கல்யாண்ஜி என்ற பெயரில் அகரம் பதிப்பகம் வெளியிட்ட புலரி தொகுப்பு முதல் கல்யாணசுந்தரத்தை பரிச்சயம் செய்து சில சந்தர்ப்பங்களி்ல் நேரிலும் கலந்துரையாடியிருக்கிறேன். (அவருடைய தந்தை திகசியுடனும் இணக்கமான நட்பு இருந்தது. திருநெல்வேலி டவுனில் உள்ள சுடலைமாடன் வீதிக்கு திகசியை சந்திக்க ஓரிரு முறை போயிருக்கிறேன்.)
வண்ணதாசன் என்ற பெயரில் கல்யாண்ஜி எழுதும் ஏராளமான கதைகளை வாசித்தும் இருக்கிறேன், கோவை ஞானியின் களம் கூட்டங்களில் வண்ணதாசன் படைப்புகள் குறித்து பேசியிருக்கிறோம். அவருடைய கடிதங்கள் தொகுதிக்கு நிகழ் இதழில் விமர்சனமும் எழுதியிருக்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் வண்ணதாசன் ஒருவர். மென்மையான உணர்வுகளுடைய அற்புதமான மனிதர் என்பதை வாசிப்பிலும் அனுபவத்திலும் அறிந்திருக்கிறேன்.அவருக்கு தாமதமாகவேனும் சாகி்த்ய அகாடமி அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய விருதுடன் அவருக்கு சாகித்ய அகாடமி கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் மானசீகமாக நன்றி. வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்.
வண்ணதாசன் என்ற பெயரில் கல்யாண்ஜி எழுதும் ஏராளமான கதைகளை வாசித்தும் இருக்கிறேன், கோவை ஞானியின் களம் கூட்டங்களில் வண்ணதாசன் படைப்புகள் குறித்து பேசியிருக்கிறோம். அவருடைய கடிதங்கள் தொகுதிக்கு நிகழ் இதழில் விமர்சனமும் எழுதியிருக்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் வண்ணதாசன் ஒருவர். மென்மையான உணர்வுகளுடைய அற்புதமான மனிதர் என்பதை வாசிப்பிலும் அனுபவத்திலும் அறிந்திருக்கிறேன்.அவருக்கு தாமதமாகவேனும் சாகி்த்ய அகாடமி அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய விருதுடன் அவருக்கு சாகித்ய அகாடமி கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் மானசீகமாக நன்றி. வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment