திருச்சியில் கவிஞர் அறிவுமணியை சந்தித்தேன். கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டும் மிகுந்த அன்புடன் வரவேற்று பேசினார். நல்ல மனம் மிக்க மனிதர் அவர். அவருடைய கவிதை வரிகளில் ஒன்று சோற்றுக்கூடையை பசியோடு சுமப்பவர்கள்... இதனை பெரியார்தாசன் தமது கூடட்ங்கள் அனைத்திலும் மேற்கோள் காட்டுவார்.
அறிவுமணி சென்னை புரசைவாக்கத்தில் இருந்தார். பணி நிமித்தமாக திருச்சிக்கு மாறினார். 300 மைல் தூரம் வந்துட்டதால் நான் செத்துப் போனதாக கூட ஒரு பெண் கவிஞர் யாரிடமோ பேசினார் என வருத்தப்பட்டார். அவருக்கு போன் போட்டு ஹலோ நான் அறிவுமணி ஆவி பேசுகிறேன். இன்று இரவு உங்களை தாக்க காலன் வரப்போகிறான் என்று சொல்லுங்கள் மணி இதற்காக போய் வருந்தலாமா...என்றேன்.
வாழ்க்கையில் மிகப்பெரிய பாடலாசிரியராக வேண்டும் .கவிதைகளுக்காக சிறுபத்திரிகை நடத்த வேண்டும். கவிஞர்களுடன் பேச வேண்டும் ,எப்போதும் கவிஞனாக மட்டுமே அறியப்பட வேண்டும் என்பது போன்ற அறிவுமணியின் கனவுகள் இன்று வரை நிறைவேறவில்லை. வயது 66 ஆகிவிட்டதாக கூறினார். முதுமை ,மரண பயம் குடும்பப் பிரச்சினைகள் அவர் மனத்தை வாடடுகின்றன.. பெரியார்தாசன், பிரபஞ்சன், அப்துல் ரகுமான், இன்குலாப், நந்தா என தாம் நேரித்த மனிதர்களின் மரணத்தை எண்ணி கலங்குகிறரா். முமேத்தா, சூர்யராஜன், வண்ணை வளவன், விஜயகுமார், ( நிமோஷிணி) போன்றவர்களுக்கு வயதாகி விட்டதாக வும் வருந்துகிறார். ஆர்.மோகனரங்கன் போன்ற காணாமல் போன சிலரைப் பற்றியும் விசாரிக்கிறார். தன் சொந்த பிரச்சினைகள் ஒருபுறம் அழுத்தும் அழுத்தத்தால் ஓரிருமுறை கண்கலங்கியதையும் பார்த்தேன். முடிந்தவரை நம்பிக்கையான சொற்களையே பேசி சமாதானம் செய்து திரும்பினேன். மாலையில் ரயிலில் சென்னை திரும்பும் போது அவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு .....உங்கநல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ஜெகதீஷ் என வாழ்த்தி வைத்து விட்டார். எனக்கு அழுகை வந்தது.
No comments:
Post a Comment