கண்ணெல்லாம் உன் வண்ணம்.....
சிவகுமார் நடித்த சில படங்களின் பாடல்கள் மிகச்சிறப்பானவை. சீர் வரிசை படத்தில் கண்ணனை நினைக்காத நாளில்லையே பாட்டும், உறவு சொல்ல ஒருவனில் கேளு பாப்பா ஆசையின் கதையை பாட்டும் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படத்தில் ஒரு காதல் தேவதை பாட்டும் இனிமையானவை. பத்ரகாளி,சிட்டுக்குருவி, கவிக்குயில், அன்னக்கிளி பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவை
இதில் சில படங்கள் இப்போது கிடைப்பதில்லை. இதன் பாடல்களும் மறைந்து விட்டன. ஆனால் சில பாடல்களை எப்போதாவது எங்கேயாவது கண்டுபிடிக்க நேரும் போது பரவசம் ஏற்படுகிறது. பொதுவாக யூடியூப்பிலும் இணையவெளியிலும் படங்களையும் பாடல்களையும் தேடுபவனல்ல நான். படைப்பாளியின் உரிமம் பெறாமல் பதிவேற்றம் செய்வதில் உடன்பாடு இல்லை. எனவேதான் இந்தப் பகுதியிலும் பாடல்களின் யூடியூப் இணைப்பை நான் வெளியிடுவதில்லை. கிடைக்காத பாடலை கண்டுபிடிக்க யூடியூப் மிகப்பெரிய உதவி என்பதையும் நான் மறுக்கவில்லை. திருட்டு சிடியை கொள்கையளவில் எதிர்க்கும் போதும் பல உலகத் திரைப்படங்களை வேறு எப்படி பார்க்க முடியும் என்று தெரியவில்லை.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் கண்மணி ராஜா படத்தில் இடம் பெற்ற காதல் விளையாட கட்டிலிடு கண்ணே பாடலும் எனக்குப் பிடித்தமானவை. வி.குமார் இசையமைத்த பாடல் இது. மெல்லிசை மன்னரின் சாயலில் பாடல்களை அமைத்தவர் குமார். அதனால் விகுமாரின் பல பாடல்களை ரசிகர்கள் மெல்லிசை மன்னரின் பாடல்களாக பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர். இருகோடுகள், வெள்ளிவிழா, நூற்றுக்கு நூறு போன்ற படங்களில் எல்லாம் ஒலித்தவை வி.குமாரின் பாடல்கள்தான். காதோடுதான் நான் பாடுவேன், நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும், உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா , போன்ற குமாரின் பொன்னான பாடல்கள் வரிசையில் இந்தப்பாடலையும் இணைக்கலாம்.
படம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
பாடலாசிரியர் கண்ணதாசன்
பாடியவர்கள் ஸ்வர்ணா ,எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை வி.குமார்
நடித்தவர்கள் சிவகுமார் ஜெயசித்ரா
பால் மணம் பூ மணம் பாவை மணம்
பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கோதையின் பூவுடல் கோகுலம்
என்றே கண்ணன் விளையாட
காலம் என்ன நேரம் என்ன
கண்ணே கொஞ்ச வா (பால் மணம்)
வாடைதான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்...
கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ
கண் பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ..
பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண்படும் என்றா எண்ணும்...
எல்லாம் இன்று தந்தால்
நாளை மிச்சம் வேண்டுமே... (பால் மணம்)
கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்...
சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை...
ஆனந்த ராகம் ஒன்று..ஆரம்பம் ஆகும் அன்று..
ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே (பால் மணம்)
சிவகுமார் நடித்த சில படங்களின் பாடல்கள் மிகச்சிறப்பானவை. சீர் வரிசை படத்தில் கண்ணனை நினைக்காத நாளில்லையே பாட்டும், உறவு சொல்ல ஒருவனில் கேளு பாப்பா ஆசையின் கதையை பாட்டும் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படத்தில் ஒரு காதல் தேவதை பாட்டும் இனிமையானவை. பத்ரகாளி,சிட்டுக்குருவி, கவிக்குயில், அன்னக்கிளி பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவை
இதில் சில படங்கள் இப்போது கிடைப்பதில்லை. இதன் பாடல்களும் மறைந்து விட்டன. ஆனால் சில பாடல்களை எப்போதாவது எங்கேயாவது கண்டுபிடிக்க நேரும் போது பரவசம் ஏற்படுகிறது. பொதுவாக யூடியூப்பிலும் இணையவெளியிலும் படங்களையும் பாடல்களையும் தேடுபவனல்ல நான். படைப்பாளியின் உரிமம் பெறாமல் பதிவேற்றம் செய்வதில் உடன்பாடு இல்லை. எனவேதான் இந்தப் பகுதியிலும் பாடல்களின் யூடியூப் இணைப்பை நான் வெளியிடுவதில்லை. கிடைக்காத பாடலை கண்டுபிடிக்க யூடியூப் மிகப்பெரிய உதவி என்பதையும் நான் மறுக்கவில்லை. திருட்டு சிடியை கொள்கையளவில் எதிர்க்கும் போதும் பல உலகத் திரைப்படங்களை வேறு எப்படி பார்க்க முடியும் என்று தெரியவில்லை.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் கண்மணி ராஜா படத்தில் இடம் பெற்ற காதல் விளையாட கட்டிலிடு கண்ணே பாடலும் எனக்குப் பிடித்தமானவை. வி.குமார் இசையமைத்த பாடல் இது. மெல்லிசை மன்னரின் சாயலில் பாடல்களை அமைத்தவர் குமார். அதனால் விகுமாரின் பல பாடல்களை ரசிகர்கள் மெல்லிசை மன்னரின் பாடல்களாக பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர். இருகோடுகள், வெள்ளிவிழா, நூற்றுக்கு நூறு போன்ற படங்களில் எல்லாம் ஒலித்தவை வி.குமாரின் பாடல்கள்தான். காதோடுதான் நான் பாடுவேன், நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும், உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா , போன்ற குமாரின் பொன்னான பாடல்கள் வரிசையில் இந்தப்பாடலையும் இணைக்கலாம்.
படம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
பாடலாசிரியர் கண்ணதாசன்
பாடியவர்கள் ஸ்வர்ணா ,எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை வி.குமார்
நடித்தவர்கள் சிவகுமார் ஜெயசித்ரா
கண்ணெல்லாம் உன் வண்ணம்இந்தப் படத்தில் மற்றொரு இனிமையான பாடலும் இடம் பெற்றுள்ளது .இந்தப் பாட்டிலும் எஸ்.பி.பியின் குரல் கொஞ்சுகிறது. கூடவே பி.சுசிலாவின் குரல் சந்தனத்துடன் குங்குமம் போல் சேர்ந்து மணக்கிறது. விகுமாரின் பாடல்கள் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்கள் போல கருதப்படுவது போலவே வாலியின் பாடல்கள் கண்ணதாசன் பாடல்கள் போல கருதப்படுவதுண்டு. ஆனால் இந்த பாடல்கள் வாலியா கண்ணதாசனா என்ற குழப்பம் எனக்கும் உண்டு. படத்தின் டைட்டிலைப் பார்த்தால் கண்டுபிடிக்கலாம் என்றாலும் இரண்டு பேரும் பாட்டு எழுதிய படங்களில் சிக்கல் நீடிக்கிறது. ஆயினும் சில இணைய தளங்களில் தேடிப் பார்த்து இந்த இரண்டு பாடல்களும் கண்ணதாசன் எழுதியவைதான் என்று நான் முடிவுக்கு வந்தேன். யாராவது தவறு என சுட்டிக்கட்டினால் திருத்திக் கொள்வேன்.
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ
வா...வா வா...வா வா...வா
எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா
மாந்தளிர் உடல் தளதளவென
மாதுளம் கனி பளபளவென
நான் தொடவரும் வடிவழகென வா வா
பூங்கொடி இடை தொடு தொடுவென
பூவிதழ் சுவை கொடு கொடுவென
நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா
ஆ...நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
நீயொரு பாதி தந்தால்
நானும் ஓர் பாதி உண்டு
தந்ததோ நூறு என்றால்
என் பங்கும் நூறு உண்டு
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
எங்கெங்கு நீ அங்கங்கு நான்
நீயின்றி நானில்லை கண்ணா
நீயின்றி நானில்லை கண்ணா
சேய் பிறந்தது புது நிலவென
வாய் திறந்தது பனி மலரென
நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே
தேன் மழலையின் குறுநகையொரு
பூங்கவிதையின் மணிமுடியென
தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா
ஆ...தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தென்றலே நீ வளர்க
தெய்வங்கள் வாழ்த்துரைக்க
தந்தை போல் பேர் விளங்க
தாய் உள்ளம் தான் மயங்க
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா
பால் மணம் பூ மணம் பாவை மணம்
பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கோதையின் பூவுடல் கோகுலம்
என்றே கண்ணன் விளையாட
காலம் என்ன நேரம் என்ன
கண்ணே கொஞ்ச வா (பால் மணம்)
வாடைதான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்...
கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ
கண் பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ..
பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண்படும் என்றா எண்ணும்...
எல்லாம் இன்று தந்தால்
நாளை மிச்சம் வேண்டுமே... (பால் மணம்)
கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்...
சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை...
ஆனந்த ராகம் ஒன்று..ஆரம்பம் ஆகும் அன்று..
ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே (பால் மணம்)
No comments:
Post a Comment