நண்பர் கவிஞர் தமிழ்மணவாளனின் புதிய கவிதை நூல்- உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் வெளியீட்டுவிழா டிசம்பர் 24-2016 சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபஞ்சன், எஸ்.சண்முகம் ஆகியோரின் அடர்த்தியான உரைகள் நவீன கவிதைகள் குறித்த பொது அபிப்ராயங்களை கேள்விக்குட்படுத்தி நீண்ட விவாதத்திற்கு வழி வகுத்தன. லதா ராமகிருஷ்ணன், சொர்ணபாரதி, சூரியதாஸ்,விஜயேந்திரா உள்ளிட்ட படைப்பாளிகளும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.
பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, கல்கி துணை ஆசிரியர் அமிர்தம் சூர்யா, தளம் இதழ் ஆசிரியர் பாரவி உட்பட ஏராளமான இலக்கிய முகங்களை காண முடிந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு நிறைவான இலக்கிய நிகழ்வு. சாத்தியமாக்கிய தமிழ் மணவாளனுக்கு நன்றியும் வாழ்த்தும்
பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, கல்கி துணை ஆசிரியர் அமிர்தம் சூர்யா, தளம் இதழ் ஆசிரியர் பாரவி உட்பட ஏராளமான இலக்கிய முகங்களை காண முடிந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு நிறைவான இலக்கிய நிகழ்வு. சாத்தியமாக்கிய தமிழ் மணவாளனுக்கு நன்றியும் வாழ்த்தும்
No comments:
Post a Comment