Thursday 5 November 2020
the international movie
தி இன்டர்நேஷனல் என்ற படம் பார்த்தேன்.முழுவதும் பார்த்தேன்.இத்தனைக்கும் படத்தில் ஒரு முத்தக்காட்சி கூட இல்லை. சுத்தமான யு படம். கதாநாயகன் ஒரு இன்டர்போல் ஏஜன்ட்.கதாநாயகி ஒரு மாவட்ட ஆட்சியர் மட்டத்தில் உள்ள ஒரு அதிகாரி. பன்னாட்டு வங்கி ஒன்று ஆயுதங்களை வாங்கி விற்பனை செய்ய பெரிய முதலீடு செய்கிறது .உலகில் அணு ஆயுதங்களை எல்லா நாடுகளும் குவித்து வைப்பதால் பெரும் போர்களுக்கு வாய்ப்பு இல்லாத கட்டாயம். ஆனாலும் மூன்றாவது உலக நாடுகளில் சிறிய யுத்தங்கள், மோதல்கள், கிளர்ச்சிகள்,புரட்சிகள் வெடிக்கின்றன.அதற்கு எல்லோரும் சிறிய ஆயுதங்களை வாங்க பல ஆயிரம் மில்லியன் டாலர்கள் செலவு செய்கின்றனர். ஆயுத பேரம் மூலம் அந்த பன்னாட்டு வங்கிக்கு அதிகமான லாபமில்லாத போதும் ஏன் அதில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?அந்த வங்கி ஆயுதங்களை தீவிரவாதிகள் கையில் கொடுத்து அதிக லாபம் காண்கிறது. ஆயுதங்களை தன் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இந்த உண்மையை அறிந்த நபர்கள் கொல்லப்படுகின்றனர். சர்வதேச சட்டங்கள்,வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளில் மோதலை மறைமுகமாக தூண்டி விடுகின்றன. எல்லோருக்கும் ஆதாயம் இருக்கிறது.யாரும் இந்த ஆட்டத்தை நிறுத்த முடியாது. சட்டமும் சிஸ்டமும் இடம் தராது.இதனை கிளைமேக்ஸில் உணர்கிறான் படத்தின் நாயகன்.சட்டத்தை விட்டு சிஸ்டத்தை மீறி அந்த கொடூர ரத்த வெறி பிடித்த ஆட்டத்துக்கு அவன் முடிவு கட்டுகிறான். படம் நல்ல திரைக்கதை வசனங்கள் சண்டை சாகச காட்சிகளுடன் விறுவிறு என நகர்கிறது.ஒரு லிப்டில் நாயகி நாயகனை பார்க்கும் போது அவன் முக வாட்டத்தை கவனிக்கிறாள்.ஷேவிங் செய்யாத முகம்.உறங்காத கண்கள். காலையில் சாப்பிட்டாயா என்று கேட்க நினைவில்லை என்கிறான்.தூங்கி எத்தனை நாளாச்சு எனக் கேட்கிறாள். தெரியவில்லை என்கிறான் ஒரு பெண்ணை படுக்கையில் பார்த்து எத்தனை நாளாச்சு என்றும் கேட்கிறாள் .Are you offering me என்று அவன் திருப்பி கேட்க நோ என்று அவள் சிரிக்கிறாள்.படத்தில் உள்ள ஒரேயொரு ரொமான்ஸ் காட்சி இதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment