Sunday 14 June 2015

அரிதினும் அரிது கேள் 6 - வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண......

அரிதினும் அரிது கேள்..6

வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண......

சிவாஜி கணசனும் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக பாசமலரில் நடித்து ரசிகர்களின் கைக்குட்டைகளையும் முந்தானைகளையும் ஈரம் பிழிய வைத்தவர்கள். இவர்கள் காதலர்களாகவும் கணவன் மனைவியாகவும் சில படங்களில் நடித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள அப்போதைய ரசிகர்களுக்கு இயலவில்லை போலும்.அதனால்தான் பிராப்தம் என்ற நல்ல படம் ஒன்று ரசிகர்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது.
திருவருட்செல்வர் படத்தில் ஆதி சிவன் தாழ் பணிந்து நலம் பெறுவோமே எங்கள் ஆதிசக்தி நாயகியின் அருள் பெறுவோமே என்ற பாடலை அவசியம் பாருங்கள் நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்ற பட்டங்கள் சும்மா தரப்படவில்லை என்பது நிரூபணமாகும். இருவரும் Such a lovely pair.
பிராப்தம் இந்திப் படமான மிலனின் தமிழ் ரீமேக்.இப்படத்தை இயக்கியவரும் சாவித்திரிதான்.
இந்தியில் சுனில்தத்தும் நூதனும் நடித்த இப்படம் பல ஜென்மங்களைத் தாண்டி சேரும் காதலர்களைப் பற்றியது.தமிழில் தனுஷ் நடித்து வெளியான அனேகன் அதே போன்ற படம்தான்.
இந்தியில் எல்.வி.பிரசாத் தயாரித்த இப்படம் 1967ம் ஆண்டில் வெளியானது.சுப்பாராவ் இயக்கியது .இசை லட்சுமிகாந்த் பியாரேலால். இப்படத்தில் முகேஷ்-லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
ஹம் தும் யுக் யுக் கே ஏ கீத் மிலன்கே காத்தே ரஹேங்கே என்ற டூயட் பாடல் தமிழில் சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என்று இடம் பெற்றது. தமிழில் பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்கள் டி.எம். எஸ். -பி.சுசிலா

பகவத் கீதை சொன்னது போல் ஆன்மா வேறு பிறவி எடுத்து வருகிறது. ஆன்மா அழிவற்றது. எனவே சொந்தம் தொடர்கதையாகிறது

சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடிச் சென்று இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது...

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான்காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

நிலத்தில் படரும் தளிர்ப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நீலத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன்வண்ணக் கலசம்
பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பது சுகம்தானோ

என்று கவித்துவ நடையுடன் மனதுக்குள் வெள்ளிய நிலவின் பன்னீரைத் தெளித்துச் செல்லும் பாடல் இது. பாடியவர்களின் குரல்கள் தித்திக்கின்றன. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை கொண்டு துடைக்கும் ஒரு தம்பதியின் அந்நியோன்யமும் அன்பும் நம்மை பரவசப்படுத்துகின்றன.
இதே படத்தில் வேறு சில இனிமையான பாடல்களும் உள்ளன. இந்தியில் சாவன்கா மஹினா என முகேஷ்-லதா பாடிய பாடல் தமிழில் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்று டி.எம்.எஸ்- சுசிலா குரலில் ஒலித்தது. இதே போல் தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா என்ற பாடலில் டி.எம்.எஸ் நம்மை உருக வைத்திருப்பார்
மற்றொரு மகத்தான பாடலும் இப்படத்தில் உண்டு. நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறிச்ச ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் பொலிவுண்டு...நேரம் போனால் வாசம் போகும்....வாசம் போனாலும் பாசம் போகாது என்று டி.எம்.எஸ் பாடிய மகத்தான பாடல் இது.

