Sunday 31 May 2015

அரிதினும் அரிது கேள் 3 ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா......

இளையராஜா இசையமைத்த தொடக்க கால படங்களில் ஒன்று இளமைக்கோலம். கே.பாக்யராஜ் கதை வசனம் எழுதிய படம். சுமன்,ராதிகா,பிரதாப் ஆகியோர் நடித்தது. குமுதத்தில் எழுதும் தொடரில் அண்மையில் இப்படம் பற்றி பாக்யராஜ் குறிப்பிட்டிருந்தார்.
இப்படத்தில் வச்சபார்வை தீராதடி( ஜேசுதாஸ்) நீ இல்லாத நேரம் ( மலேசியா வாசுதேவன், சுஜாதா) போன்ற பாடல்கள் இனிமையானவை. கேட்க கேட்க மீண்டும் கேட்க தூண்டுபவை. நீ இல்லாத நேரம் பாடலில் இளையராஜாவின் வயலின்களும் இதர இசைக்கருவிகளும் செய்த மாயாஜாலம் மிகச்சிறப்பானது.


       



இவை ஒருபுறமிருக்க இப்படத்தின் உச்சகட்ட இசை இன்பத்தை தரும் பாடல் ஒன்றும் உண்டு. ஸ்ரீதேவி என்வாழ்வில் அருள் செய்ய வா என்ற அந்தப்பாடலை பாடியவர் ஜேசுதாஸ். பாடலாசிரியர் கண்ணதாசன்.

ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே அருள் தெய்வமே
மலர் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா,,,

மானைப் போன்ற கண்கள் இரண்டும் எனைப்பார்க்குமா?
வானுலாவும் மஞ்சள் மேனி மழை சேர்க்குமா...
வீணை தரும் நாதம் துணையாகுமா
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா......

ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்யவா

கோவில் வாசல் தேடித் தேடி அலைபாய்ந்ததேன்
தேவ தேவி உன்னைத் தேடி
மனம் ஓய்ந்ததே
இங்கே உன்னைக் கண்டேன்...நல்ல நேரமே
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா

டண்டண மணியோசை பொங்க
தண்டை தனது தாளம் கொஞ்ச
மிருதுவான மேனியோடும் அமுதமான ஜாடையோடும்
இளைய தோகை அழகு மங்கை
திரண்டு குலுங்கும் இரு கோவைப் போன்ற இதழ்களோடு
சிறந்ததொரு விருந்து என
துணை வருவது
அருள் தருவது
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா......

இப்பாடல் காதலியைக் காண ஏங்கும் ஒருவன் காதலியைப் பாடுவது கடவுளை எண்ணிப் பாடுவதாக காதலியின் தந்தை கற்பனை செய்கிறார். தன் மகளை இவனுக்கு மணமுடித்தால் எப்படியிருக்கும் என்றும் அவர் பாடல் நடுவே கற்பனை செய்வார். தந்தையாக நடித்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம்.
பெண்களை ஏமாற்றும் சுமன். ஒருதலையாக காதலிக்கும் பிரதாப். சுமனிடம் ஏமாறும் ராதிகா என்று முக்கோணக் காதல் கதை.பாக்யராஜூக்கு பெயர் கொடுத்த படம். அவரை இயக்குனராகவும் உயர்த்திய திரைக்கதை அறிவு இப்படத்தில் சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது.ஜேசுதாசின் இளமையான குரல் உச்சரிப்பு இசையை மேம்படுத்துகிறது. அற்புதமான பாடகர் அவர்.
அண்மையில் இப்படத்தின் டிவிடி துல்லியமான பிரிண்ட் வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் மீண்டும் இப்பாடல் எனது இல்லத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...