Tuesday 4 August 2015

அரிதினும் அரிது கேள் 13 மழைச்சாரலில் இளம் பூங்குயில்


மழைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா, துணை நீயல்லவா
இந்த கீதம் நான் பாடும் நாள் அல்லவா

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழைகூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழிதேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இன்ப நாதம் கலையாத இசையானது
பனி தூங்கும் மலரே உன் மடி என்பது இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
இதில் சசிரேகா ஹம்மிங் மட்டும் பாடியிருப்பார்.ஜேசுதாசின் குரல் மிக இனியமையாகவும் இளமையாகவும் ஒலிக்கிறது. முத்துராமனின் ஆரம்பக் காலப் படங்களி்ல் பிபிஸ்ரீநிவாஸ் பின்னணி பாடியிருப்பார். போலீஸ்காரன் மகள், காதலிக்க நேரமில்லை, என்மகன், நெஞ்சில் ஒரு ஆலயம், போன்ற படங்களை கூறலாம், காதலிக்கும் நேரமில்லை படத்தில் நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா பாடலையம் ஜேசுதாஸ் பாடினார், அதையும் பிபிஸ்ரீநிவாஸ்தான் என பலரும் நினைத்து விட்டனர். அப்போது ஜேசுதாஸ் புதியவர். பின்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் ஜேசுதாசும் முத்துராமனுக்கு தூண்டில் மீன், எல்லோரும் நல்லவரே போன்ற படங்களில் பாடியிருக்கிறார்கள். எஸ்.பி.பி. சம்சாரம் என்பது வீணை என மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் முத்துராமனே பாடுவது போல் அற்புதமாக தனது குரலை வழங்கினார். அதே படத்தில் ஜேசுதாசும் வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் என பாடினார். இதில் ஜேசுதாசின் குரல் முத்துராமனுக்கு அற்புதமாக பொருந்தியது. இதன் காரணமாக மேலும் சில பாடல்கள் ஜேசுதாஸ் பாடி முத்துராமன் நடித்திருந்தார்.  இந்தப் பாடல் ஜேசுதாஸ் பாடல்கள் கலெக்சன்களில் (உரிமம் பெறாத சிடி) கிடைக்கிறது. you tube ல் இப்படமும் பாடல்களும் கிடைக்கின்றன. இதுபோன்ற பாடல்களை முறைப்படி பாதுகாக்க அரசும் சரி, கோடி கோடியாக சம்பாதிக்கும் திரையுலகமும் சரி கவலைப்படுவதாக தெரியவில்லை. என்னைப் போன்ற அற்பமான ரசிகர்கள்தான் பாதுகாத்து வைத்திருக்கிறோம்.
சங்கர் கணேஷ் இசையமைத்த ஒரு குடும்பத்தின் கதை படத்திலிருந்து இந்தப் பாடலை நான் பலமுறை கேட்டு மகிழ்கிறேன். முத்துராமன், சுமித்ரா ,நந்திதா போஸ் ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் இயக்குனர் துரை. பாடலாசிரியர் கண்ணதாசனா வாலியா என்று தெரியவில்லை. ஜேசுதாசும் பி.எஸ்.சசிரேகாவும் பாடிய இப்பாடல் மழைக்காலத் தென்றல் போல் பலமுறை என்னைத் தாலாட்டியிருக்கிறது.

--------------------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...