Tuesday 21 July 2015

அரிதினும் அரிது கேள் 9 வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம்

                                                             
                                       

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் நடிப்பதற்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகமான புதிதில் அவர் கதாநாயகனாகவும் நடித்தார். ஜெயலலிதாவின் முதல் திரைப்பட கதாநாயகன் அவர்தான். ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடையில் நடித்தவர் ஸ்ரீகாந்த்
வாய்ப்புகள் குறைந்த பின்னர்  அவர் வில்லனாகவும் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக இந்தியில் வெளியான ராதா சலூஜா நடித்த தோரகா படத்தின் தமிழ் ரீமேக்கான அவள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தோரகா கதை குடும்பப் பெண்ணின் கற்பழிப்புக்கு காரணமாக உள்ள உல்லாச வாழ்க்கை மோகத்தை சித்தரிக்கும் கதை. இந்திப்படத்தில் கற்பழிப்புக்காட்சி மிகவும் அப்பட்டமாக இருந்தது. இந்தி வில்லன் ரூபேஷ்குமார் ராதா சலூஜாவின் பிராவை பிய்த்து எறியும் வரை கற்பழிப்பு காட்சி கேமராவில் பதிவானது. இந்த படத்தைப் பார்த்துதான் எம்ஜிஆரும் ராதா சலூஜாவை இதயக்கனியிலும் இன்று போல் என்றும் வாழ்க படத்திலும் கதாநாயகியாக்கியிருப்பார். இரண்டு படங்களிலும் தோரகாவிலும் ராதா சலூஜா நீச்சலுடையில் நடித்தார்
தமிழ்ப்படமான அவள் படத்தில் ராதாசலூஜா வேடத்தில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா.கதாநாயகன் தீ விபத்தில் மனைவியைக் காப்பாற்ற போய் உயிரிழந்த சசிகுமார். இப்படத்தில்தான் வில்லனாக நடித்து ஸ்ரீகாந்த் தோரகா வில்லனாக புகழ் பெற்றார். தமிழில் கவர்ச்சி குறைவுதான். ஆனால் ஸ்ரீகாந்த் நடித்த ஒவ்வொரு படத்திலும் ஒரு ரேப் இடம் பெற்றது. இந்த இமேஜை உடைத்தெறிய அவர் படாத பாடு பட்டார். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மகனாக வில்லனாக நடித்து பெயர் பெற்றார். இதே போல் தனிக் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார் ஸ்ரீகாந்த்.அந்தப் படங்களில் ஒன்றுதான் ராஜநாகம்
இதில் இரண்டு கதாநாயகிகள் மஞ்சுளா, சுபா. மஞ்சுளா எம்ஜிஆர் சிவாஜி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார். சுபாவும் எம்ஜிஆரின் நவரத்தினம், ஜெய்சங்கரின் அன்று சிந்திய ரத்தம் போன்ற படங்களில் நடித்தவர். இப்படம் கன்னட படம் ஒன்றின் ரீமேக். மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என மாணவனாக ஸ்ரீகாந்த் புதிய அவதாரம் எடுத்தார். அவர் காதலிக்கும் பெண் கிறித்துவப் பெண்ணான மஞ்சுளா இப்படத்தில் ஒரு பாடல் வரும் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
முதலில் வரும் தொகையறாவில்
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே உமது நாமம் ரட்சிப்பதாக எனத் தொடங்கும் அந்தப் பாடலில் அடுத்து பகவத் கீதையின் ஸ்லோகம் ஒலிக்கும் பரித்ராநாய சம்பவாமி யுகே யுகே.......


தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒருபாதையில் இங்கு சங்கமம்
ஒரு பாதையில் இங்கு சங்கமம்

மாதாவின் வாழ்த்துகள் மணியோசை சொல்லட்டும் காதல் வாழ்கவென்று
கண்ணன் எங்கே ராதை அங்கே குழலோசை வாழ்த்தும் உண்டு
நீவேறு நான் வேறு அன்று
நீயின்றி நானில்லை இன்று

ஒரு பாடலில் இங்கு சங்கமம்

நெஞ்சோடும் நினைவோடும் நீங்காமல் வாழும் சிலுவை நீயன்றோ
வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம் கண்ணே உன் கண்ணில் உண்டோ
தட்டுங்கள் கேளுங்கள் என்றும் உண்டு
தருமங்கள் எங்கேயும் ஒன்று

ஒரு பாடலில் இன்று சங்கமம்


என்று பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பி,சுசிலாவும் அற்புதமாக பாடியிருப்பார்கள். பாடலாசிரியர் வாலி இசை வி.குமார்





கண்ணன் கீதையும் தேவன் வேதமும் ஒரு பாடலில் சங்கமிக்கிற இந்த இனிய பாடல் சிறு வயது முதலே என்னை மிகவும் ஆள்கின்ற பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இப்பாடல் மோசர் பேர் முன்னர் வெளியிட்ட ராஜநாகம் டிவிடியில் கிடைக்கலாம். அல்லது பழைய எஸ்.பி.பி கலெக்சன்களில் இருக்கலாம். தேடி கேட்டுப்பாருங்கள் கீதையும் பைபிளும் சேர்ந்து படித்த சந்தோஷம் கிடைக்கும் 

2 comments:

  1. வின் பார்த்திக்கு நன்றி தவறு திருத்தப்பட்டது.

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...