சங்கர்-கணேஷ் பல படங்களுக்கு இசையமைத்தனர். அதில் ஒன்று நீயா...இளையராஜா உச்சத்தில் இருக்கும்போது சங்கர் கணேஷ், பின்னுக்குத் தள்ளப்பட்டனர். சில படங்களில் சங்கர் கணேஷ் இளையராஜா போலவே இசையமைக்க முயற்சித்தனர். ஆயினும் தனித்து நின்றது பாலைவனச்சோலை, கன்னிப் பருவத்திலே மாதிரி படங்களில் தான்.எம்.எஸ்.வி காலத்திலும் எம்ஜிஆருக்காக இதயவீணை, நான் ஏன் பிறந்தேன் படங்களுக்கு இசையமைத்தனர். அந்தப் பாடல்களை கேட்டால் எம்.எஸ்.வி பாடல்கள் போலவே இருக்கும்.சில பாடல்கள் தழுவலாகவும் இருக்கும் எனினும் எனக்கு சங்கர் கணேஷின் இனிய பாடல்கள் யாவும் அத்துப்படிதான்.
நீயா படத்திற்கு சங்கர் கணேஷ்தான் இசை. இந்தப் படம் இந்தியில் வெளியான நாகின் படத்தின் தழுவலாகும். இந்தியில் சுனில்தத், பெரோஸ் கான், சஞ்சய் கான், ஜித்தேந்திரா, கபீர் பேடி, வினோத் மெஹ்ரா போன்ற முன்னணி நடிகர்களும் ரீனாராய், ரேகா, மும்தாஜ், ஆஷா சச்தேவ் போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் கோஹிலி மல்டி ஸ்டார் படங்களுக்கு புகழ் பெற்றவர் . பல நடிகர்கள் பணம் வாங்காமலே அவர் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துக் கொடுப்பார்கள். நீயா அவரது மகத்தான வெற்றிப்படம். இப்படத்தின் இசை கல்யாண்ஜி-ஆனந்த்ஜி
இந்தியில் வெளியான இரண்டு முக்கியமான டியூன்களை அப்படியே வைத்துக் கொண்டு சங்கர்-கணேஷ் தமிழுக்கு இசையமைத்தனர். படத்தின் இயக்குனர் துரை.
துரை தீவிர எம்ஜிஆர் விசுவாசி. கையில் அதிமுக கொடியை பச்சைக் குத்தியவர்களில் அவரும் ஒருவர். எம்.ஜிஆர் படத்தில் பாடல்கள் எழுதிய வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு போன்றோருக்கு பாடல் எழுத நீயாவில் வாய்ப்பளித்தார். இதில் ஒரு பாடல் மட்டும் கண்ணதாசன் எழுதினார். அதுதான் படத்தில் அடிக்கடி ஒலிக்கும் பாட்டு
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா......
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா...
பெ : ஓ.... ஓ....ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
இசை
பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான் ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே பெ: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான் ஆ: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே பெ: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான் ஆ: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே பெ: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை
வாராய் கண்ணா...ஆ... ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
இசை ஆ: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன பெ: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க ஆ: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும் பெ: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
தேர் கொண்டு வா....
கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்.... ஆ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
இசை
பெ: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும் பெ: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் ஆ: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம் பெ: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும் ஆ: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே... பெ: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.
இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும். எஸ்.பி.பி குரலை லாவகமாக வளைத்து வளைத்துப் பாட அவருககு ஈடு கொடுத்து வாணி ஜெயராம் தனது தேன் குரலால் பாடலின் தரத்தை உயர்த்திவி்ட்டார். இந்தியில் லதாவும் கிஷோரும் பாடிய அந்த டூயட் தமிழில் தனியொரு அனுபவமாக மாறியதற்கு காரணம் சங்கர் கணேஷ்
சுனில் தத் வேடத்தில் கமல்ஹாசன் நடித்தார். ஆனால் படத்தின் இந்த முக்கியமான பாடல் பாம்பாக வரும் ஸ்ரீப்ரியாவிற்கும் அவர் காதலனாக நடித்த ஜெய்கணேசுக்கும் தான் கிடைத்தது.ரவிச்சந்திரன், விஜயகுமார், ஸ்ரீகாந்த், தீபா போன்றவர்களும் இப்படத்தில் நடித்தனர். பாம்பு வேடத்தில் நடித்த ஸ்ரீப்ரியா சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் இந்திப் படமான நாகின் படத்தைப் பார்த்து தாமே இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார்.
கமலுக்கு ஜோடி எம்ஜிஆர் நாயகியான லதா....லதாவுக்கு இந்தியில் ரேகா நடித்த வேடம். இந்தியில் முகமது ரபியும் ஆஷா போன்ஸ்லேயும் பாடிய ஒரு பாடலுக்கு தமிழில் கமலும் லதாவும் நடித்தார்கள். அது இப்படத்தின் இரண்டாவது அற்புதமான பாடலாக மாறியது. இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பியும் பி.சுசிலாவும்.
நான் கட்டில் மேல் கண்டேன் வெண்ணிலா....
ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்
ஆண் : நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
(இசை) சரணம் - 1
பெண் : காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
ஆண் : அது புரியாததா நான் அறியாததா
அது புரி....யாததா நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா
பெண் : எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா
(இசை) சரணம் - 2
ஆண் : ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
பெண் : ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
ஆண் : அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
ஆண் : நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
இ்வ்விரு பாடல்களைத் தவிர இந்தப் படத்தில் உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை( புலமைப்பித்தன்) ஒரு கோடி இன்பங்கள்( ஆலங்குடி சோமு) போன்ற பாடல்கள் இடம்பெற்றாலும் இந்த இரண்டு பாடல்களும் மீண்டும் ஒருமுறை கண்ணதாசன், வாலியின் திறமைக்கு சான்றாக விளங்கின.
No comments:
Post a Comment