Wednesday 13 May 2015

அரிதினும் அரிது கேள் 1- நீ வருவாய் என நானிருந்தேன்

சில பாடல்கள் மனத்தின் ஆழத்திற்குள் இழந்த<காதலைப் போல பதிவாகி விடுகின்றன அந்தப் பாடல்களுக்கும் நமது வாழ்ககைக்கும் சம்பந்தம் இருக்கலாம் ஆனால் சம்பந்தமே இல்லாத சில பாடல்களும் அவ்வாறு நிலைப்பதுண்டு. திரைவரலாற்றில் எனக்கு நினைவு தெரிந்து சுமார் 50 60 ஆண்டுகால பாடல்களை அறிவேன் பாகவதர் கிட்டப்பா சின்னப்பா >காலம் தொட்டு இன்றைய பாடல்கள் வரை அனேகமாக எந்தப் பாடல் எந்தப் படம் என்று துல்லியமாகக் கூறும் அறிவை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சியினால் பெற்றுள்ளேன். இதில் ஏராளமான பாடல்கள் மறைந்துவிட்டன. அவை கிடைப்பதே அரிதாக உள்ளன. தேடித் தேடி அலைந்ததில் ஆடியோ வீடியோ என்று பல அரிய பாடல்களைத் தேடி வைத்திருக்கிறேன். இப்போது யூ டியூப்பில் இவை கிடைப்பதும் நிம்மதி .ஆனால் யூடியூப்பில் பாடல் படம் பார்க்கிற ஆள் அல்ல நான். எனக்குப் பாட்டு என்றால் சத்தமாக இசை அதிர அதன் ஒவ்வொரு வயலினும் ஒவ்வொரு மூச்சும் உச்சரிப்பும் கேட்க வேண்டும்.சுஜாதா படத்தில் இடம் பெற்ற பாடல் நீ வருவாய் என ...கல்யாணி மேனன் பாடி எம்.எஸ்.வி இசையமைத்த கண்ணதாசனின் பாடல் இது. நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று இரவெங்கே நிலவெங்கே உன்னை காண்பேனோ என்றும் சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்துக் கொண்டு விரிந்த புருவங்களில் அழகை சுமந்துக் கொண்ட தனிமை மயக்கம்தனை தணிப்பதற்கு வாராயோ ஒருமேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை இந்தப்படம் வெளியான போது தேவி திரையரங்கில் போய் பார்த்தேன். முதல் பாட்டே நீவருவாய்...... படம் தொடங்கி சிறிது நேரத்தில் இந்தப் பாடல் ஏற்படுத்திய மயக்கம் இன்று வரை கலையவில்லை. மெல்லிசை மன்னரின் புத்தம் புதிய இசை வடிவில் இப்பாடல் மனதை வாட்டியது. கல்யாணி மேனனின் குரலும்இக்காட்சியில் நடித்த ராஜலட்சுமியின் மாசு மருவற்ற பேரழகும், சரிதாவின் உதட்டுச் சுழிப்புடன் கூடிய எள்ளல் புன்னகையும் பாடலுடன் காட்சியையும் மறக்க முடியாததாக்கி விட்டன. இப்பாடலை படத்தில் எழுதியவரான கவிஞர் வேடம் கொண்ட நடிகர் சங்கர்( ஒருதலைராகம்) குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து டவலும் பனியனுமாக வந்து இப்பாடலை மூடிய அறையிலிருந்து வெளியே நின்று கேட்பதாக காட்சி. தமது காதலிக்காக தாம் எழுதிய பாடலை தமது காதலியே தமது சகோதரியிடம் பாடிக் காட்டுவதை மெய்மறந்து ரசிப்பார் கவித்துவம் பாடலில் இருந்து காட்சி வரை பாய்ந்தது

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...