தனியே செல்லும் பயணி
இந்த வரியை எங்கே படித்தேன் என்று தோன்றவில்லை. ஏனோ இது என் ஆழ்மனத்தில் இருந்து அடிக்கடி மேல் விளிம்புக்கு வந்து திரும்பிச் செல்கிறது. வாழ்க்கையில் நான் தனிமையில் தான் அதிககாலம் வாழ்ந்திருக்கிறேன். உறவுகள் நட்புகள் இருந்தாலும் கூட கூட்டத்திலும் தனிமையே உணர்ந்திருக்கிறேன். அரங்குகளில் தனியாக அமர்ந்திருக்கிறேன். கிடங்குத் தெரு நாவலில் சல் அகேலா என்ற முகேஷின் பாடல் ஒன்றை நாவலின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டேன். சல் அகேலா என்றால் தனியாக செல்
தனியாக செல் தனியாக செல்
உன் திருவிழாக் கூட்டம் பின்னால் நின்று விட்டது
நீ தனியாக செல்
இதே போல் ஆலங்குடி சோமுவும் இரவும் வரும் பகலும் வரும் பாடலில்
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் என எழுதியுள்ளார்.
இந்த தனிமையைப் பற்றி ஒருநெடுங்கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று தோன்றுகிறது. இதே தலைப்பில் இக்கதையை நீங்கள் ஏதேனும் ஒரு பத்திரிகையில் படிக்க நேரிடும் போது எனக்கு நாலு வரி எழுதிப் போட மறக்காதீர்கள்.
No comments:
Post a Comment