எந்தக் கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில் தான்

என்ற மிகப்பெரிய தரிசனத்தை வழங்கிச் செல்லும் இப்பாடலின் வரி ஒன்றை கரையினில் ஆடும் நாணலே நீ நதியிடம் சொந்தம் தேடுகிறாய் என, கே.பாலசந்தரின் அவர்கள் படத்திலும் கண்ணதாசன் பயன்படுத்தினார்.
பட்டும் பூவும் கட்டி வைத்த பச்சைக்கிளி ஒன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு
என தனது காதலியை இன்னொருவருக்கு தாரை வார்க்கும் காதல் தவிப்பை கவியரசர் வடித்திருக்கிறார்.

பிராப்தம் படத்தின் சுமாரான பதிப்பு டிவிடி ஒன்று ஜிசி என்ற கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் வெளியான படம் இன்று பார்க்க முடியாததாக இருப்பினும் இதன் பாடல்கள் இன்றும் மறுஜென்மம் எடுத்துள்ளன. சாரேகாமாவிலும் யூடியூப்பிலும் இந்தப் பாடல்களைக் கேட்கலாம்.....

பாடியவர்கள் டி.எம். எஸ். -பி.சுசிலா

பகவத் கீதை சொன்னது போல் ஆன்மா வேறு பிறவி எடுத்து வருகிறது. ஆன்மா அழிவற்றது. எனவே சொந்தம் தொடர்கதையாகிறது

சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடிச் சென்று இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது...

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை ஜாடையில் நான்காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும் கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

நிலத்தில் படரும் தளிர்ப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நீலத்தில் மஞ்சள் முகத்தில் ஓடி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன்வண்ணக் கலசம்
பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பது சுகம்தானோ

என்று கவித்துவ நடையுடன் மனதுக்குள் வெள்ளிய நிலவின் பன்னீரைத் தெளித்துச் செல்லும் பாடல் இது. பாடியவர்களின் குரல்கள் தித்திக்கின்றன. செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை முந்தானை கொண்டு துடைக்கும் ஒரு தம்பதியின் அந்நியோன்யமும் அன்பும் நம்மை பரவசப்படுத்துகின்றன.
இதே படத்தில் வேறு சில இனிமையான பாடல்களும் உள்ளன. இந்தியில் சாவன்கா மஹினா என முகேஷ்-லதா பாடிய பாடல் தமிழில் சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்று டி.எம்.எஸ்- சுசிலா குரலில் ஒலித்தது. இதே போல் தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா என்ற பாடலில் டி.எம்.எஸ் நம்மை உருக வைத்திருப்பார்
மற்றொரு மகத்தான பாடலும் இப்படத்தில் உண்டு. நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறிச்ச ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் பொலிவுண்டு...நேரம் போனால் வாசம் போகும்....வாசம் போனாலும் பாசம் போகாது என்று டி.எம்.எஸ் பாடிய மகத்தான பாடல் இது.

எந்தக் கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான்
எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில் தான்

என்ற மிகப்பெரிய தரிசனத்தை வழங்கிச் செல்லும் இப்பாடலின் வரி ஒன்றை கரையினில் ஆடும் நாணலே நீ நதியிடம் சொந்தம் தேடுகிறாய் என, கே.பாலசந்தரின் அவர்கள் படத்திலும் கண்ணதாசன் பயன்படுத்தினார்.
பட்டும் பூவும் கட்டி வைத்த பச்சைக்கிளி ஒன்று
கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு
என தனது காதலியை இன்னொருவருக்கு தாரை வார்க்கும் காதல் தவிப்பை கவியரசர் வடித்திருக்கிறார்.

பிராப்தம் படத்தின் சுமாரான பதிப்பு ஒன்று அண்மையில் ஜிசி என்ற கம்பெனியால் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளையில் வெளியான படம் இன்று பார்க்க முடியாததாக இருப்பினும் இதன் பாடல்கள் இன்றும் மறுஜென்மம் எடுத்துள்ளன.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...