Monday 12 October 2015

அஞ்சலி -மனோரமா

 ஆச்சி என்று திரையுலகில் அனைவராலும் மதிக்கப்படுபவரான மனோரமா காலமானார் .ஆரம்பத்தில் நகைச்சுவையாகவும் பின்னர் பண்பட்ட குணச்சித்திர நடிகையாகவும் கதாநாயகியாக அல்லாமல் அவளின் சேடியாகவே தோன்றி பல நேரங்களில் முக்கியப் பாத்திரங்களையே விழுங்கி ஏப்பம் விட்டவர் மனோரமா.
சிறிய வயதில் என் பாட்டி திநகரில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு அழைத்துப் போனார். இளம் பிராயத்தில் சிவாஜி எனக்கு பிரமிக்க வைத்த நடிகர். ஞான ஒளி, பாபு , பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களில் சிவாஜியை மெய் மறந்து ரசித்திருக்கிறேன். சிவாஜி வீட்டுக்குப் போன போது அவர் படப்பிடிப்புக்காக புறப்பட்டு போய் விட்டார். என் பாட்டி அழைத்துச் சென்ற நோக்கமே என்னைக் காட்டி படிப்புக்கு பணம் கேட்பதுதான். அந்தப் பணத்தை அவர் சீட்டு கட்டவும் இதர பல செலவுகளுக்கும் பயன்படுத்துவார். அதில் எனக்கும் நாலைந்து ரூபாய்கள் கிடைக்கும். அது என் சினிமா பார்ப்பதற்கான காசு. சிவாஜி வீட்டுக்குப் பிறகு நாங்கள் மனோரமா வீட்டுக்குப் போனோம். மனோரமாவை அப்போது மட்டும் நேரில் பார்க்க முடிந்தது. நடுத்தர வயதில் இருந்தார். மங்களமாக சிரித்தார். பாட்டிக்கு அள்ளி தானம் தந்தார். அவர் மகன் பூபதியை அறிமுகம் செய்தார். அவர் என்ன பேசினார் என நினைவில் இல்லை.
தொடர்ச்சியாக  திரைப்படங்களில் மனோரமாவின் நடிப்பை பின்தொடர்ந்து வந்திருக்கிறேன்
மனோரமாவை நகைச்சுவை நடிகையாகவும் பார்க்கலாம் குணச்சித்திர நடிகையாகவும் பார்க்கலாம். எப்படி பார்த்தாலும் அவர் ஆல் ரவுண்டர்தான். ரவுண்டி கட்டி ஆடும்போதும் சரி அழுது வடியும் போதும் சரி ரசிகர்களை கட்டிப் போட்டவர்தான் ஆச்சி
அபூர்வ சகோதரர்களில் கமலுடன் போட்டி போட்டு ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா
ஆச்சியின் வெற்றிடம் நிரப்பமுடியாததுதான்.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...