நாளை மற்றொரு நாளே என்ற ஜி.நாகராஜனின் நாவல் தலைப்பு மனதுக்குள் நிறைந்துள்ளது. அதனால் புத்தாண்டு, தீபாவளி போன்ற கொண்டாட்டங்களின் போது கூறுவதற்கு ஒன்றுமில்லை. இந்த ஆண்டும் எனக்கு காதலில் வெறுமையும் ஏமாற்றமும் நீடிக்கும் என்று ராசிபலன் கூறுகிறது. எந்த உற்சாகத்தில் வாழ்த்துக் கூறுவது என்றே தெரியவில்லை. நண்பர்கள் ஓயாமல் தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்தி மகிழ்கிறார்கள். தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன். எங்கே மனிதன் யாருமில்லையோ அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்ற கண்ணதாசனின் அழுகுரலும் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. திடீரென நேற்றிரவு முதலே துயரமான மனநிலைக்கு ஆட்பட்டு விட்டேன். கடந்த 2016ம் ஆண்டு தந்தையை இழந்தது ஒரு சோகத்தை உருவாக்கியது ஒரு காரணமாக இருக்கலாம்.
இருப்பினும் எனது உணர்வுகளால் மற்றவர்களின் உற்சாகத்துக்கு தடை சொல்ல முடியாது. என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment