுதப்படும் பெரும்பாலான எழுத்துகள் பதிப்புக்கு வருவதேயில்லை. புத்தக வடிவில் நூலகங்களுக்கோ வாசகர்களுக்கோ அவை கிடைப்பதி்ல்லை. இணைய வடிவில் நானும் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை விரிவாகவும் ஆழமாகவும் எழுதி வருகிறேன்.
1 பயணம்- எனது பயண அனுபவங்கள் தொடர்
2 அரிதினும் அரிது கேள்- சினிமா பாடல்கள் பற்றிய தொடர்
3. சந்திப்பு -நான் சந்தித்த அபூர்வ மனிதர்கள் தொடர்
4. சினிமா கட்டுரைகள்
5 இலக்கியக் கட்டுரைகள்
6.மொழிபெயர்ப்புகள்
7 புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள்
போன்றவற்றை ஓரிரு மணி நேரத்தில் நூல்வடிவில் தொகுப்பது எளிதானது. இவற்றை யாராவது பதிப்பாளர் நண்பர்கள் நூலாக்கம் செய்து எனக்கும் சில பிரதிகள் தந்தால் மகிழ்ச்சியடைவேன். ராயல்டியை விருப்பம் போல தரலாம். அல்லது இவற்றை நூல்களாக மாற்றுவதற்காக யாராவது பொருள் உதவி, ஆலோசனைகள் வழங்கினாலும் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.
இணையத்தில் எப்போதும் பார்க்கலாம் என்றாலும் இணையமே தெரியாத வாசகர்களைக் குறித்தும் நான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. நண்பர்கள் தொலைபேசி எண்ணைத் தெரிவி்த்து ஆலோசனைகளையும் உதவிகளையும் அனுப்பி வைக்கலாம்
எனது இணைய பக்கத்தில் கருத்து பகுதியில் பதிவிடலாம் அல்லது தனிப்பட்ட முறையில் எனக்கு இமெயில் மூலம் அனுப்பலாம். உடனே பதில் வரும் என்று மட்டும் எதிர்பார்க்கவேண்டாம் .எனது வசதியைப் பொருத்து கட்டாயம் பேசுவேன்.பதிலளிப்பேன்.
இமெயில் முகவரி- jagdishshahri@gmail.com
No comments:
Post a Comment