Sunday 12 July 2015

குருதத்தின் இருண்ட உலகம்


குருதத்தின் பியாசாவும் காகஸ் கே பூல் படமும் மனதில் நகரமுடியாத இடத்தில் அமர்ந்துவிட்டன.பலமுறை மீண்டும் மீீண்டும் இவ்விருப்படங்களைப் பார்க்கிறேன். பல பதிப்புகள் வாங்கி வைத்துவிட்டேன். சாகும் வரை என்னோடு இருக்க வேண்டிய புத்தகங்களையும் திரைப்படங்களையும் பாதுகாக்க தொடங்கி மற்றதை கழிக்க ஆரம்பித்துவிட்டேன். குருதத்தின் இவ்விரு படங்களும் என்னோடு என்றும் இருக்கும். அவரது மற்ற படங்களை பற்றி பின்னர் எழுதுகிறேன். இவ்விரு படங்களும் என் வாழ்க்கையுடன் மிகுந்த நெருக்கமான தொடர்புடையவை என்பதால் இவை மட்டுமே இப்போது முக்கியமாகப்படுகின்றன.
குருதத், பிரான்ஸ் காப்கா, ஹென்றி மில்லர் ஆகியோரின் எழுத்துகள், படைப்புகள் என் வாழ்க்கையுடன் நெருக்கமாக உள்ளன. அவர்கள் தரிசித்த ஒளிமிக்க ஒரு இருண்ட உலகை நானும் தரிசிக்கிறேன். அவர்களின் துடிதுடிப்பும் தவிப்பும் என்னிடமும் உள்ளன. சார்லி சாப்ளின்,  சுப்பிரமணிய பாரதி,ஓஷோ ஆகியோரிடம் நான் கொண்ட ஈடுபாடும் இத்தகையதே.எல்லாக் கலைஞர்களும் கண்ணீர்சிந்த கற்றுக் கொடுத்தார்கள். ஓஷோ மட்டும்தான் கண்ணீரைப் புன்னகையாக மாற்றக்கூடிய ரசாயனத்தை சொல்லிக் கொடுத்தார்.இந்த மகத்தான கலைஞர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கமும்.
குருதத் பற்றி ஒருசிறு கட்டுரைத் தொடரை இப்பகுதியில் தொடங்க விருப்பம். கவனித்துக் கொண்டே இருங்கள். அடுத்தடுத்து காப்கா, ஹென்றி மில்லர், ஓஷோ பற்றியும் எழுத ஆசைதான்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...