Saturday 13 August 2016

செந்தூரம்

செந்தூரம் என்றால் ஏதோ ஒரு ஊர் என்று நினைத்துக் கொண்டு என்னை சென்னைவாசி அல்ல என்று முடிவு கட்டி விட்டாராம் ஒரு நண்பர். அவர் காலச்சுவடு அலுவலகத்திலும் போய் கேட்டிருக்கிறார். செந்தூரம் என்ற ஊர் எங்கே என்று. அவர் என்னிடம் கூறிய போது இப்படியும் அறியாமையா என்று கருதினேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
செந்தூரம் கையெழுத்துப்  பத்திரிகையிலிருந்து அச்சானது. செந்தூரம் இதழில் இன்குலாப், பெரியார்தாசன், பிரபஞ்சன், எம்ஜி வல்லபன், இயக்குனர் ஜெயபாரதி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சூர்யராஜன், ஷாராஜ், வா.மு.கோமு போன்ற பலரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.
 19 செந்தூரம் இதழ்கள் மற்றும் செந்தூரம் இலக்கிய வட்டத்தின் நூற்றுக்கணக்கான புத்தக வெளியீட்டுவிழாக்கள், நிகழ்ச்சிகளில் எனது பெயர் செந்தூரம் என்ற பெயருடன் ஒட்டிக் கொண்டது. இதனால் செந்தூரம் ஜெகதீஷ் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். அதுவும் இருபது வருடங்களாகி விட்டது.




பல நூறு கட்டுரைகள், இரண்டு கவிதைப்புத்தகங்கள், கிடங்குத்தெரு நாவல், மாசோக்கிசம் பற்றிய மொழிபெயர்ப்பு நாவல், சிறகுப்பருவம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவும் வெளியாகி உள்ளன. மேலும் இணையத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த வலைப்பக்கத்தில் 185 க்கும் மேற்பட்ட பதிவுகளை செய்து சுமார் 21 ஆயிரம் வாசகர்களை எட்டியிருக்கிறேன்.என்னைப் பற்றிய விவரம் ஒரு சிலவே ஆயினும் கூகுள் தேடலிலும் கண்டுபிடிக்க முடியும். ஓஷோவை தீவிர வாசகர்கள் மற்றும் சிற்றிதழ் வட்டத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட முதல் நபர் நான்தான். அதே போல் சீரியஸான சினிமா சிறப்பிதழ் தயாரித்த முதல் சிறுபத்திரிகையும் செந்தூரம்தான். அதன் பின்னர் தான் சலனம் முதல் காட்சிப்பிழை வரை பல பத்திரிகைகள் தோன்றின.

முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவன் என்ற முறையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செந்தூரம் ஜெகதீஷ் என்ற பெயர் பதிவானது. கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் என்ற பெயரில் எழுத்தாளர்கள் வாழ்க்கை குறித்த ஆவணப்படங்களையும் சிற்றிதழ்களின் வரலாற்றையும் 22 வாரங்களுக்கு அரைமணி நேரம் நிகழ்ச்சியாக வழங்கியிருக்கிறேன். அசோகமித்திரன், ஞானக்கூத்தன், கி.அ.சச்சிதானந்தன், வாமு,கோமு, மனுஷ்யபுத்திரன், வாமனன் போன்ற பலரின் பேட்டிகளையும் அதில் பதிவு செய்திருக்கிறேன்.






இனிமேல் செந்தூரம் பற்றியோ செந்தூரம் ஜெகதீஷ் பற்றியோ யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் .இதற்காகவே இந்த பதிவு .இது கூகுளில் போய் சேர்ந்து விடும.இனி தமிழில் செந்தூரம் என்று யாராவது டைப் செய்தாலே போதும் இந்த பதிவு கூகுளில் தோன்றும். 

என்னைத் தொடர்பு கொள்ள  சிருஷ்டி 6 புரசை நெடுஞ்சாலை சென்னை 6000007 என்ற முகவரிக்கு எழுதலாம். அல்லது இமெயில் மூலம் இணையலாம். jagdishshahri@gmail.com 
பேஸ்புக்கில் senthuram jagdish



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...