Sunday 15 July 2018

மெரீனா




ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரைகளில் இரண்டாவது இடம் என்று புகழ் பெற்றது நம்ம சென்னையின் மெரீனா கடற்கரை. 
அண்மையில் புனேயில் இருந்து வந்த சில உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் மெரீனாவுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள போன போது ஏற்பட்ட அனுபவம் உகந்ததாக இல்லை.
எங்கு நோக்கினும் மணல் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள், எஞ்சிய உணவுகள், பாட்டில்கள், மலம் 
சிறுவயதில் மண்ணில் தேடித் தேடி கிளிஞ்சல்களைப் பொறுக்கிய நினைவு வந்தது. இனி கிளிஞ்சல்கள் கூட இருக்காது.

மும்பையின் ஜூஹூ கடற்கரையும் இதுபோலத்தான் இருந்து, ஆனால் தொடர் முயற்சியின் காரணமாக இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது என்றார் உறவினர்.
உணவகங்கள், கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு கடற்கரையின் சுத்தம் பேணப்படுகிறது. அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களை அழைத்து கடற்கரையை சுத்தம் செய்ய மும்பை மாநகராட்சி நிர்வாகம் பிரச்சாரம் செய்கிறது. மாணவர்களையும் சமூக நல ஆர்வலர்களையும் இயற்கை காவலர்களையும் அழைத்து குப்பைகளை அள்ளுகிறது.
இந்த முறையை ஏன் சென்னை மாநகராட்சி பின்பற்றவில்லை என்று தெரியவில்லை. மிகப்பெரிய திறந்தவெளி குப்பைத்தொட்டியாக காட்சியளித்த மெரீனாவை ஏக்கத்துடன் பார்த்தபடி திரும்பினேன்.
அண்மையில் ஜல்லிக்கட்டு  போன்ற இத்துப்போன பழைமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களால் போலீ்ஸ் கெடுபிடியும் அதிகமாக உள்ளது. வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சிரமப்பட்டு காரை நிறுத்த இடம் பிடித்தோம்.

அங்கு வி்ற்பனை செய்யப்பட்டவற்றில் விவேகானந்தா காபி அற்புதம். ஆனால் வடமாநிலத்தவரிடம் எங்கள் கிராமத்து உணவு என பீற்றிக் கொண்டு வாங்கிக் கொடுத்த வரகு புட்டு யாரையும் கவரவில்லை. ருசியும் இல்லை விலையும் அதிகம். அரிசி புட்டு இல்லையாம். வடகு, கம்பம் போன்ற புட்டு விற்ற நபரைச் சுற்றி நூறு பேர் காத்திருந்தனர். அரை மணி நேரம் காத்திருந்து வாங்கிய கேழ்வரகு புட்டு 40 ரூபாயை தண்டமாக்கி விட்டது.

எப்படியெல்லாம் அழிக்கிறார்கள் எங்கள் மெரீனாவை.....

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...