கடந்த ஜூன் 30ம் தேதி பெரியார் திடலில் முனைவர் ம. எத்திராசு என்ற கவிஞர் தமிழ்மணவாளன் தமது மகன் விமலாதித்தன்- மணமகள் கா.நித்யகுமாரி திருமண விழாவை இலக்கிய விழாவாகவே நடத்தி விட்டார்.
வாசலில் வரவேற்கும் பேனர்களில் பெண் படைப்பாளர்களின் முகங்கள், இலக்கிய அமைப்புகளின் பட்டியல் என்றும் உள்ளே அரங்கில் ஒளித்திரையிலும் இலக்கிய எழுத்தாள திரைப்பட நண்பர்களுக்கு வரவேற்பு
வாசலிலேயே நண்பர்- கவிஞரும் கல்வெட்டு பேசுகிறது இதழின் ஆசிரியருமான சொர்ணபாரதி தமது வாழ்த்து மடலுடன் வரவேற்றார். உள்ளே நுழைந்தால் திருமணவிழாவா இலக்கிய விழாவா என வியப்பூட்டும் இலக்கியமுகங்கள்
சூர்யராஜன், நிமோஷிணி, இளம்பிறை, பழனிபாரதி, வே.எழிரசு, பா. உதயகண்ணன். மணிஜி, அமிர்தம் சூர்யா, எஸ்.சண்முகம், அழகிய சிங்கர், ரவிசுப்பிரமணியம், க்ருஷாங்கினி, பாரவி, என திரும்பிய இடமெல்லாம் இலக்கிய நண்பர்கள்.
இசை கச்சேரி அருமை .பழைய விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களை சன் ஸ்ருதி இசைக்குழுவினர் வாத்தியங்களில் இசைத்து மயங்க வைத்தனர்.
நீண்ட வரிசையில் வாழ்த்தும் பரிசும் வழங்க நின்றிருந்த கூட்டம் தமிழ்மணவாளன் அன்புக்கு சாட்சியமாக இருந்தது. மாப்பிள்ளையுடன் கைகுலுக்கி வாழ்த்தும் போது சொன்னேன் உன் தந்தையைப் போல் நீயும் அன்பை சம்பாதித்து வை என்று.
பெரியார் திடல் திருமணம் என்பதால் அதுவும் சனிக்கிழமை மாலை என்பதால் பிரியாணி இருக்கும் எனநினைத்துவிட்டேன். மனைவியையும் விக்கியையும் அழைத்துச் செல்லவில்லை.விக்கி பிரியாணி இருந்தால் போன் பண்ணு வந்துவிடுவேன் என்றான். நான் அசைவத்தை அதிகமாக விரும்பி உண்ண மாட்டேன்.
ஆனால் திருமணத்தில் வழக்கமான சைவ உணவுதான். ருசி ஓகேதான் என்ற போதும் எனக்கு உள்ள சர்க்கரை , பல்வலி போன்ற பிரச்சினைகளால் குறைவாகத்தான் சாப்பிட்டேன்.
சூர்யராஜன் சாப்பிடாமலேயே சென்றுவிட்டார். ஏன் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
கடைசியில் உணவை முடித்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீமையும் வெத்தலையையும் ஏக்கத்துடன் பார்த்தபடி வீட்டுக்குத்திரும்பினேன்.
வாசலில் வரவேற்கும் பேனர்களில் பெண் படைப்பாளர்களின் முகங்கள், இலக்கிய அமைப்புகளின் பட்டியல் என்றும் உள்ளே அரங்கில் ஒளித்திரையிலும் இலக்கிய எழுத்தாள திரைப்பட நண்பர்களுக்கு வரவேற்பு
வாசலிலேயே நண்பர்- கவிஞரும் கல்வெட்டு பேசுகிறது இதழின் ஆசிரியருமான சொர்ணபாரதி தமது வாழ்த்து மடலுடன் வரவேற்றார். உள்ளே நுழைந்தால் திருமணவிழாவா இலக்கிய விழாவா என வியப்பூட்டும் இலக்கியமுகங்கள்
சூர்யராஜன், நிமோஷிணி, இளம்பிறை, பழனிபாரதி, வே.எழிரசு, பா. உதயகண்ணன். மணிஜி, அமிர்தம் சூர்யா, எஸ்.சண்முகம், அழகிய சிங்கர், ரவிசுப்பிரமணியம், க்ருஷாங்கினி, பாரவி, என திரும்பிய இடமெல்லாம் இலக்கிய நண்பர்கள்.
இசை கச்சேரி அருமை .பழைய விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களை சன் ஸ்ருதி இசைக்குழுவினர் வாத்தியங்களில் இசைத்து மயங்க வைத்தனர்.
நீண்ட வரிசையில் வாழ்த்தும் பரிசும் வழங்க நின்றிருந்த கூட்டம் தமிழ்மணவாளன் அன்புக்கு சாட்சியமாக இருந்தது. மாப்பிள்ளையுடன் கைகுலுக்கி வாழ்த்தும் போது சொன்னேன் உன் தந்தையைப் போல் நீயும் அன்பை சம்பாதித்து வை என்று.
பெரியார் திடல் திருமணம் என்பதால் அதுவும் சனிக்கிழமை மாலை என்பதால் பிரியாணி இருக்கும் எனநினைத்துவிட்டேன். மனைவியையும் விக்கியையும் அழைத்துச் செல்லவில்லை.விக்கி பிரியாணி இருந்தால் போன் பண்ணு வந்துவிடுவேன் என்றான். நான் அசைவத்தை அதிகமாக விரும்பி உண்ண மாட்டேன்.
ஆனால் திருமணத்தில் வழக்கமான சைவ உணவுதான். ருசி ஓகேதான் என்ற போதும் எனக்கு உள்ள சர்க்கரை , பல்வலி போன்ற பிரச்சினைகளால் குறைவாகத்தான் சாப்பிட்டேன்.
சூர்யராஜன் சாப்பிடாமலேயே சென்றுவிட்டார். ஏன் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
கடைசியில் உணவை முடித்துக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீமையும் வெத்தலையையும் ஏக்கத்துடன் பார்த்தபடி வீட்டுக்குத்திரும்பினேன்.
No comments:
Post a Comment