Thursday 8 December 2016

அஞ்சலி -ஜெயலலிதா




தமிழக மக்களின் அபிமானத்தைப் பெரிய அளவில் பெற்றவர் ஜெயலலிதா.அவருடைய அரசியல் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எம்ஜிஆரால் அழைத்து வரப்பட்டவர் என்றும் எம்ஜிஆரைப் போல் தம்மை அரசியலுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் கூறப்படுவது உண்மைதான். திராவிட இயக்கங்களால் தமிழகம் வறட்டுத்தனமான பெரியாரின்நா த்திகப் பாதைக்குத் திரும்பிவிடாமல் ஆன்மீகப் பாதைக்கு அழைத்து வந்ததில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பங்கு  முக்கியமானது என்று கூறப்படுவதை மறுக்க முடியாது. எனக்கு நடிகையாக பார்த்த ஜெயலலிதாவின் திறன்கள் நடனம், அபிநயம், அழகு எல்லாமே மறக்க முடியாத பதிவுகள். தமிழக முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் குறைவாக இருப்பினும் மக்களின் அன்பை முழுமையாகப் பெற்றவர். இன்னும் பல காலம் வாழ வேண்டியவர் போய் விட்டது நம்ப முடியாததாக உள்ளது. கடைசியில் வாழ்க்கையை மரணம் தான் ஜெயித்து விடுகிறது.



ஜெயலலிதாவின் பாடல்களில் கட்டழகுத் தங்க மகள் திருநாளோ என்ற காவல்காரன் படப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். வாலி எழுதிய இந்தப் பாடலில் என் கண்களில் நீ தரும் தரிசனமோ என்ற வரிகளில் நெகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.


ஜெயலலிதா நடித்த சிறந்த படங்கள் என பட்டியலிட்டால் எம்ஜிஆருடன்
ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், அன்னமிட்டகை, நம்நாடு, ராமன் தேடி சீதை, தேடி வந்த மாப்பிள்ளை, காவல்காரன், புதிய பூமி ,கண்ணன் என் காதலன், சந்திரோதயம் , ஒருதாய் மக்கள் ,என் அண்ணன், ரகசிய போலீஸ் 115
போன்ற படங்களை சொல்லலாம்
சிவாஜி கணேசனுடன்
ராஜா, சுமதி என் சுந்தரி, எங்கிருந்தோ வந்தாள், அவன்தான் மனிதன், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி, தெய்வமகன் ,எங்க ஊர் ராஜா , எங்க மாமா, கலாட்டா கல்யாணம், போன்ற படங்கள் நினைவில் நிற்கின்றன.
கமலுடன் ஒரே ஒரு படத்தில் ( அன்பு தங்கை ) மேனகையாக நடனமாடியிருக்கிறார் ஜெயலலிதா. ரஜினியுடன் தமது கடைசி படமான நதியைத் தேடி வந்த கடல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்தப் படத்தில் சரத்பாபு நடித்தார்.

முத்துராமனோடு சூரியகாந்தி. ஜெய்சங்கருடன் யார்நீ, பொம்மலாட்டம், வைரம்,  ரவிச்சந்திரனுடன் நான், மூன்றெழுத்து, குமரிப்பெண், ஜெமினி கணேசனுடன் அன்னை வேளாங்கண்ணி என்று பலதரப்பட்ட படங்களில் பலவித வேடங்களில்  ஜெயலலிதாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.

அவர் மிகச்சிறந்த பாடகியும் கூட. அம்மா என்றால் அன்பு பாடல் நல்ல உதாரணம், ஆனால் அந்தப் பாடலை எழுதிய வாலி மறைந்த போது ஒரு இரங்கல் குறிப்பைக் கூட முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடவில்லை. அதே போல் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்காக வந்த வடிவேலு திருப்பி அனுப்பப்பட்டதும் ஜெயலலிதாவுக்கு குரல் கொடுத்த பி.சுசிலா பத்துடன் பதினொன்றாக கூட்டத்தில் வந்து போனதும் தான் மனதுக்கு வருத்தமளிக்கிறது. மகத்தான கலைஞர்களை மதிக்க வேண்டாமா.......

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...