Thursday 18 June 2015

அரிதினும் அரிது கேள்- 7 நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா.......

நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா...... செந்தூரம் ஜெகதீஷ் ஒரு பெண்ணிடத்தில் காதலைக் கூறும் பாடல் இது. ஆண் தனது காதலை பெண்ணிடம் கூறும் போது அது கவிதையாக மலர்கிறது. கண்ணதாசன்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்-விஸ்வநாதன் காம்பினேஷனில் பல அற்புதமான பாடல்கள் பிறந்துள்ளன. அவர்கள் படத்தில் அங்கும் இங்கும் பாதை உண்டு, ஜூனியர் ஜூனியர் இருமனம் கொண்ட திருமண வாழ்வில், தில்லுமுல்லு படத்தில் ராகங்கள் பதினாறு, நிழல் நிஜமாகிறது படத்தில் கம்பன் ஏமாந்தான், அவள் ஒரு தொடர்கதையில் கடவுள் அமைத்து வைத்த மேடை, நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊரு சிங்காரி, காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல்மனம் நோகும் வரை, ... என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....அதில் குறிப்பாக கே.பாலசந்தர் படங்களில் இந்த காம்பினேஷன் சிறப்பான கவனம் பெற்றது. அதே போன்று ஜேசுதாஸ்-விஸ்வநாதன்- கண்ணதாசன் காம்பினேஷனையும் சொல்லலாம், எஸ்.பி.பி. பாடிய கண்ணதாசன் பாடல்களில் மெல்லிசை மன்னர் இசையமைத்த இனிய பாடல் ஒன்று பட்டினப்பிரவேசம் படத்தில் இடம்பெற்றுள்ளது.படத்தில் இப்பாடலுக்கு நடித்தவர்கள் நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் சிவச்சந்திரன், நடிகை ஸ்வர்ணா. மற்றும் ஒரு வயலின் பாலசந்தர் படங்களில் அஃறிணைகளும் பாத்திரமாக இடம்பெறுவதுண்டு. புதுப்புது அர்த்தங்களில் நடிகர்கள் டைட்டிலில் இவர்களுடன் சாலிடர் டிவி என்று குறிப்பிட்டிருப்பாா்.அவர்கள் படத்தில் அற்புதமான ஒரு பொம்மை நடித்திருக்கும். மூன்று முடிச்சு படத்தில் கடிகாரம், அரங்கேற்றம் படத்தில் கொட்டு மேளம். மனிதர்களால் வெளிப்படுத்த முடியாத சில உணர்வுகளை அஃறிணைகள் மூலமாக வெளிப்படுத்துவது பாலசந்தரின் உத்தி வயலின் வாசித்தபடி ஸ்வர்ணா தனது சோகம் தேங்கிய கண்களால் சிவாவைப் பார்க்க சிவசந்திரன் எஸ்பி.பியின் குரலில் பாடும் இந்தப் பாடல் காலம் கடந்து நிற்கும் மெல்லிசை மன்னரின் முத்துக்களில் ஒன்று வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலை தேன் நிலா எனும் நிலா என் தேவிியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா மானில்லாத ஊரிலே சாயல் கண்ணிலா மீனில்லாத விண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலாஎண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா.. இந்தப் பாடல் லா லா லா லா என்ற பண்ணோடு நிலா நிலா என்றே முடியும். பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன் அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் என தேன் தேன் எனும் முடியும் பாடலையும் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். பாடலை எஸ்.பி.பியுடன் சேர்ந்து வயலினும் பாடியுள்ளதால் இப்பாடலை சோலோ என்றும் சொல்லலாம் டூயட் என்றும் சொல்லலாம். எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன் என்ற இறுதி வரி ஒரு முத்தாய்ப்பு பல்லவியும் முத்தாய்ப்பும் தான் ஒரு மகத்தான பாடலை உருவாக்குகிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...