Saturday 14 July 2018
சந்திப்பு -கி.அ.சச்சிதானந்தம்
அஞ்சலி / சந்திப்பு
கி.அ.சச்சிதானந்தம
பார்ப்பதற்கு எளிமையாக காட்சியளிக்கும் இலக்கியவாதி அவர். மௌனியின் கதைகளை முதன் முதலாக அவர் தான் பதிப்பித்தவர். மௌனி, கநாசு போன்ற ஜாம்பவான்களுடன் நேராக பழகும் வாய்ப்பை பெற்றவர்.
எந்த ஒரு பெரிய மேதையும் இப்படித்தான் எளிமையாகக் காட்சியளிக்கிறார்கள். இவர்களின் எளிமையைக் கண்டு நாம் இவர்களை சாதாரண மனிதர்களாக எண்ணி ஏமாந்துவிடுகிறோம். ஆனால் இவர்கள் அசாதாரணமானவர்கள், அவர்கள் தாம் தமிழையும் இலக்கியத்தையும் வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள். சச்சிதானந்தம் அத்தகைய ஒரு எளிய மனிதர். எனக்கு எம்.வி.வெங்கட்ராமை பார்க்கும் போதும் சிசுசெல்லப்பாவை பார்க்கும் போதும் , வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோரை பார்க்கும் போதும் தோன்றியதுதான்.....சச்சிதானந்தம் போன்றோரை பார்க்கும் போதும் ஒரே அலைவரிசையில் எண்ணுவது இதுதான். அவர்களைை தொட்டு வணக்கம் சொல்ல வேண்டும்.ஏற்கனவே சச்சிதானந்தத்தை திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் பலமுறை பார்த்திருக்கிறேன். கோபாலபுரத்தில் உள்ள அவர் வீட்டிற்கும் ஒருமுறை சென்றிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் புதையல் நிகழ்ச்சிக்காக மௌனியைப் பற்றி அவரிடம் ஒரு நீண்ட பேட்டியும் எடுத்திருக்கிறேன்.
இம்முறை சந்தித்த போது வயதால் தளர்ந்திருந்தார். வண்டியில் உட்கார சிரமப்பட்டார். அருகில் உள்ள அச்சகத்தில் கொண்டு போய் விடச் சொன்னார். அச்சகத்தில் வங்க எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கை சுயசரிதத்தை அச்சிடக் கொடுத்தாராம். அவரே பதிப்பிக்கிறாரா என அறிய முற்பட்ட போது புத்தகம் பதிப்பித்து பட்ட கடன்களையும் , பரண்களில் அடுக்கி வைத்த புத்தகக் கட்டுகளையும் ,குடும்பத்தில் பட்ட வேதனைகளையும் சுருக்கமாக சொன்னார். வயதாயிருச்சு இனி அந்த மாதிரி தவறெல்லாம் செய்ய முடியாது என்று சிரித்தார். இப்போதுதான் பிரிண்டிங் ஆன் டிமாண்ட் சிஸ்டம் வந்துருக்கே என்றேன். ஒரு பிரதி கூட அச்சிடலாம் என்று அவருக்கு புரிய வைத்தேன். என்ன செலவாகும் என விசாரித்தார்.கிடங்குத் தெரு மறுபதிப்புக்காக நான் விசாரித்த தகவலை கூறினேன். 160 பக்கங்கள் புத்தகம் 100 பிரதிகள் எனில் 4 ஆயிரம் ரூபாய் ஆகலாம் என கூறினேன். அப்படியா ....விசாரிக்கணும் என்றார்.
எழுத்தாளனே பதிப்பாளனாகவும் அவனே தனது நூல்களின் சேல்ஸ்மேன் ஆகவும் வாழும் பரிதாபம் குபரா காலம் முதல் சச்சிதானந்தம் காலம் வரை மாறவே இல்லை.
கொரோனாவால் 3.10.2020 காலையில் மறைந்துவிட்ட சச்சிதானந்தத்திற்கு என் மனப்பூர்வமான அஞ்சலி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
A love song is a song about romantic love, falling in love, heartbreak after a breakup, and the feelings that these experiences bring. A comprehensive list of even the best known performers and composers of love songs would be a large order. For watch latest Romantic songs view this video https://www.youtube.com/watch?v=4KbU9BVcq54
ReplyDelete